வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

வாழ்க்கை போராட்டம் ...


போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது . நாம் பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கிறது . ஏன் நாம் பிறப்பதே ஒரு போராட்டம் தானே . லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு , போராடி தான் நமக்கான இருப்பை , பிறப்பை உறுதி செய்துள்ளோம் .போராட்டத்தில் பிறந்து , போராட்டத்தில் வளர்ந்து , போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை . நாம் இன்று போராட்டமே இல்லாத வாழ்க்கையை மட்டுமே வாழ நினைக்கிறோம் . இது எப்போதும் சாத்தியமில்லை . பிறப்பதற்கே லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான போராட்டத்தில் வெல்ல முடியாதா என்ன ?!

வீதியில் நின்றுநமக்காக போராடுவதும் , நாட்டுக்காக போராடுவதும் 
வீணல்ல;இழிவல்ல.
நம்பிக்கையோடு 
ஜாக்டோ-ஜியோவின் 
சென்னை
தொடர்மறியலில்
பங்கேற்று வெற்றிபெறுங்கள்.
                நன்றி.
       ~முருகசெல்வராசன்.

ஜாக்டோ-ஜியோவின் மூன்றாம் நாள் (23.02.18-வெள்ளி) மறியல் போராட்டத்திற்கு நாமக்கல்மாவட்டத்தின் சார்பிலும்,மாநில அமைப்பின்சார்பிலும் மாநிலத்தலைமைநிலையச்செயலாளர் திரு.பெ.பழனிசாமி(நாமகிரிப்பேட்டை) அவர்கள் கூட்டுத்தலைமை ஏற்கிறார்...

அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்அய்யா அவர்களின் அறைகூவலை 
ஏற்று
ஜாக்டோ-ஜியோவின் 
மூன்றாம் நாள் (23.02.18-வெள்ளி)
மறியல்
போராட்டத்திற்கு 
நாமக்கல்மாவட்டத்தின்சார்பிலும்,மாநில அமைப்பின்சார்பிலும்  மாநிலத்தலைமைநிலையச்செயலாளர் திரு.பெ.பழனிசாமி(நாமகிரிப்பேட்டை) அவர்கள் கூட்டுத்தலைமை ஏற்கிறார்.

எலச்சிப்பாளையம்,வெண்ணந்தூர்,நாமகிரிப்பேட்டை,கொல்லிமலை மற்றும் கபிலர்மலை ஆகிய ஒன்றியங்களிலிருந்து மன்றப்பொறுப்பாளர்கள் சென்னைக்கு படைஎடுத்துள்ளனர்.

ஆசிரியர்-அரசு ஊழியர்களின் பொதுக்கோரிக்கைகளுக்கு அரசாணை பெறும் பெரும்காரியத்திற்காக
சிறை புகும் நாமக்கல்மாவட்ட மன்றத்தின் தியாகசீலர்களை
நான்வணங்குகிறேன்;வாழ்த்துகிறேன்;பாராட்டுகிறேன்;
       மிகுநன்றி          நவில்கின்றேன்.
           ~முருகசெல்வராசன்.
                  🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

ஜாக்டோ~ஜியோ:- சென்னையில் தொடர் மறியல் போராட்டம்-இரண்டாம் நாள் (22-2-18) நிகழ்வுகள்...

வியாழன், 22 பிப்ரவரி, 2018

நாமக்கல் மாவட்டம்~ஆசிரியர் மன்றத்தின் இரண்டாம்நாள்(22-2-18) மறியல் போர் மறவர்கள் பொதுச்செயலாளர் பாவலர்அய்யா அவர்கள் உடன்...

ஜாக்டோ~ஜியோ:- சென்னையில் தொடர் மறியல் போராட்டம்-முதல் நாள் (21-2-18) நிகழ்வுகள்~நாளிதழ் செய்திகள்....

ஜாக்டோ~ஜியோ:- சென்னையில் தொடர் மறியல் போராட்டம்-முதல் நாள் (21-2-18) நிகழ்வுகள்...

புதன், 21 பிப்ரவரி, 2018

கைதாகி காவல் வாகனத்தில் சிறைக்கு அழைத்துச்செல்லப்படும் நாமக்கல் மாவட்டமன்றமறவர்கள்...

நாமக்கல் மாவட்டத்தின் ஆசிரியர் மன்றத்தின் முதல்நாள்(21-2-18) மறியல் போர் மறவர்கள் பொதுச்செயலாளர் பாவலர்அய்யா அவர்கள் உடன்...

தாய்மொழிக்காப்போம்... வளர்ப்போம்...

DSE - BRTE TO BT TEACHER CONVERSION COUNSELLING ANNOUNCED - DIR PROCEEDINGS...