திங்கள், 7 அக்டோபர், 2019

NISHTHA 5 நாள் பயிற்சி நடைபெறும் இடமும், தேதியும் நாமக்கல் மாவட்ட கல்வித்துறையால் வெளியீடப்பட்டுள்ளது



நாமக்கல்லில் 10ம் தேதி போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி துவக்கம்...

*அக்டோபர் 7- வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*

*🌷அக்டோபர் 7, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
----------------------------------------------
*1.கவியரசு முடியரசன் பிறந்த தினம்.*

*2.கவிஞர்.ஞானக்கூத்தன் பிறந்ததினம்*

*3.ரால்ப் வெச்வுட் கார்பன் பேப்பருக்கு காப்புரிமை பெற்றதினம்.*

*4.சோவியத்யூனியன் அனுப்பிய லூனா 3 நிலவின் புகைப்படங்களை எடுத்து அனுப்பிய தினம்.*
--------------------------------------------
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------

*🌷கவியரசு முடியரசன் பிறந்த தினம் இன்று.*

*கவியரசு முடியரசன் (அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர்.*

 *தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு-சீதாலக்ஷ்மி என்பார்க்கு அக்டோபர் 7, 1920இல் பிறந்தவர்.*

 *துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுப்பவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.*

 *காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.*

----------------------------------------------

*🌷ஞானக்கூத்தன் பிறந்த தினம் இன்று.*

*ஞானக்கூத்தன் (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். இவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் ஆகும். “திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைபெயராக ஞானக்கூத்தன் என்ற பெயரை ஏற்றார்.*

*இராமகிருஷ்ணன்,*
*சா. கந்தசாமி,*
*ந. கிருஷ்ணமூர்த்தி* *ஆகியோரோடு இணைந்து* *ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் 'கசடதபற'.*
*'கவனம்' என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.*
*'ழ' இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார்.*

*அவர் இயற்றிய*
*கவிதை நூல்கள்*

*அன்று வேறு கிழமை*
*சூரியனுக்குப் பின்பக்கம்*
*கடற்கரையில் சில மரங்கள்*
*மீண்டும் அவர்கள்*
*பென்சில் படங்கள்*
*ஞானக்கூத்தன் கவிதைகள்*
*என் உளம் நிற்றி நீ*
*இம்பர் உலகம்*
*கட்டுரை நூல்கள்*

*கவிதைக்காக*
*கவிதைகளுடன் ஒரு சம்வாதம்*
*பிற படைப்புகள்*
*கனவு பல காட்டல்*
*நம்மை அது தப்பாதோ?*
*சொன்னதை கேட்ட* *ஜன்னல் கதவு*
*அலைகள் இழுத்த பூமாலை*
*விருதுகள்*

*கவிஞர் ஞானக்கூத்தன் 2016 ஜூலை 27இல் தனது 77வது அகவையில் சென்னையில் காலமானார்*

----------------------------------------------


*🌷ரால்ஃப் வெச்வூட்*
*பிரதி எடுக்க உதவும் கார்பன் பேப்பருக்கு காப்புரிமை பெற்ற தினம் இன்று (1806).*

 *இங்கிலாந்தைச் சேர்ந்த ரால்ஃப் வெச்வூட், ஒரு நாள் மெல்லிய காகிதத்தைத் தட்டச்சு மையில் முழுவதுமாக நனைத்தார். அதை மை ஒட்டும் காகிதங்களுக்கு இடையில் வைத்து உலர்த்தினார். ஒரு வெள்ளைக் காகிதம், அதன் மேல் கார்பன் தாள், அதற்கு மேல் டிஷ்யூ காகிதத்தைப் பரத்தி தன்னுடைய இரும்புப் பேனா கொண்டு அழுத்தி எழுதிப் பார்த்தார். அவர் மேலே எழுதியவை காகித அடுக்கின் அடியில் இருந்த வெள்ளைக் காகிதத்தில் அப்படியே பதிந்தன. அவ்வளவுதான் கார்பன் பேப்பர் அற்புதமாகத் தயாரானது!*

*1806 அக்டோபர் 7இல் ரால்ஃப் வெச்வூட் ‘கார்பன் பேப்ப’ருக்குக் காப்புரிமை பெற்றார். பார்வை அற்றவர்களுக்கு உதவவே கார்பன் தாளை அவர் உருவாக்கினார்.*
--------------------------------------------


*🌷சோவியத் யூனியன் அனுப்பிய லூனா 3 நிலவின் புகைப்படங்களை எடுத்து அனுப்பிய தினம் இன்று (1959).*


*லூனா 3 (Luna 3 அல்லது E-2A தொடர்) நிலாவை நோக்கி ஏவப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டத்தின் மூன்றாவது விண்கலமாகும். இதற்கு முன்னர் பார்த்திடாத நிலவின் பகுதிகளைப் புகைப்படமெடுத்தது இவ்விண்கலம். இவ்விண்கலத்தின் வடிவம் நீள்வட்ட வடிவமாகும். 130 செ.மீ நீளமும் 120 செ.மீ விட்டமும் உடையது. இவ்விண்கலம் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தியதி ஏவப்பட்டது. இதன் எடை 278.5 கிலோகிராம் ஆகும். அக்டோபர் 6, 1959 அன்று நிலவுக்கு மிக அண்மையில் 6.200 கிலோமீட்டர் தொலைவில் சென்று புகைப்படம் எடுத்தது. நிலவின் மறுபுறத்தில் வடக்குத் தெற்காகப் புகைப்படமெடுத்து பூமிக்குத் திரும்பும் போது இதன் வட்டப்பாதை நிலவின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்பட்டது.*

 *அக்டோபர் 7, 1959 அன்று 40 நிமிடங்களில் 29 புகைப்படங்களை இவ்விண்கலம் எடுத்தது.*

*அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை தின நல்வாழ்த்துக்ககள்.*



ஞாயிறு, 6 அக்டோபர், 2019

*🌷இனி சத்துணவு பணியாளர்கள் சத்துணவு உண்பவர் பற்றிய விபரம் SMS ஆக அனுப்ப வேண்டும்.*

*🌷இனி சத்துணவு பணியாளர்களே தினந்தோறும்  SMS அனுப்ப வேண்டும் புதிய உத்தரவு வந்துள்ளதாக பத்திரிக்கை செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.இனி தலைமை ஆசிரியர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதிலிந்து விலக்கு.சத்துணவுப் பணியாளர் எந்த தேதியிலிந்து வட்டாரவளர்ச்சி அலுவலர்க்கு குறுஞ்செய்தி அனுப்புகிறாரோ அப்பொழுதிலிருந்து தலைமை ஆசிரியர் குறுஞ்செய்தி
அனுப்பத் தேவையில்லை.*👆

அரசு பள்ளிகளில் தொண்டு நிறுவனங்கள் அனுமதிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் -ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் அய்யா கண்டனம்


உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு ~இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி?

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் இணையதளம் மூலம் பெயர் சேர்க்கலாம் ~ மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு ~இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி?

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வட்டெழுத்து கண்டுபிடிப்பு ~11ம் நூற்றாண்டை சேர்ந்தது…

🌷அக்டோபர் 6, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*

*🌷அக்டோபர் 6, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*👇
---------------------------------------------------------        🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
*1.சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பரமசிவ சுப்பராயன் நினைவு தினம்.*

*2.உலக உணவு பாதுகாப்பு தினம்.*

*3.உச்சநீதிமன்ற முதல் பெண்நீதிபதியாக எம். பாத்திமாபீவி  நியமிக்கப்பட்ட தினம்.*

*4.வானியல் விஞ்ஞானி மேகநாத் சாகா பிறந்ததினம்.*

*5.புலவர்.புலமைப்பித்தன் பிறந்ததினம்.*

-----------------------------------------------------------      🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
*🌷சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பரமசிவ சுப்பராயன் நினைவு தினம் இன்று.*  


*பரமசிவ சுப்பராயன் (செப்டம்பர் 11, 1889 – அக்டோபர் 6, 1962) சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வராவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதர், இந்திய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர், மேலவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்தார்.*
----------------------------------------------

*🌷உலக உணவு பாதுகாப்பு தினம் இன்று.*


*நாம் உண்ணும் உணவை வீண் செய்ய வேண்டாம். என்றும் உணவு கொடு‌க்கு‌ம் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.*
----------------------------------------------

*🌷1950 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தில் 1989ஆம் ஆண்டு,*
*முதல் பெண் நீதிபதியாக  கேரளத்தைச் சேர்ந்த  நீதிபதி எம்.பாத்திமா பீவி நியமிக்கப்பட்ட தினம் இன்று.*

*பாத்திமா பீவி தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பதவி வகித்தார்(25 ஜனவரி 2007- 3 ஜூலை)*

----------------------------------------------
*🌷இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சித் துறைக்கு அடித்தளமிட்டவரும், வானியல் விஞ்ஞானியுமான மேகநாத் சாஹா (Meghnad Saha) பிறந்த தினம் இன்று(1893).*

*வங்கதேசத்தின் ஷரடோலி கிராமத்தில்  பிறந்தார். தந்தை மளிகை வியாபாரி. வறுமையால் மகனை வேலைக்கு அனுப்ப நினைத்தார். இவரது அறிவுக்கூர்மையால் கவரப்பட்ட ஆசிரியர்கள் அவரிடம் பேசி, படிப்பைத் தொடரச் செய்தனர்.*

*ஆரம்பக் கல்வி முடிந்ததும் சிமுலியாவில் இருக்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டான். விடுதி, உணவுச் செலவு அதிகமானதால் மிகவும் சிரமப்பட்டான். அனந்தகுமார் தாஸ் என்பவர் வீட்டில் தங்கிக்கொண்டு, அங்கு வீட்டு வேலைகள் செய்தபடியே படித்தான்.*

*படிப்பில் படுசுட்டி. சமுதாய நலனிலும் தீவிர நாட்டம் கொண்டிருந்தான். வங்கப் பிரிவினையின்போது 12 வயதுதான். ஆனாலும், போராட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருத்தப்பட்டான். வங்கதேச ஆளுநர், பள்ளிக்கு வந்தபோது, நண்பர்களைத் திரட்டி வகுப்புப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தினான். இதனால் உதவித் தொகை நிறுத்தப்பட்டது.*

*தாக்கா கல்லூரியில் வேதியியல், கணிதவியல், ஜெர்மன் மொழி கற்றார். உதவித்தொகை பெற்று பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். சத்யேந்திரநாத் போஸ், மகலனோபிஸ் ஆகியோர் இவரது சகாக்கள். பிரபுல்ல சந்திர ரே, ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து வழிகாட்டியவர்கள்.*

*இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியப் பொருளாதாரப் பணித் தேர்வு எழுதி அரசுப் பணியில் சேர விரும்பினார். அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியவர் என்று கூறி அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.*

*கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை ஜெர்மனில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார். சூரியன், நட்சத்திரங்களின் வெப்பநிலை, அழுத்தம் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டார்.*

*வெப்ப அயனியாக்க கோட்பாடு, கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாட்டை உருவாக்கினார். 1920இல் வெளிவந்த ‘சூரிய மண்டலத்தில் அயனியாக்கம்’ என்ற இவரது ஆய்வுக் கட்டுரை நவீன வானியலின் திறவுகோலாக அமைந்தது. கதிர்வீச்சு அழுத்தம் குறித்த ஆராய்ச்சியைப் பாராட்டி கல்கத்தா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.*

*கல்கத்தா பல்கலைக்கழகத்தின் உதவித்தொகையைப் பெற்று லண்டனில் 2 ஆண்டுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.* *அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத்* *தலைவராக*
*15 ஆண்டுகள் பணியாற்றினார்.இந்திய நாள்காட்டி முறையான ‘சக ஆண்டு’ குறித்து தெளிவாக விளக்கினார். விடுதலைப் போராட்ட வீரர்களுடன் இருந்த தொடர்பு காரணமாக இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.*

*கல்கத்தாவில் இவர் 1948இல் தொடங்கிய ஆராய்ச்சி நிறுவனம் ‘சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனம்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அயனியாக்