திங்கள், 26 நவம்பர், 2018

முதன்மைக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் பதவியில் இருந்து முதன்மைக் கல்வி அலுவலர் பதவி உயர்வு~ அரசாணை...

கஜா புயல் ~ அரசு ஊழியர் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் ~அரசாணை வெளியீடு[GO: 159, Date 26-11-2018]…

ஆன்லைன் பரிவர்த்தனைக்கு உஷார் டிப்ஸ்...

மின்னணு ஆவணம் வைத்திருப்போருக்கு பச்சைக்கொடி~டிஜி லாக்கர், எம்-பரிவாஹன் குறித்த குழப்பம் தீர்ந்தது~வாகன ஓட்டிகள் நிம்மதி…

கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட வனக்காப்பாளர் பணிக்கு டிசம்பர் 6 ல் ஆன்லைன் தேர்வு~வனத்துறை அறிவிப்பு...

டிசம்பர் மாதம் நாள்காட்டி- 2018



✍✍✍ ✍ கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் ஆட்குறைப்பு அரசாணையை இரத்து செய்க! _ ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் வலியுறுத்தல்..


கல்வியே அழியாச் செல்வம்! அழியாப்புகழை கொடுக்கும்!




கல்வியின் தற்போதைய நிலை:


கல்வி தற்போதைய  சமூகத்தின் வாழ்வாதாரமாகவே இப்போது மாறிவிட்டது போலும் மாப்பிள்ளை என்ன படித்துள்ளார் என்று கேட்டு விட்டுத்தான் பெண்வீட்டார் தம் பெண்ணைக் கொடுப்பது என்பது ஒரு கௌரவ நிலையாகவே வந்துவிட்டது.



கல்வியால் பெண்களும் சிறந்து விளங்கி வருகின்றனா். ஆண்களுக்குப் போட்டியாளராகவும் தற்போது எல்லா துறைகளிலும்  பெண்களின் ஆளுமையைக் கண்ணாரக் காண முடிகிறது இது சமூகத்தில் பெண்களின் வளா்ச்சியைப் படம் பிடித்துக்காட்டுகிறது. கல்வியில்லாத சமூதாயத்தை நம்மால் கற்பனையால் கூடநினைத்துப்  பார்க்க முடியாது .


தனி ராஜ்ஜியம்


சாக்ரடீசின்  மாணவா் பிளேட்டோ  கிரேக்கத்தில் தொடங்கி வைத்த  அகாடமி இன்று வோ் விட்டு உலகம் தனில் தனி ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருக்கிறது. அரிஸ்டாட்டலின் மாணவா்  அலெக்சாண்டா் அக்காலத்தைய யுரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா கண்டத்தை வென்று தனக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியருக்கு பெருமை சோ்த்தார் என்பது வரலாறு. நவீன காலத்தில் யாரும் நாடு பிடிக்கப் போர் குதிரைகளைக் கொண்டு வரிந்து கட்டி நிற்கத் தேவையில்லை எல்லாம் தொழில்நுட்பத்தினால் சாத்தியமான ஏவுகணையைக் கொண்டு ஒரு சில நிமிடங்களில்  எந்த  ஒரு நாட்டையும்  வீழ்த்தி அழித்து விடமுடியும் என்கிற அறிவியல் கண்டுபிடிப்புகள் கல்வியினாலும் அந்தக் கல்விக்குரிய தேடுதல்களினாலும் கிடைத்தது.



முதலில் வளா்ச்சிக்காகப் பயன்பட்ட அந்த சாதனங்கள் பின் உலகப் பெரும் யுத்தத்தில் மனிதா்களைக் கொல்வதற்கும் அடுத்த தேசத்தை அபகரிப்பதற்கும்  பயன்படுத்தப்பட்டது என்பது வருந்தத்தக்கதான ஒன்றாகும். எனினும் உலகில் இன்று கல்வி எனும் கருவியில்லாமல் மாணவா்க்கும் மக்களுக்கும் முன்னேற்றமில்லை எனும் போது அந்த கல்வியின் செயல்பாட்டால்தான்  உலகமும் கூட முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


அதீத பங்களிப்பு


அத்தகைய கல்வியெனும் அரிய ஆயுத்தைக் கொண்டு படைக்கும் படைப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் தவறான வழியில் கொண்டு செல்லாமல் சமூதாயத்திற்கு பயன்விளைவிக்கக்கூடிய ஆக்கப்புா்வமான வழிகளில் செலவிட்டால் நாடு சிறப்பான விதத்தில் வளா்சியடையும். அதற்கு படிக்கின்ற மாணவா்களின் ஒத்துழைப்பும் அறிவியல் ஆராய்ச்சியாளா்களின் அதீத பங்களிப்பும் இன்றிமையாத ஒன்றாகும்.


அழியாப்புகழ்


கல்வி அழியாச் செல்வம் என்றால் அதனைக் கற்றோரும் அழியா புகழுடையவராவார். அவா்தம் கண்டுபிடிப்புகளும் அத்தகைய சிறப்புடையதேயாகும். கல்வியானது மாற்றத்தை ஏற்படுத்தும் உலகினை அறிமுகம் செய்யும் பன்முகத் தன்மையுடையதென்று உணா்ந்தறிவோம்.

சோழர் கால வரலாற்று கல்வெட்டு வாணியம்பாடியில் கண்டெடுப்பு - வரலாற்று செய்தி


வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் சிவன் கோயிலில் சோழர், பல்லவர் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் பேராசிரியர்கள் க.மோகன் காந்தி, வ.மதன்குமார், காணிநிலம் மு.முனிசாமி, தொலைதூரக் கல்வியின் முன்னாள் துணை இயக்குநர் ஜமுனா தியாகராசன், தொல்லியல் அறிஞர்கள் ர.பூங்குன்றன், ம.காந்தி ஆகியோர் வாணியம்பாடி அருகே மேற்கொண்ட கள ஆய்வில் இந்த கல்வெட்டை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது:
வாணியம்பாடி வட்டம், அம்பலூரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலை அண்ணாமலையார் கோயில் என்று இவ்வூர் மக்கள் அழைக்கின்றனர். இக்கோயில் விளைநிலங்களுக்கு நடுவே உள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இந்தக் கோயிலை முதன் முதலில் சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டியதற்கான அடையாளமாக, சோழர் காலத்து கல்வெட்டு கோயிலின் வலது பக்கம் காணப்படுகிறது. இந்த எழுத்துகள் கோயில் புனரமைப்பின் போது சிதிலமடைந்ததால் சரியாகப் படிக்க இயலவில்லை. இதன்மூலம் கி.பி .10, 11-ஆம் நூற்றாண்டுகளில் பிற்காலச் சோழர் ஆட்சியில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது. சோழ மன்னர்களுக்கு பிறகு கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசு இப்பகுதியை ஆண்டுள்ளது. இதற்கு சான்றாக கோயில் பிரகாரத்தைச் சுற்றி அரை அடி அகலம் கொண்ட கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு எழுத்துகள் தமிழும், வடமொழி கலந்தும் எழுதப்பட்டுள்ளது.
பெரிய மண்டலத்தை ஆட்சி புரிந்த அதிகராயன் என்ற பெரிய தலைவன். சொன்ன சொல்லை மீறாத, சத்தியம் குணம் கொண்டவன். மூவரை வென்றவன்.உலகையே ஆண்டவன்.விஜயநகர அரசர்களில் உள்ள மூன்று குடிகளில் சாளுவ குடியைச் சேர்ந்த நரசிங்கராய மகாராயரின் குமாரன் திம்மராயர் ஆட்சி செய்த 1410-ஆம் ஆண்டு, மாசி மாதம், ஞாயிற்றுக்கிழமை அருணை நாயகன் பெருமான் கோயில் கொண்டுள்ள நல்லூரில் என்று மெய்க்கீர்த்திபோல் அமைந்துள்ளது.
கண்டன் என்று கல்வெட்டில் வருவது ஆயிரம் பேரைக் கொன்ற மன்னர்களுக்கு வழங்கப்படும் பெயராகும். அருணை நாயகன் என்பது சிவந்த நெருப்பின் உருவம் கொண்ட சிவபெருமான் கோயில் கொண்ட ஊர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. திருவண்ணாமலைக்கு நெருப்புடன் தொடர்பு கொண்ட ஈசன் அடிமுடி காண முடியாமல் தீப்பிழம்பாக நின்றது போல், இவ்வூருக்கும் நெருப்போடு தொடர்பு கொண்ட ஒரு கதை இருந்திருக்க வேண்டும். தமிழக வரலாற்றில் இக்கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.

அரசியலமைப்பு சட்ட தினம் ~26.11.2018~ உறுதி மொழி…