சனி, 20 அக்டோபர், 2018

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஒரு வாரத்தில் தொடக்கம் வானிலை மையம்


மூளைகாய்ச்சல் விழிப்புணர்வு பள்ளிகளில் நடத்த அரசு உத்தரவு

🔥🔥🔥மூளை காய்ச்சல் விழிப்புணர்வு : பள்ளிகளில் நடத்த உத்தரவு


💥💥தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில்,
மூளை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த
பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, சமக்ர
சிக் ஷா திட்டத்தின் கீழ், தொடக்கப் பள்ளிகளில், சிறப்பு குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகள், மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ், ஆண்டு தோறும் மூளை காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டும், மூளை காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை நடத்த, அனைத்து தொடக்கப் பள்ளிகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரிகள், சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து, வட்டார வாரியாக முகாம்களை நடத்த வேண்டும்.'தன் சுத்தம், சுகாதாரம், மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான உணவு முறை, மூளை காய்ச்சல் ஆகியவை குறித்து, முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என சமக்ர சிக் ஷா திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுஉள்ளது.

பொறியியல் பட்டதாரிகளுக்கு தடை கோரிய வழக்கு அக் 26க்கு ஒத்திவைப்பு

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியை மீறி தேர்வு நடவடிக்கை மேற்கொள்வது பாதிப்பை ஏற்படுத்துவதாக தனபால் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் அக்.26ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

அறிவியல் தொழில்நுட்புடன் டூப்ளிக்கெட் நிலாவை உருவாக்கும் - சீனா


சீனா: அங்க தொட்டு, இங்க தொட்டு, கடைசியில நிலாவையே டூப்ளிகேட் பண்ண ஆரம்பிக்க போகுது சீனா.
சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி இயற்கையையும் விட்டு வைக்கவில்லை போலும். மின்சார செலவை குறைப்பதற்காகவும், தெரு விளக்குகளுக்கு பதிலாகவும் சீனா, ரஷ்யா, அமெரிக்காவுக்கு இணையாக நின்று ஒரு புது ஐடியாவை யோசித்தது.
வீண்செலவு
செயற்கை கோள்
அதன்படி, செயற்கை நிலவை உருவாக்கிவிட்டால் எந்த வீண் செலவும் வராது, நாடும் எப்பவுமே பளிச்னு இருக்கும் என்று முடிவெடுத்தது. தற்போது செயற்கை நிலாக்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கை கோள்கள் மூலம் சக்தி பெரும் வகையில் வடிவமைக்கப்படுமாம்.
நாடு பளிச்தான்
2022-க்குள் முடியும்
இதற்கான சோதனையும் நடந்து முடிந்துவிட்டதால், எப்படியாவது வருகிற 2022-ம் ஆண்டிற்குள் இந்த திட்டம் முடிந்துவிடும் என்றும், அதற்குள் மேலும் மூன்று செயற்கை நிலாக்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செயற்கை நிலவுகள் வந்துவிட்டால் நாடு எப்போதுமே பளிச்சென்றுதான் இருக்கும்.
செயற்கை நிலா
8 மடங்கு ஒளி
மின்வசதி இல்லாத கிராமப்பகுதிகளுக்கு இந்த செயற்கை நிலா வெளிச்சம் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், வெள்ளம், பேரிடர் போன்ற காலங்களில் நாடே இருளில் மூழ்கிவிட்டாலும் இருக்கவே இருக்கிறது செயற்கை நிலா. இது இயற்கையான நிலாவைவிட 8 மடங்குஒளி தரக்கூடியதாம். அதாவது இந்த செயற்கை நிலவால், 10 முதல் 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒளியைப் பாய்ச்ச முடியுமாம்.
வெளிச்சம்
புத்தம் புது முயற்சி
சூரியனிடமிருந்து வெளிச்சத்தை நிலா வாங்கினால், இந்த நிலாவிலிருந்து வெளிச்சத்தை சீனா வாங்கி இப்படி ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளது. நிலாவில் போய் வாழலாம் என்ற பேச்சு அடிபட்டதுபோய், இப்போது ஆஹா.. கடைசியில் நிலாவில் கை வைத்து விட்டதே.... 

அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள்

🔥🔥🔥அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படுவதற்கான ஆலோசனைக் கூட்டம், முதலமைச்சர் தலைமையில் வரும் 22ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. சமூகநலத் துறை அமைச்சருடன் ஆலோசனை செய்யுமாறு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும். பொதுமக்களிடம் ஆங்கில மோகம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இதில், தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் படிக்கும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.

ஆண்ட்ராய்டு 9.0 அப்டேட்.! உங்க ஸ்மார்ட்போன் இந்த லிஸ்ட்ல இருக்கானு பாருங்க.!


கூகுள் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை வெளியிட்டது.

ANDROID 9 PIE COMING TO 50 NEW SMARTPHONES: IS YOUR DEVICE ON THE LIST?

ஆண்ட்ராய்டு 9.0 .

இந்திய சந்தையில் கிடைக்கும் சில ஸ்மார்ட் போன்களுக்கு இந்த புதிய இயங்குதளத்தின் அப்டேட்கள் கிடைப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது ஆண்ட்ராய்டு 9.0 அப்டேட் வழங்கப்படவுள்ள புதிய ஸ்மார்ட் போன்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. .

50 ஸ்மார்ட் போன் பட்டியல் ....

ஆனால் இந்த ஆண்ட்ராய்டு 9.0 இன் புதிய அப்டேட் வெறும் 50 ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு மட்டுமே கிடைக்குமென்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் உங்களின் ஸ்மார்ட் போன் மாடலும் இடம்பெற்றுள்ளது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

சாம்சங் :

- சாம்சங் கேலக்ஸி எஸ்9
- சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்
- சாம்சங் கேலக்ஸி நோட் 8
- சாம்சங் கேலக்ஸி எஸ்8
- சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்

எச்.எம்.டி குளோபல் :

- நோக்கியா 6.1 பிளஸ்
- நோக்கியா 6.1
- நோக்கியா 7.1
- நோக்கியா 7 பிளஸ்
- நோக்கியா 8
- நோக்கியா 8 சிராக்கோ
- நோக்கியா 3.1
- நோக்கியா 3
- நோக்கியா 1
- நோக்கியா 5
- நோக்கியா 5.1
- நோக்கியா6
- நோக்கியா 2.1
- நோக்கியா 2

ஒன்பிளஸ் :

- ஒன்பிளஸ் 3
- ஒன்பிளஸ் 3டி
- ஒன்பிளஸ் 5
- ஒன்பிளஸ் 5டி
- ஒன்பிளஸ் 6
- ஒன்பிளஸ் 6டி

ஹானர் :

- ஹானர் 8எக்ஸ்
- ஹானர் 10
- ஹானர் பிளே
- ஹானர் வியூ 10

எச்.டி.சி :

- எச்.டி.சி யு11 பிளஸ்
- எச்.டி.சி யு12 பிளஸ்
- எச்.டி.சி யு11

மோட்டோரோலா :

- மோட்டோ எக்ஸ்4
- மோட்டோ ஜி6
- மோட்டோ ஜி6 பிளஸ்
- மோட்டோ ஜி6 பிளே
- மோட்டோ இஜெட் 2 

போர்ஸ்

- மோட்டோ இஜெட் 2 பிளே
- மோட்டோ இஜெட் 3
- மோட்டோ இஜெட் 3 பிளே

சோனி :

- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.ஏ. 2
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.ஏ. 2 அல்ட்ரா
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 1
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 2
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 2 பிரீமியம்
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 1 காம்பெக்ட்
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் காம்பெக்ட்
- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் பிரீமியம்

Google Image search tips...

3rd Std ~ Term 2 ~ Maths, Science, Social Worksheet with QR Code…

தொலைநிலை கல்வி நடத்த அழகப்பா பல்கலைக்கு சிறப்பு சலுகை - U.G.C


அங்கீகாரமற்ற CBSE பள்ளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை - அரசு முடிவு

மாநில பாடத்திட்ட பள்ளிகளில், மாவட்ட வாரியாக, அடிக்கடி ஆய்வு நடத்தப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி தரம் அறியப்படுகிறது.ஆனால், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட, மற்ற பாடத்திட்ட பள்ளிகளில், இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப் படுவதில்லை. அதனால், பல பள்ளிகள், எந்த வசதியுமின்றியும், உரிய அங்கீகாரம் இன்றியும் செயல்படுகின்றன. கூடுதல் கட்டணம் வசூலித்தும், விதிமீறல்களில் ஈடுபடுகின்றன. இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கணக்கெடுக்க, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, மாவட்ட வாரியாக,சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.இதில், பல பள்ளிகள், எந்தவித அங்கீகாரமோ, சி.பி.எஸ்.இ., இணைப்பு உரிமமோ இல்லாமல் செயல்படுவது தெரிய வந்துள்ளது.பல பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் குழாய்கள், ஆய்வகம், நுாலகம் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, மாவட்டங் களில் இருந்து, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அறிக்கைகள் வந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் தருமாறு, &'நோட்டீஸ்&' அனுப்பப்பட உள்ளது.பின், டில்லியில் உள்ள சி.பி.எஸ்.இ., நிர்வாக அலுவலகத்துக்கு பரிந்துரை செய்து, அவற்றின் இணைப்பு உரிமத்தை ரத்து செய்யவும், அதிகாரிகள் முடிவு செய்துஉள்ளனர்.
சி.பி.எஸ்.இ.,யிடம் இணைப்பு பெறாமல், அந்த பெயரை பயன்படுத்தும் கல்வி நிறுவனங்கள் மீது, சி.பி.எஸ்.இ., வழியாக, கிரிமினல்நடவடிக்கை எடுக்கவும், பள்ளி கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்