செவ்வாய், 6 நவம்பர், 2018

தபால் நிலையங்கள் மூலம் பண பரிமாற்றம் -புதிய திட்டம்

டெல்லி: தபால் நிலையங்கள் மூலம் எளிதாக பணம் அனுப்ப உதவியாக மத்திய அரசு இந்திய போஸ்ட் பேமெண்ட் பேங்க் ( India Post Payments Bank - IPPB) என்ற வசதியை உருவாக்கி கொடுத்துள்ளது.


கடந்த 2018 செப்டம்பர் மாதம் இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரை இந்தியா முழுக்க 650 ஐபிபிபி கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுக்க 1.5 தபால் நிலையங்கள், 3 லட்சம் தபால் பணியாளர்கள் இந்த பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். இவர்கள் ஸ்மார்ட் போன்கள், டிஜிட்டல் கருவிகள் உதவியுடன் மக்களுக்கு பண பரிமாற்றத்தில் உதவ போகிறார்கள்.

ஐபிபிபியின் பயன்கள்:

பண பரிமாற்றம்

அரசு திட்டங்களை எளிதாக பெற முடியும்

கட்டணங்கள் எளிதாக செலுத்தலாம்

முதலீடு செய்ய முடியும்

இன்சூரன்ஸ் செய்ய உதவும்

ஐபிபிபி மூலம் சேவைகள் அனைத்தும் வீட்டிற்கே கொண்டு வரப்படும்.

ஐபிபிபி மூலம் மத்திய அரசின் பிரதான மந்திரி பசல் பீமா யோஜனா, பிரதான மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா ஆகிய திட்டங்களில் சேவைகளை எளிதாக பெற முடியும்.

3 தபால் பணியாளர்கள் மக்களுக்கு எளிதாக ஆசு சேவைகளை வழங்க உதவுவார்கள். எல்லா மக்களும், விவசாயிகளும், கிராம நடுத்தர குடும்பங்களும் இதனால் பயன் பெற முடியும். இன்னும் 3 மாதத்தில் இந்த வசதி 1.5 லட்சம் வங்கிகளில் உருவாக்கப்படும்.

டெங்கு காய்ச்சலுக்கு ஆயுர்வேத மருந்து~ மத்திய அமைச்சர் தகவல்...

தொலைதூர கல்வி இயக்ககத்தில் 5 ஆண்டுக்குள் படிப்பை நிறைவு செய்ய சேலம் பெரியார் பல்கலை அறிவுறுத்தல்...

அரசு பள்ளி ஆசிரியர்களின் கியூஆர் கோடு பயன்பாட்டை ஆய்வு செய்ய சிறப்புக்குழு...

குழந்தைகள் பட்டாசு வெடித்தாலும் பெற்றோருக்கு தண்டனை உறுதி ~ சட்ட வல்லுநர்கள் கருத்து...

எலிகளுக்கு கேன்சர் உருவானாலும் செல்போன் கதிரியக்கத்தால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை ~ஆய்வில் தகவல்...

கிராம பகுதிகளில் காஸ்சிலிண்டர் புக் செய்ய பொது சேவை மையங்கள்...

மாசில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் ~ கலெக்டர் அறிக்கை…

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...


திங்கள், 5 நவம்பர், 2018

முன்னறிவிப்பு இன்றி மாணவர்களின் வாசிப்பு திறன் ஆய்வு நடத்த உத்தரவு

பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன் எப்படி: ஆய்வு நடத்த உத்தரவு

எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, வாசிப்பு பயிற்சி அளிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்ததால், பள்ளிகளில் ஆய்வு நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

மத்திய அரசின், தேசிய கற்றல் அடைவுத்தேர்வு(நாஸ்) முடிவுகள், வாசிப்பு பயிற்சியில் தமிழக மாணவர்கள் பின்தங்கியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதனால், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், மாணவர்களை தரம் பிரித்து, வாசிப்பு பயிற்சி அளிக்குமாறு, செப். துவக்கத்தில் இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.
பள்ளி நேரத்தில், கற்றலில் பின்தங்கியோருக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கவும், அக்., இறுதிக்குள், பயிற்சி அளிக்கவும், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இயக்குனர் அளித்த காலஅவகாசம், முடிவடைந்த நிலையில், மாவட்ட வாரியாக, மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. தீபாவளி விடுமுறைக்குப் பின், ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


முன்னறிவிப்பின்றி ஆய்வுஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில்,'பள்ளிகளில் தினசரி வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் எந்தளவுக்கு அதை உள்வாங்கி கொண்டனர் என்பது, ஆய்வின் போது தான் தெரியவரும். முன்னறிவிப்பின்றி பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும்' என்றனர்.