புதன், 18 ஏப்ரல், 2018

750 PP:நாமக்கல் DEEO கோரிய திருச்சி தணிக்கை தெளிவுரை வந்தால் அது 12 மாவட்டங்களுக்கும் பொருந்தும் முதல்வர் தனிப்பிரிவு பதில்...

GPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை 7.6% என அரசு அறிவிப்பு...

2017 - 2018 பள்ளி வேலை நாட்களும் , சதவிகிதமும்...


பள்ளியின் மொத்த வேலை நாட்கள் 210...

210-100%

209-100%

208- 99%

207-99%

206-98%

205-98%

204-97%

205-97%

204-97%

203-97%

202-96%

201-96%

200-95%

199- 95%

198-94%

197-94%

196-93%

195-93%

194-92%

193-92%

192-91%

191-91%

190-90%

189-90%

188-90%

187-89%

186-89%

185-88%

184-88%

183-87%

182-87%

181-86%

180-86%

179-85%

178-85%

177-84%

176-84%

175-83%

174-83%

173-82%

172-82%

171-81%

170-81%

DEE ~ 2017 - 2018 கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்று இப்போது பணி விடுவிப்பு செய்யப்படாமல் இருக்கும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்...

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ மாவட்ட தேர்தல்15-04-18(ஞாயிறு)~நாளிதழ் செய்திகளில்...

EMIS - புகைப்பட பதிவேற்றம் (Photo updation ) - அடையாள அட்டை (ID Card approval) - மூன்றாம் பாலினைத்தவர் விவரங்கள் சரிபார்த்தல் - 02/04/2018 அன்றைய நிலவரப்படி விவரங்கள்அனுப்புதல்-சார்பு...

தொடக்கக் கல்வி~ 2017-2018 ஆம் கல்வியாண்டு பொது மாறுதலில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் தொடர்ந்து அதே பள்ளியில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள்-பணியிலிருந்து விடுவித்தல், அறிவுரை வழங்குதல் - சார்ந்து...

ஜாக்டோ ஜியோ மே 8 கோட்டை முற்றுகைப்போராட்டம்~ 23-04-2018 முதல் 27-04-2018 வரை தமிழகத்தின் 11 மண்டலங்களில் பிரச்சாரம்…

கோடை விடுமுறைக்கு பிறகே ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது...

 தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.

புதிய பாடத்திட்டப்படி, எப்படி பாடம் நடத்துவது, அதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்பது போன்ற பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.பள்ளி துவங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் பயிற்சி தரலாம் என, முடிவு செய்யப்பட்டுஇருந்தது. ஆனால், 'கோடை விடுமுறையை ரத்து செய்யக் கூடாது' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு பின், புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி அளிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு தவணைகளாக வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...


கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்கள் அளிக்கப்படும். அதாவது, பணிக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகள், பணிக் கொடைகள், விடுப்புகளை பணமாக மாற்றிக் கொள்ளுதல் போன்றவை ஓய்வு பெற்ற உடனேயே வழங்கப்படும்.
இந் நிலையில், கடந்த 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்கள் இரண்டு தவணைகளாக அளிக்கப்படும்.
முதல் தவணையானது, 2017-18-ஆம் நிதியாண்டிலும், இரண்டாவது தவணைத் தொகையானது 2018-19-ஆம் நிதியாண்டிலும் அளிக்கப்படும். ஏற்கெனவே முதல் தவணை அளிக்கப்பட்டிருந்தால், இரண்டாவது தவணையை இந்த மாதத்தில் இருந்தே (ஏப்ரல்) ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதல் தவணையைப் பெறாத ஓய்வூதியதாரர்கள் இரண்டு தவணைகளையும் சேர்த்து மொத்தத் தொகையாக பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஏழாவது ஊதியக் குழு: தமிழகத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அதற்கு முந்தைய தேதி வரையில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதிய பணப் பயன்களை இரண்டு தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியப் பணப்பயன்களும், தொகையும் மிகையளவு மாறுபடும். எனவே, அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெறுவோருக்கு பணப் பயன்களை இரண்டு தவணைகளாக விரைந்து அளித்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.