வெள்ளி, 26 ஜனவரி, 2018

4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்...


தமிழகத்தில் உள்ள 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.60 கோடியில் விரைவில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

தலா ரூ.2 லட்சத்தில்...: 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, முதல் கட்டமாக கிராமப்புறங்களில் 3,000 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

ஸ்மார்ட் போர்டு, புரஜெக்டர், ஆடியோ வசதி, டேப்லட் , கணினி, இணையதள இணைப்பு வசதிகள் இருக்கும். ஒவ்வொரு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் குறைந்தபட்சம் 10 டேப்லெட்டுகள் கொண்டதாக அமைந்திருக்கும்.

'இன்டர்நெட்' இணைப்பானது அளவில்லாத 4-ஜி சேவை உடையதாக இருக்கும். ஸ்மார்ட் வகுப்பறையைப் பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தங்களின் ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)பெற...

தங்களின், ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)பெற பின்வரும்
இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் TPF கணக்கு எண் & பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். 

கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு PTPF-ம் 
CPS தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல் (SUFFIX) ஆகும். மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்த சுருக்கச் சொற்களை இடவும். தொடக்க கல்வி துறை PTPF என இடவும்.

Pay Slip

தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின் வழியே தரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத் தரவிறக்க இயலும். 

Annual income statement

இதில், கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள் இருக்காது. ஆனால் ஊதியப் பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும். 

ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவை, ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவை OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின் அவ்விபரங்களை மேற்கண்ட இணைப்பில் காண இயலாது. 

எனவே, அதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும் இணைய இணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை உள்ளீடு செய்து, தங்களின் நிகர ஊதியத் தொகையை அறியலாம். 


ஊதிய அலுவலகச் செயல்பாட்டைப் பொறுத்து முதலில் உள்ள இணைய இணைப்பிலேயே  நமக்குத் தேவையான அனைத்து விபரங்களும் கிடைத்து விடும். 

உண்மைத் தன்மை - இனி CEO அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்...

வருமான வரி பிடித்தம் 80c= 150000(Savings) மற்றும் 80ccd(1)B= 50000 (CPS amount) முதன்மை ஆணையர் இந்திய வருமான வரித்துறை அவர்களின் தெளிவுரை....

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _ கபிலர்மலை ஒன்றியம் - ஒன்றிய செயற்குழுக் கூட்டம் (25/01/2018)~நிகழ்வுகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _ 
கபிலர்மலை ஒன்றியம் (கிளை).

ஒன்றிய செயற்குழுக் கூட்டம்...

இடம்:
 மன்றம் அலுவலகம்,  வெங்கமேடு (வேலூர்).

நாள்:  (25/01/2018 ) மாலை 6 மணியளவில்...

வியாழன், 25 ஜனவரி, 2018

அண்டை மாவட்டமாக இருந்தாலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கிலோ மீட்டர் Radiusக்குள் உள்ள இடங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்ட திருத்திய ஊதிய வீதத்திற்கேற்ப நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி பெறலாம்- RTI தகவல்...

INSPIRE AWARDS 2017-18~நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்...

English Module For Primary Teachers-Phonetic Method-Part 1 Unit 1-6...

குடியரசு தினம்~விளக்கம்...


ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட மன்னர்கள்  இறந்துபோனால், உடனே அவருடைய மகன் மன்னராகிவிடுவார். இதைத்தான் முடியாட்சி அல்லது மன்னராட்சி என்று சொல்லுவார்கள்.

ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று இருந்தார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது என்று சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் நினைத்தார்கள். வாரிசு உரிமை உள்ள மன்னராட்சி முறை கூடாது என்று நினைத்தார்கள். மக்கள் பங்கு கொள்ளும் மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதற்கு நாடு குடியரசாக இருப்பது அவசியம் என்றும் முடிவு செய்தார்கள்.

குடியரசு என்றால் குடிமக்களின் அரசு என்று பொருள். அதாவது மக்களாட்சி என்று அர்த்தம். மக்கள் தங்கள் விருப்பப்படி தேர்தல் மூலம் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. இப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் இந்தியாவும் குடியரசு நாடானது.

ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது .
அரசியல் அமைப்புச் சட்டம் என்பது நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்ட மேதைகள் பலர் சேர்ந்து இதை உருவாக்கினார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். 

இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தின் 6 மையங்களில் எதிர்வரும் 31.01.2018 (புதன்) பிற்பகல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆர்ப்பாட்டம்...

அன்பானவர்களே!வணக்கம்.

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் பொதுக்கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோவில் இணைந்துள்ள  உறுப்பமைப்புகள் தனி சங்க நடவடிக்கைகள்,
வழக்காடுதல் போன்றன மேற்கொள்வது சிறந்தசெயலாகாது என ஏற்படுத்திக்கொண்ட பொதுமுடிவின் அடிப்படையில் ஜாக்டோ-ஜியோபேரமைப்பினையும்,ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் பொதுக் கோரிக்கைகளையும்  வலுப்படுத்திடும் வகையினில்,
கெட்டிப்படுத்திடும் நிலையினில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஜாக்டோ-ஜியோவின் 
பொதுக்கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் அளவில் பொதுப்போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்று வெற்றிபெறச்செய்வதென தொடர்ந்து  செயலாற்றி வருகிறது.

இந்நிலையில் 21.01.2018 அன்று சென்னையில்  கூடிய ஆசிரியர்மன்றத்தின்
மாநிலச்செயற்குழு கீழ்க்கண்ட  இரண்டுஅம்சக்
கோரிக்கைகளை முன்வைத்து   தமிழகத்தின்  
6மையங்களில்
(திருநெல்வேலி,
மதுரை,திருச்சி,
கோயமுத்தூர்,
சேலம் மற்றும் வேலூர்) எதிர்வரும் 31.01.2018 (புதன்)பிற்பகல்  ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதென
முடிவாற்றி உள்ளது.

இரண்டு 
அம்சக்கோரிக்கைகள்:

அ) மிகைஊதியம்  பிரிவு அ மற்றும் ஆ பிரிவு ஆசிரியர் -அரசு அலுவலருக்கு   வழங்கப்படல் வேண்டும்.

ஆ) கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரப்படல்  வேண்டும்.

மேற்கண்ட இரண்டு அம்சக்கோரிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 31.01.2018(புதன்)
05.00 மணியளவில்
பிற்பகல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம நடைபெறுகிறது.

இவ்வார்ப்பாட்டத்தில்   கிருட்டிணகிரி,தருமபுரி ,சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச்
சார்ந்த மாநில ,மாவட்ட,ஒன்றிய,நகரக்கிளைப்பொறுப்பாளர்கள்,
மன்ற முன்னோடிகள் ,
மன்றத்தின் ஆசிரியப்பெருமக்கள் ஆகியோர் பெருந்திரளாய் பங்கேற்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,ஒன்றியப்பொறுப்பாளர்கள்,மன்ற முன்னோடிகள்,ஆற்றல்மிகு ஆசிரியப்பெருமக்கள் சக்திமிக்கதாய் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்பொதுச்செயலாளர்,ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்,தமிழகமேலவையின் முன்னாள் உறுப்பினர் ,பாவலர்அய்யா அவர்களின் வழிகாட்டுதலின் படி நின்று தமிழ்ச்சமுதாயத்திற்க்கு பெருநன்மை தரவல்ல கோரிக்கைகளில்
ஒன்றான  கல்விமாநிலப்பட்டியலுக்கு கொண்டுவரும் ஆர்ப்பாட்டத்தை முழு வெற்றிபெறச்செய்வீர்.
                 நன்றி.
           ~முருகசெல்வராசன்.