செவ்வாய், 21 மே, 2019

அரசு பள்ளி மாணவர்கள் சி.ஏ படிப்பதற்கு 12 உதவி மையங்கள் -கல்வித்துறையுடன் ஆடிட்டர் அமைப்பு ஒப்பந்தம்


*தமிழக கல்வித்துறை தொலைக்காட்சி ஜூனில் ஒளிபரப்பு தொடக்கம்*

*🌷தமிழக கல்வித்துறை டிவி சேனலில் 55 ஆயிரம் பள்ளிகள் இணைப்பு: ஜூனில் ஒளிபரப்பு தொடக்கம்*

*🌷பள்ளிக் கல்வித்துறைக்காக தனியாக ஒரு டிவி சேனல் (TAC TV) தொடங்குகிறது. இதையடுத்து 53 ஆயிரம்  பள்ளிகளுக்கு கல்வி சேனலின் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட உள்ளது.*

 *🌷இந்த சேனலை மாணவர்கள் வீடுகளிலும் பார்க்க முடியும். தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்காகவே புதிய டிவி தொடங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் கல்வித் தொடர்பான தகவல்கள், கல்வித்துறை நிபுணர்கள் நடத்தும் சிறப்பு வகுப்புகளை ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.*

*🌷இதன் ஒளிபரப்பு வரும் ஜூன் மாதம் முதல் துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு கேபிள் நிறுவனம் செய்து வருகிறது. இதை பொதுமக்களும் பாக்கலாம்.*

 *🌷இந்நிலையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் என சுமார் 53 ஆயிரம் பள்ளிகளில் இந்த சேனல் தெரியும் வகையில் இணைப்பு வழங்கப்பட உள்ளது.*

*🌷அதற்காக 55 ஆயிரம் பள்ளிகளில் புதியதாக டிவி பெட்டிகள் வாங்க வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள டிவி பெட்டிகளை சீர்செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.*

*🌷இதற்கான செலவுகளை அக்குமிலேஷன் நிதி, பெற்றோர் ஆசிரியர் கழக நிதிகளில் இருந்து செலவிட வேண்டும். உள்ளூர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மூலம் பள்ளிகளில் இணைப்பு பெற வேண்டும்.*

 *🌷பள்ளிக் கல்விக்கான சேனல், அரசு  கேபிள் நிறுவன அலைவரிசை எண் 200ல் பார்க்க முடியும்.*

*🌷ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடங்கள், கல்வி தொடர்பான நிகழ்வுகள், ஒவ்வொரு பாடத்திலும் வல்லமை பெற்ற ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தி அதை ஒளிப்பரப்புவது என்று பல்வேறு நிகழ்வுகள் இந்த சேனலில் வர உள்ளன.*

திங்கள், 20 மே, 2019

இணையதளத்தில் இருந்து அண்ணா பல்கலை சான்றிதழ் நகலை டவுன்லோடு செய்யலாம்...

இயற்கை பேரிடர் குறித்து அலர்ட் செய்யும் புதிய ஆப் ~ வீட்டிற்கு ஒருவர் வீதம் 1 கோடி பேர் டவுன்லோடு செய்ய ஏற்பாடு ~ பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்...

தமிழ்நாடு அரசு அகவிலைப்படி உயர்வு 3% GO_Ms_No_151




GO (Ms) No (262) __ 2019-2020 கல்வியாண்டு அரசு/உதவி பெறும் பள்ளிகளில் 1-5,6-8வகுப்பு மாணவர்களுக்கு புதிய சீருடை வழங்க அரசாணை வெளியீடு



பள்ளிக்கல்வி துறையில் கல்வி சேனல் தொடங்குதல்- அனைத்து பள்ளிகளிலும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் பயன்பாட்டில் இருத்தல் தொடர்பாக இயக்குனர் செயல்முறை


மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் ~ மாவட்டவரியாக பள்ளிகளின் பட்டியல்...

மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் வெளியிட்டுள்ள தமிழகத்தில் செயல்படும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் பட்டியல் நாமக்கல் மாவட்ட வாரியாக






*1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்புகள்-தமிழக கல்வித்துறை*

*🌷1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்புகள் - தமிழக கல்வித்துறை*

*பள்ளிக் கல்வியில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க எஸ்இஆர்டி முடிவு செய்துள்ளது.*

*பள்ளிக் கல்வியில் இதுவரை நடைமுறையில் இருந்த பாடத்திட்டத்தை, மாற்றி தற்கால வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கல்விக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த ஆண்டு 1,6,9,பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. அதன்பேரில் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.*


*மீதம் உள்ள 2,3,4,5,7,8,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. தற்போது அந்த புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தனியார் சில்லறை விற்பனை கடைகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.*

*இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10, பிளஸ் 2 வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் புதிய பாடத்திட்டத்தை புரிந்து கொண்டால் தான், மாணவர்களுக்கு பாடம் நடத்த  முடியும். அதனால் 1 லட்சத்து 30 ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த  பயிற்சி வரும் ஜூன் மாதம், மாநில கல்வி  ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறையின்  மூலம் நடத்தப்படுகிறது.*