செவ்வாய், 27 மார்ச், 2018

Glossary of English to Tamil Terms...

ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேரில் ஆஜராக வேண்டும்~கருவூல கணக்கு துறை செயலாளர் உத்தரவு…


தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதியம்  வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசின் கருவூல கணக்கு துறை முதன்மை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள்  ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை பதிவு செய்யவும், நேரில் வர இயலாதவர்கள்  வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நேர்காணலுக்கு கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு  செய்ய கருவூலத்தின் வேலை நாட்களில் நேரில் வர வேண்டும். 

ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்மந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள்  வழியாக நேர்காணலை இணையதளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார் அட்டை வாயிலாக பதிவு செய்து அதன்மூலம் நேர்காணல்  செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண்  சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை குறிப்பிட்டு கருவூலத்தில்  சமர்ப்பிக்கலாம். 
ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம் கொண்டு வரவேண்டும்.நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதியப் புத்தகம், இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை மற்றும்  நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் (www.tn.gov.in/karuvoolam/) சமர்ப்பிக்கவில்லை எனில் அதன் நகல்களுடன்  வாழ்வு சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். 

குடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர்கள், நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்) மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதிமொழியை சமர்ப்பிக்க  வேண்டும். தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் விவரம் அளிக்க வேண்டும். இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து  வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Income Tax Contact Numbers ~All Districts...

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் M.Phil படிப்பானது சென்னை பல்கலைக்கழகத்தின் M.Phil.படிப்பிற்கு சமம் என்பதற்கான சான்று...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ~ மல்லசமுத்திரம் ஒன்றியத்தேர்தல் நிகழ்வுகள்...

அம்மைக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு 7 நாட்களுக்கான அரசாணை...

திங்கள், 26 மார்ச், 2018

ஆதாரை உறுதி செய்ய முகத் தோற்றம்~ ஜூலையில் புதிய வசதி…


ஆதாரை பயன்படுத்தும்போது, அதை உறுதி செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவற்றுடன், முகத் தோற்றத்தையும் பயன்படுத்தும் வசதி, ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகளை, உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரிக்கிறது. ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, 'பவர் பாயின்ட்' மூலம், ஆதார் பயன்பாட்டின் அவசியத்தை விளக்கினார்.

தற்போது, பல்வேறு சேவைகளுக்கு ஆதார் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர, ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்காக, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணையும் பயன்படுத்தலாம்.

அந்த வரிசையில், 'முக வடிவமைப்பை பயன்படுத்தி, ஆதாரை உறுதி செய்யும் வசதி, ஜூலை, 1 முதல், நடைமுறைக்கு வரும்' என, உச்ச நீதிமன்றத்தில் அவர் கூறினார்.

WhatsApp இன் UPI அடிப்படையிலான P2P டிஜிட்டல் பணம் செலுத்தும் அம்சம் ஒரு புதிய புரட்சி...


WhatsApp அதன் சொந்த UPI- அடிப்படையிலான P2P செலுத்தும் வசதியைத் தொடங்க தீர்மானித்தவுடன், நாட்டில் டிஜிட்டல் செலுத்தும் புரட்சி அதிக வேகத்தை பெற உத்தரவாதம் அளிக்கிறது. ஏற்கனவே போட்டியிடும் இடத்தை நுழைந்து, WhatsApp ஆனது இந்த புதிய அம்சத்துடன் 200 மில்லியனுக்கும் மேலான செயலில் உள்ள பயனர் தளத்தை இலக்காகக் கொண்டு தொடங்கும்.

பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களைத் மற்றொரு வசதியான மற்றும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய கட்டண விருப்பத்தை வழங்கும்போது, ​​தரவு பாதுகாப்பு என்பது பொதுவாக எச்சரிக்கையுடன் இருக்கும் மற்றும் சந்தையில் முக்கிய அக்கறைக்குரியதாக இருக்கும். UPI வழிக்குச் செல்வதன் மூலம், WhatsApp பணம் செலுத்தும் வங்கி அல்லது டிஜிட்டல் பணப்பையை அமைப்பதில் உள்ள ஒழுங்குமுறைத் தடைகளைத் தவிர்ப்பது வெளித்தோற்றத்தில் இருக்கும்.

வரவிருக்கும் பணம் செலுத்தும் அம்சம் WhatsApp இல் அதிக பயன்பாட்டை உட்பொதிக்கும், இது ஒரு பெரிய உடனடி செய்தியிடல் தகவல்தொடர்பு தளத்தை விட அதிகமானதாகும். பயனர்களுக்கு பல நோக்கம் மதிப்பை வழங்குவதை இலக்காகக் கொண்ட இந்த வகை கண்டுபிடிப்பு, WhatsApp கணக்கை இன்னும் அதிகமாக தொடங்குவதற்கு ஊக்கப்படுத்துகிறது, பயன்பாட்டிற்குள் அதிக நேரத்தை செலவழிக்கவும், ஒட்டுமொத்த பயனர் ஈடுபாடு மற்றும் தக்கவைப்பை அதிகரிக்கவும் – முழு பயனர் அனுபவம் திருப்திகரமாக  வழங்கப்படுகிறது.

WhatsApp எச்சரிக்கையுடன் பக்கத்தில் தவறு செய்ய வேண்டும் மற்றும் வணிக ரீதியாக இந்த அம்சத்தை தொடங்குவதற்கு முன், அது அனைத்து ஆன்லைன் கட்டண தொடர்பான அபாயங்களையும் போதுமானதாக்குகிறது. மேலும், இந்த அம்சத்தின் ஆரம்பகால தத்தெடுப்பாளர்கள், நேர்மறை உணர்வின் அலைகளைக் கிக்ஸ்டார்ட் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும், இது வார்த்தைகளின் வாய் போன்ற தயாரிப்புகள் மற்றும் அம்சங்களுக்கான சக்திவாய்ந்த உந்துதலாகும்.

WhatsApp என்ன முயற்சி செய்து அதை வரிசையில் வைத்து, மொபைல் பயன்பாடுகள் இன்று பயனர்கள் என்ன தேவை மற்றும் அப்பால் யோசிக்க வேண்டும். இந்த பின்னணியில் அமைக்க, பயன்பாட்டு உலகில் இடையூறு விளைவிக்கும் அடுத்த அலை, வெட்டு-முனை தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னால் வரும்.

பயனர்களின் இடம் பகிர்வுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துவதன் மூலம், சில்லறை, ஃபேஷன், பயணம், சுகாதாரம் மற்றும் உணவு விநியோக இடங்களில் உயர்ந்த-தனிப்பயனாக்கப்பட்ட, சூழ்நிலை மற்றும் அர்த்தமுள்ள எல்லா-சேனல் ஈடுபாடு பிரச்சாரங்களையும் இயக்கலாம். இது ஒரு வலுவான டிஜிட்டல் பணம்  செலுத்தும் முதுகெலும்பாக, மற்றும் வாழ்க்கை பயனர்களுக்கு அதிவேகமாக எளிதாக, குறிப்பாக சிறந்த இணைக்கப்பட்ட பெருநகர பகுதிகளில் நிறைவாக இருக்கும் .

அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்...


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல் 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறை 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ல் துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்ரல் 16ல் முடிகிறது. மார்ச் 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 20ல் முடிகிறது. 

பொது தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 20க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 44 நாட்கள் கோடை விடுமுறை கிடைத்துள்ளது.

இதுத்தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோடை விடுமுறை அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். கோடை விடுமுறை பற்றி மாணவர்கள், பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை.

வரும் கல்வியாண்டில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கூட்டுறவு சங்க தேர்தலில் பணிபுரியும் அலுவலர்களுக்கான ஊதிய விபரம்...