திங்கள், 12 மார்ச், 2018

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அலுவலர்கள் குழு மூலம் பார்வையிடுதல் மற்றும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்புதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

முன்பதிவு ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்ற முடியுமா? ரயில்வேயின் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு...


நம் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட
ரயில்வே டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கு மாற்ற முடியுமா?

இந்த கேள்விக்கு பலருக்கு பதில் தெரியாது. எப்படி மாற்றுவது, அல்லது அதற்கு என்ன வழிமுறை என்பதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.

இதனால், பெரும்பாலானோர் டிக்கெட்டை ரத்து செய்வோம் அல்லது சில நேரங்களில் அதை அப்படியே விட்டுவிடுவோம்.

இந்நிலையில், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு எளிதாக மாற்றிவிட்டு, எந்தவிதமான தொகை பிடித்தமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளும் முறையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்குரிய வழிகாட்டி முறைகளை வெளியிட்டுள்ளது.

1. முக்கிய ரயில் நிலையங்களில் முன்பதிவு நிலையங்களில் இருக்கும் தலைமை கண்காணிப்பாளரே ரயில் டிக்கெட்டை யாருக்கு மாற்ற வேண்டும், பெயரை மாற்ற வேண்டும், இருக்கை, படுக்கையை மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவர்.

2. ஒரு பயணி அரசு ஊழியராக இருந்தால், பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதி அதில் யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்ற வேண்டும் என்பதை தெரிவித்தால், மாற்றித்தரப்படும்.

3. ஒருபயணி தனது முன்பதிவு டிக்கெட்டை தனது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன்,மகள், மனைவி, கணவர் ஆகியோருக்கு மாற்ற விரும்பினால், பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, கடிதம் மூலம் முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தால், டிக்கெட் மாற்றத் தரப்படும்.

4. ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து மாணவர்கள் சுற்றுலா செல்லும் போது, அதில் சில மாணவர்கள் திடீரென வரவில்லை அதற்கு பதிலாக வேறு மாணவர்களை அழைத்துச் செல்லவேண்டும் என்று முடிவு செய்தால். பயணத்தின் 48 மணி நேரத்துக்கு முன்பாக, கல்வி நிறுவனத்தில் இருந்து வேண்டுகோல் கடிதம் பெற்று வந்து முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் கொடுத்து பெயர்மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த முறையில் எந்த மாணவர்களையும் பெயரையும் மாற்றிக்கொள்ளலாம்.

5. ஒரு திருமணத்துக்காக மொத்தமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், பள்ளி , கல்லூரிகளில் என்சிசி, என்எஸ்எஸ், பிரிவு மாணவர்களும் பயணத்துக்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக கடிதம் எழுதிக்கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும்.

இவ்வாறு ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் SSA திட்ட இயக்குனர் ஆய்வு~ பதிவேடுகளை பராமரிக்க CEO உத்தரவு…


அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் குழு ஆய்வு நடத்த உள்ளதால்,
பள்ளி பதிவேடுகள் பராமரிப்பதை உறுதிசெய்து கொள்ளும் படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மார்ச் மூன்றாம் வாரத்தில், திட்ட இயக்குனர் தலைமையில் குழு பார்வை நடக்கவுள்ளது.
இதனால், அனைத்து பள்ளிகளிலும், எட்டு வகை பதிவேடுகள் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். மாணவர்களின் தர முன்னேற்ற நிலை ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து, ஆய்வுக்கூட்டம் நடக்கவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 11 மார்ச், 2018

வருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம்...

09.03.2018 ன்படி பள்ளிவருகை பதிவேட்டின்படி மாணவர் எண்ணிக்கை மற்றும் பள்ளி EMIS- இணையதள பதிவின்படி மாணவர் எண்ணிக்கை, MOBILE APP மூலம் புகைப்படம் பதிவேற்றம், ID Approval குறித்து தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம்...

அரசு பணியாளர்கள் சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கவும்,சங்கம் சார்ந்த செயல்பாடுகளுக்காக சங்க பொறுப்பாளர்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளவும் அனுமதி அளித்து வெளியிடப்பட்ட அரசாணை... (நாள்:27.10.1977)

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி அட்டவனை...


தொடக்க நிலை:

I st batch 16.03.18 , 19.03.18

II nd batch 20.03.18 , 21.0.18

III rd batch 22.03.18 ,23.03.18

உயர் தொடக்க நிலை:

*தமிழ் , ஆங்கிலம்
16.03.18 , 19.03.18

 *கணக்கு
20.03.18 , 21.03.18

*அறிவியல்
22.03.18 , 23.03.18

*சமூகஅறிவியல்
26.03.18 , 27.03.18

மூன்றாம் பருவ தேர்வு~ அட்டவணை வெளியீடு…


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும், ஏப்., 9ஆம் தேதி தேர்வுகள் ஆரம்பமாகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், தேர்வுகள், ஏப்., 9ம்தேதி துவங்கி, 17ம்தேதி வரையும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில், 19ம்தேதி வரையும் நடக்கிறது.

துவக்க, நடுநிலையில், 1, 3, 5, 7ம் வகுப்புகளுக்கு, காலை, 10:00 மணி முதல் 12:30 மணி, 2, 4, 6, 8ம் வகுப்புகளுக்கு, மதியம், 2:00 மணி முதல் 4:30 மணி வரை, உயர்நிலை மற்றும் மேல்நிலையில், 6, 7, 8 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு, மதியம், 1:30 மணி முதல் 4:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~கபிலர்மலை ஒன்றியத் தேர்தல்-2018~முடிவுகள் (10/03/2018)...

💥💥💥💥💥💥💥
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கபிலர்மலை ஒன்றியம்(கிளை), 
நாமக்கல் மாவட்டம்.
💥💥💥💥💥💥💥💥

ஒன்றியத் தேர்தல் முடிவுகள்: (10/03/2018)

➖➖➖➖➖➖➖➖
தலைவர் : 

ந.மணிவண்ணன்

துணைத் தலைவர்கள்: 

வி.சிவக்குமார்

வெ.குணசங்கரன்
➖➖➖➖➖➖➖➖

செயலாளர் : 

மெ.சங்கர்

துணைச் செயலாளர்கள் : 

இர.மணிகண்டன்

கே.சி.செந்தில்குமார்
➖➖➖➖➖➖➖➖

பொருளாளர் : 

பொ.முத்துசாமி

➖➖➖➖➖➖➖➖
கொள்கை விளக்கச் செயலாளர் : 

த.செந்தாமரை
➖➖➖➖➖➖➖➖
மகளிர் அணி அமைப்பாளர்: 

சு.சந்திரகாந்தா

மகளிர் அணி துணை அமைப்பாளர் : 

ம.சுதா
➖➖➖➖➖➖➖➖
இளைஞரணி அமைப்பாளர் : 

மு.தேவராஜன்

இளைஞரணி துணை அமைப்பாளர் : 

சி.மோகன்குமார்
➖➖➖➖➖➖➖➖
இலக்கிய அணி அமைப்பாளர் : 

இரா.பொற்கொடி

இலக்கிய அணி துணை அமைப்பாளர் : 

ச.நாகமணி
➖➖➖➖➖➖➖➖
மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் : 

த.தண்டபாணி
➖➖➖➖➖➖➖➖
செயற்குழு உறுப்பினர்கள் : 

கா.குப்புலட்சுமி

ம.மேகலா

ச.சுமதி

சி.பழனியம்மாள்

➖➖➖➖➖➖➖➖

மேற்கண்ட பொறுப்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
💥💥💥💥💥💥💥💥