வியாழன், 19 ஏப்ரல், 2018

தொடக்கக்கல்வி நிறைவுச் சான்றிதழ்...

பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை ஓரிரு தினங்களில் வெளியீடு...


2018-19க்கான  பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை இன்னும் ஓரிரு தினங்களில்  வெளியிடப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 

அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை அவர்களுக்குரிய‌ அரசு அலுவலகங்களில் வழங்கலாம் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அரசு/அரசுநிதி பள்ளிகளில் முதுகலை/பட்டதாரி/இடைநிலை ஆசிரியர்: மாணவர் விகிதம் ~ ஆகஸ்டு முதல் தேதி அடிப்பயையில் கணக்கிடுதல் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் செயல்முறைகள்…

தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு...


பள்ளிக்கல்வித்துறை கல்வி முறைகளில் பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில்,10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தற்போது அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்தன. 

இத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் தேதிகளை தமிழகப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி ,
12ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 16-5-2018 அன்றும்,
 
11ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 30-5-2018 அன்றும்,

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு - 23-5-2018 அன்றும் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்திட வலியுறுத்தி ஏப்பிரல் 23ஆம் தேதியன்று மாவட்ட தலைநகர்களில் நடைபெறும் மனிதசங்கிலிபோராட்டத்தில் ஆசிரியர்மன்றம் பங்கேற்கிறது~ பொதுச்செயலாளர் அறிக்கை…

ஊதிய முரண்பாடுகளை களைய ஒருநபர் குழு - தமிழக அரசு உத்தரவு...


ஊதிய முரண்பாடு மற்றும் தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.எம்.ஏ. சித்திக் நியமனம்.

மனுதாரர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களை நேரில் சந்தித்துப் பேசவும் ஒருநபர் குழு முடிவு செய்துள்ளது.

அரசு பணியாளர்கள் கோரிக்கைகளை நேரிலோ omc_2018@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 18 ஏப்ரல், 2018

வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்களை இணையதளம் மூலம் பெறலாம்...


வரும் கல்வியாண்டுக்கான (2018-19) பாடநூல்களை இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:-
தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன.
நிகழாண்டு புதிய பாடத்திட்டத்தின்படி அச்சிடப்படவுள்ள 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்குத் தேவையான நூல்கள் ஜூன் மாதத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர 2,3,4,5,7,8,10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும் பாடநூல் விற்பனை தொடங்கியுள்ளது.
மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர் வசதிக்காக www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்த அடுத்த மூன்று நாள்களுக்குள் பாடநூல்கள் நேரடியாக வீடுகளுக்கே கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படும். பாடநூல்கள் விலை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தில் ஏற்கெனவே பதிவு செய்த பள்ளிகள் பாடநூல்களை மொத்தமாகப் பெறுவதற்கு இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

750 PP:நாமக்கல் DEEO கோரிய திருச்சி தணிக்கை தெளிவுரை வந்தால் அது 12 மாவட்டங்களுக்கும் பொருந்தும் முதல்வர் தனிப்பிரிவு பதில்...

GPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை 7.6% என அரசு அறிவிப்பு...

2017 - 2018 பள்ளி வேலை நாட்களும் , சதவிகிதமும்...


பள்ளியின் மொத்த வேலை நாட்கள் 210...

210-100%

209-100%

208- 99%

207-99%

206-98%

205-98%

204-97%

205-97%

204-97%

203-97%

202-96%

201-96%

200-95%

199- 95%

198-94%

197-94%

196-93%

195-93%

194-92%

193-92%

192-91%

191-91%

190-90%

189-90%

188-90%

187-89%

186-89%

185-88%

184-88%

183-87%

182-87%

181-86%

180-86%

179-85%

178-85%

177-84%

176-84%

175-83%

174-83%

173-82%

172-82%

171-81%

170-81%