வியாழன், 4 அக்டோபர், 2018

+1 பாடம் நடத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -- கல்வி அமைச்சர்

பிளஸ் 1 பாடங்களை நடத்தாத பள்ளிகள் மீது,அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

தமிழக பள்ளி கல்வி துறையில், பிளஸ் 1க்கு பொது தேர்வு, 'ரேங்கிங்' முறை ரத்து, புதிய பாடத்திட்டம் போன்ற அறிவிப்புகள், கல்வி தரத்தை உயர்த்த உதவும் என, கல்வியாளர்கள் பாராட்டினர். இந்நிலையில், 'பிளஸ் 1 பொது தேர்வு மதிப்பெண், உயர் கல்விக்கு எடுத்து கொள்ளப்படாது' என, திடீரென பள்ளி கல்வி துறை அறிவித்தது. உயர் கல்விக்கான நுழைவு தேர்வுகளுக்கு, பிளஸ் 1 பாடங்கள் அடிப்படையாக உள்ள நிலையில், 'பிளஸ் 1 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டால், அந்த பாடங்கள், பள்ளிகளில் நடத்தப்படாது' என, கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர். அதைப் போலவே, பல பள்ளிகளில், பிளஸ் 1 பாடங்கள் நடத்துவதை விட்டு, 'நீட்' நுழைவுத் தேர்வு மற்றும் பிளஸ் 2 பாடங்களுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க துவங்கி உள்ளனர். இந்நிலையில், ''பிளஸ் 1 பாடங்களை நடத்தாத பள்ளிகள் மீது, அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


நிருபர்களிடம், அவர் கூறியதாவது: மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக, முதலில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முறை அறிவிக்கப்பட்டது. ஆனால், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மூன்று ஆண்டுகளாக தேர்வு சுமை இருக்க கூடாது என, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டதால், அரசாணை திருத்தம் செய்யப்பட்டது. தற்போதுள்ள நிலையில், பிளஸ் 1க்கான பொது தேர்வு முறை ரத்து செய்யப்படவில்லை. அரசு தேர்வுத்துறை தேர்வை நடத்தி, தேர்ச்சியை அறிவிக்கும். பிளஸ் 1 தேர்ச்சி இல்லாமல், பிளஸ் 2வுக்கு செல்ல முடியாது.

அதேபோல், பிளஸ் 1 பாடங்களை, ஒவ்வொரு பள்ளியும் கட்டாயம் நடத்த வேண்டும். பிளஸ் 1 மாணவர்கள், வெறும் தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெறாமல், குறைந்தபட்சம், 50 சதவீதம் வரை மதிப்பெண் பெற வேண்டும். அந்த அளவுக்கு, மாணவர்களை, பள்ளிகள் தயார்படுத்த வேண்டும் என, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளும், பள்ளி கல்வி அதிகாரிகள்குழுவால் கண்காணிக்கப்படுகிறது. பிளஸ் 1 பாடங்களை நடத்தாத பள்ளிகள் குறித்து, பெற்றோர் புகார் தெரிவிக்கலாம்.அதேபோல், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களை, அதிகாரிகள் ஆய்வு செய்வர்.

பிளஸ் 1 மாணவர்களின், மதிப்பெண் குறையும் வகையில், அந்த பாடங்களை, பள்ளிகள் நடத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தற்செயல் விடுப்பு எடுத்து ஜாக்டோ-ஜியோ இன்று போராட்டம்...

புதன், 3 அக்டோபர், 2018

பள்ளிகளில் விழாக்கள் நடத்தப்படும் போது பின்பற்ற வேண்டிய நடை முறைகள்- தொடக்கக்கல்வி இயக்குனர்



அரசு தொடக்கபள்ளியில் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் காலை உணவு திட்டம்

துடியலுார் அருகே உருமாண்டம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில், இலவசமாக காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது.உருமாண்டம்பாளையத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 55 மாணவர்கள் படிக்கின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அடிப்படை வசதி இருந்தும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

*ஈரோடு மாவட்ட சிறப்பு அரசிதழ் _ மாவட்ட ஆட்சியர் அறிவிக்கை _ ஈரோடு மாநகராட்சிக்குரிய 16 கி.மீ சுற்றெல்லைக்குள் வரும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராமங்களின் பெயர் பட்டியல்கள்*

🎯🎯🎯🎯🎯🎯🎯
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் உரிய வழிகாட்டுதலில் மாவட்ட மற்றும் ஒன்றிய அமைப்புகளின் சார்பில்,*
 *ஈரோடு மாவட்ட அரசிதழ் அறிவிக்கையில்,* *ஈரோடு மாநகராட்சி எல்லையிலிருந்து 16 கி.மீ சுற்றெல்லைக்குள் அமைந்துள்ள நாமக்கல் மாவட்ட வருவாய் கிராமங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு உதவிட வேண்டுமாய்*
*மதிப்புமிகு. ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.*  *ஈரோடு மாவட்ட அரசிதழ் அறிவிக்கை அச்சிடப்பட்டு வந்துள்ளது எனவும், நேரில்  வந்து அரசிதழ் அறிவிக்கை நகல் பெற்றுக்கொள்ளுமாறும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இன்று  மன்றப் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.*  *ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (PA _ Accounts) திரு.சே.ஈஸ்வரன் அவர்கள் மாவட்ட அரசிதழ் அறிவிக்கையை  மன்றத்தின் கபிலர்மலை ஒன்றியத் தலைவர் திரு.ந.மணிவண்ணன், செயலாளர் திரு.மெ.சங்கர் ஆகியோரிடம் வழங்கினார்.* *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம், நாமக்கல் மாவட்டத்தின் 5 ஒன்றியங்களில் (பள்ளிபாளையம், திருச்செங்கோடு, எலச்சிபாளையம், கபிலர்மலை மற்றும் பரமத்தி ) பணியாற்றும் அனைத்துவகை ஆசிரியர் மற்றும் அரசூழியர்களுக்கும்  ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டுவாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை பெற்று வழங்குவதில் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை  மன நிறைவுடன் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியுள்ளது  என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*
/மெ.சங்கர்/

*இணைப்பு: ஈரோடு மாவட்ட சிறப்பு அரசிதழ் முழுமையாக (1 முதல் 19 பக்கம் வரை ) இணைக்கப்பட்டுள்ளது.*
📃📄📑📃📄📑📃📄



திட்டமிட்டபடி தற்செயல் போராட்டம் நடைபெறும் -- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு ..


நாளைய ஒட்டு மொத்த ஜாக்டோ ஜியோ தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் பணியாளர்கள் விவரம் கேட்டல் சார்பாக - Director செயல்முறைகள்!


+1 மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தேவை -- கல்வி அமைப்புகள் வலியுறுத்தல்


E - SR பதிவுகளை சரி செய்ய வழிமுறைகள்...

தொடக்கக்கல்வி - பள்ளி ஆண்டுவிழா மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர விழாக்கள் - கலை நிகழ்ச்சிகள் - பார்வை பாதிப்புகள் ஏற்படாதவாறு மின் ஒளி விளக்குகள் பயன்படுத்துதல் தொடர்பாக...