வியாழன், 10 அக்டோபர், 2019

NISHTHA 5 நாள் பயிற்சி நடைபெறும் இடமும் தேதியும் நாமக்கல் மாவட்ட கல்வித்துறை யால் வெளியிடப்பட்டுள்ளது



திருச்செங்கோடு மாவட்ட கல்வி அதிகாரி ( பொ) நியமனம் - Namakkal CEO



*அக்டோபர் 10 -வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.

*🌷அ

க்டோபர் 10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.உலக மனநல  தினம்.*

*2.உலக மரண தண்டனை எதிர்ப்பு  தினம்.*

----------------------------------------------

*🌹உலக மனநல தினம் இன்று.*


*உலக மனநல மையம்  சார்பில் 1992 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.*


*இந்தியாவில் 15 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மனநல மருத்துவக்கழகம் தெரிவிக்கிறது. மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது.*

----------------------------------------------

*➰➰உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் இன்று.*

*உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty)  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.*

*மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு (World Coalition Against the Death Penalty)  என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரச சார்பற்ற அமைப்புகள், வழக்குரைஞர் கழகங்கள், தொழிற் சங்கங்கள், மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் போன்றவற்றின் கூட்டமைப்பாகும்.*

*மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தை உலகளாவிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள் ஆகும். மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரசுகளில் ஆதரவைத் திரட்டல், சர்வதேச நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், மற்றும் மரண தண்டனை எதிராக தேசிய மற்றும் பிராந்தியக் கூட்டுறவை வலுப்படுத்தல் போன்றவற்றில் இவ்வுலகக் கூட்டமைப்பு கவனம் செலுத்துகிறது. ஜுலை 2011 அளவில் இக்கூட்டமைப்பில் மொத்தம் 121 உலக அமைப்புகள் அங்கத்துவம் வகிக்கின்றன.*

*2002, மே 13 இல் ரோம் நகரில் கூடிய இந்த அமைப்பின் மாநாட்டில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003, அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.*

*மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும்.*

*மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எது என்பது அவ்வச் சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள்,  அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத் தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன.*

*தலையை வாளினால் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல்,  கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல்,  தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல்,  நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.*

*கொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை. இவை தவிர அரசு சார்பான மதங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றனவும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவையும் மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன.*

*மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.*
----------------------------------------------

புதன், 9 அக்டோபர், 2019

மருத்துவக் காப்பீடு திட்டம் NHIS அட்டை பெறும் வழிமுறைகள்





          தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மருத்துவக் காப்பீடு திட்டம் NHIS அட்டை பெறும் வழிமுறைகள்


Natinal Health Insurance 2016 என்ற TNNHIS2016 App

கீழே App link கொடுக்கப்பட்டுள்ளது

 Click here....

https://play.google.com/store/apps/details?id=com.mdindia.tamilnaduemployee

*அக்டோபர்-9,வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*

**🌷அக்டோபர் 9, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.விடுதலைப் போராளி சே குவேரா நினைவு தினம்.*

*2.உலக அஞ்சல் தினம்.*

*3.தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவச்சலம் பிறந்த தினம்.*

---------------------*🌏அக்டோபர் 9, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
--------------------------------------------------

 *🔥விடுதலைப் போராளி சே குவேரா நினைவு தினம் இன்று.*

*இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான்* *பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது.*
*ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து,* *எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர்* *சே குவேரா.*
*அவர் இயற்பெயர்* *எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928), அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு, ஸ்பானிய‌ மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல்* *என்கின்றார்கள், அதாவது நமது தமிழில் வியப்பின் உச்சத்தில் ஒரு ஆச்சரியமாக‌ சொல்வோம் அல்லவா? அந்த ஆச்சரியமான‌ உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.*
*அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லப் பிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து* *பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பின்னணியில் வளர்ந்தார். ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என சகலரையும் படித்தார்.*
*முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதபடும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்,*
*பின் மருத்துவ கல்லூரியில் படித்தார் ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென்* *அமெரிக்காவைச் சுற்றினார். மனம் நொந்தார்.*
*காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிகிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம். ஆனால் மக்கள் ஏழைகள், இதுதான் அவரைச் சிந்திக்க வைத்தன.*
*அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைப்பொம்மையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது. பிடல் காஸ்ட்ரோ கைதுசெய்யபட்டு நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.*

*பொதுவாக தென்* *அமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்து பத்துக்களோடு* *வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த* *அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார்.*
*கனிம வளத்திற்காக, அமெரிக்க, ஐரோப்பிய* *நாடுகள் இப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அப்படி கியூபாவின் பெரும்* *செல்வம் கரும்பும்  சீனியும்.*
*நான் இரும்பு மனிதன்,* *எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக் கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ, அது தோல்வியில் முடிந்துகொண்டிருந்தது.*
*அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே. அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார். மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பிண்ணணியில் மக்களை* *இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திக்* *காட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார்.*
*ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது. உலகெல்லாம் மிரட்டிய* *அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை. ஆனாலும்* *மக்கள் சக்திமுன் என்ன செய்ய?*
*ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ,* *சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர் 1 இடம். நினைத்திருந்தால் சாகும்வரை கியூபாவில் ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.*
*பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி. தனக்கு அதில் விருப்பமில்லை.* *உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன்பணி என* *சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார்.*
*ஆம் எல்லை கடந்து கியூபா விடுதலைக்கு போராடியவர், இப்பொழுது* *ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.*
*ஆனால் ஆப்ரிக்கர்களை இணைப்பது அவருக்கு* *தமிழ்நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைப்பது போலவே வெகு சிரமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம்* *பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென் அமெரிக்கா திரும்பினார்.*
*இந்த காலகட்டத்திற்குள் சேவினை காணாத* *அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாகக் கதை கட்டிவிட்டது. காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை,*
*ஆனால் இப்படிச் சொன்னார், "எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைபட்ட இனத்திற்காக உழைத்துகொண்டிருப்பான்".*

*மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார். தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று. வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி.*

-----------------------------------------------------------------------------------


BIO METRIC - வருகைப் பதிவு செய்யும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது விடுப்பு விபரங்களை எவ்வாறு பதிவு செய்வது?....


👉முதலில் கீழ்க்கண்ட link ஐ பயன்படுத்தி *My attendance (AEBAS)* என்ற செயலியை 

 உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
👉பின்பு செயலியை open செய்து *STATE என்ற இடத்தில் Tamilnadu என்பதை உள்ளீடு செய்து Next என்பதை கிளிக் செய்ய வேண்டும் Department என்ற இடத்தில் Department of school education என்பதை உள்ளிடு செய்து  அதற்கு கீழ் My job /Designation என்னும் களத்தில் Employee  என்பதை டிக் செய்து proceed* என்பதை அழுத்தி உள் நுழைய வேண்டும்.
👉பின்பு *Login to BAS என்ற பக்கம் open ஆகும் . அதில் ஏதும் உள்ளீடு செய்யாமல் இடது மூளையில் 3 கோடுகள் symbol இருக்கும். அதை கிளிக் செய்தால் Menu ஒன்று open ஆகும் .அதில் கீழ் கடைசியில் login என்று இருப்பதை click* செய்ய வேண்டும்.

👉பின்பு *login biometric attendance system* என்ற பக்கம் open ஆகும் அதில் *username ,password,
confirmation code* என்ற மூன்று களங்கள் இருக்கும் அதில் *எதையும் உள்ளீடு செய்யாமல் அதற்கு கீழ் உள்ள forget password* என்பதை click செய்ய வேண்டும்.
👉பின்பு *Forget password என்ற தலைப்பில்* பக்கம் ஒன்று open ஆகும் .அதில் *user name என்ற களத்தில் உங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 8 இலக்க ID ஐ(ஆதாரின் கடைசி 8 இலக்கம்)* உள்ளீடு செய்து அதற்கு கீழ் உள்ள *select Mode* என்பதன் கீழ் உள்ள by SMS என்பதை select செய்து அதற்கு கீழ் உள்ள confirmation code ஐ சரியாக உள்ளீடு செய்து submit கொடுக்க வேண்டும்.
👉பின்பு Create new password என்ற பக்கம் open ஆகும் .அதில் புதிய password ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது உங்கள் *registered மொபைல் எண்ணிற்கு 6 இலக்க OTP* ஒன்று *குறுஞ்செய்தியாக* வந்திருக்கும் .அதை சரியாக உள்ளீடு செய்தவுடன் உங்களுக்கு *password updated successfully* என்று திரையில் தோன்றும்.
👉மீண்டும்* Menu வை click செய்து login என்பதை open செய்து *user name என்ற களத்தில் உங்களது 8 இலக்க biometric ID* ,ஐ உள்ளீடு செய்து *password என்ற களத்தில் நீங்கள் உருவாக்கிய password* ஐ உள்ளீடு செய்து, Confirm code  (captch code) ஐ சரியாக உள்ளீடு செய்து *sing in me* என்பதை கொடுத்தால் போதும் *உங்களுக்கான பக்கம் open ஆகிவிடும்.*.

👉இதில் *Leave என்ற option* ஐ கிளிக் செய்து தங்கள்து *விடுப்பு விபரங்களை* நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் உங்கள் *சுய விபரங்களில் தவறுகள் இருப்பின் மாற்றம் செய்து கொள்ளலாம்.*
குறிப்பு: *password உருவாக்கும் போதும் Atleast one uppercase one lower case one numeric one special symbol என்ற கலவையில் உருவாக்க வேண்டும் ..*

செவ்வாய், 8 அக்டோபர், 2019

Nhis 2016 App பயன்படுத்தும் முறைகள்.

 *NHIS 2016*


*Natinal Health Insurance 2016* என்ற *TNNHIS2016 App* எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கும் Video.

கீழே App link கொடுக்கப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.mdindia.tamilnaduemployee

 *விளக்கும் Video*


https://youtu.be/FqdRWiBkOR

*அக்டோபர்-8 -வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*

*🌷அக்டோபர் 8, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.✈விமானப்படை தினம்.*

*2.மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுதினம்*

*3.ஜெயபிரகாஷ் நாராயண் நினைவு தினம் இன்று.*

*4.இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான ஜி.என். ராமச்சந்திரன் பிறந்த தினம்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
----------------------------------------------

*✈ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்படுகிறது.*

*இந்திய விமானப்  படையானது 1932இல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று, இந்தியா ஆங்கிலேய ஆட்சியில் இருந்த சமயத்தில்  உருவாக்கப்பட்டது.*
-----------------------------------------------

 *🎼மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம் இன்று.*


*பாமர மக்களின் மொழியில் பொதுவுடைமை கருத்துகளை சொன்ன ஒரே கவிஞர்.*

*மக்களின் கவிஞன் என்ற பட்டத்திற்கு முற்றிலும் தகுதியானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.*

 *29 வருடங்களே இப்பூமியில் வாழ்ந்தவர்.* *ஆனால் இந்த பூமி உள்ள மட்டும் அழியா பாடல்கள் தந்தவர்.!*
*விவசாயி, மாடு மேய்ப்பவன், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரம், முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடி தொழில், உப்பளத் தொழில், மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டி ஓட்டுநர், அரசியல் பிரச்சாரகர், பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் இப்படி 17 தொழில்கள் புரிந்தவர்.! அந்த பாட்டாளிகளுக்கான மக்கள் கவிஞரை இன்று நினைவு கூர்வோம்.*

----------------------------------------------

*🌷ஜெயபிரகாஷ் நாராயண் நினைவு தினம் இன்று.*


*ஜெயபிரகாஷ் நாராயண் (அக்டோபர்*
*11 , 1902 - அக்டோபர் 8, 1979), பரவலாக JP என*
*அறியப்பட்டவர், இந்திய விடுதலை*
*இயக்கத்தில் பங்காற்றிய விடுதலை வீரர்*
*மற்றும் 1970களில் இந்திரா காந்தியை*
*எதிர்த்து போராடிய அரசியல் தலைவர்.*


*தமது அமைதியான முழு* *புரட்சி(Total*
*Revolution) என்ற* *முழக்கத்திற்காக பரவலாக*
*அறியப்பட்ட சோசலிசவாதி. 1977ஆம் ஆண்டு*
*உருவான ஜனதா கட்சி* *அரசுக்கு*
*வித்திட்டவர்.1998ஆம்* *ஆண்டு, அவரது*
*மறைவிற்கு பிறகு, அவராற்றிய சமூகப்*
*பணிக்காக பாரத ரத்னா* *விருது*
*வழங்கப்பட்டது.1965ஆம்* *ஆண்டு அவரது*
*பொதுச்சேவைக்காக* *மக்சேசே பரிசு*
*வழங்கப்பட்டது.*
----------------------------------------------

*🌷இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான ஜி.என். ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று.*

*கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் (1922). இவரது முழுப் பெயர், கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன். 1939இல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் முதலில் மின் பொறியியல் துறையில் சேர்ந்தார்.*

*ஆனால், விரைவில் தனது இயற்பியல் நாட்டத்தை உணர்ந்து கொண்டு இயற்பியல் துறையில் சேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து 1942இல் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய அறிவியல் கழகத்தில் சர்.சி.வி. ராமனின் கீழ் ஆய்வு மேற்கொண்டு 1947இல் டி.எஸ்சி. பட்டம் பெற்றார். பிறகு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றார்.*

*இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இவருக்கு ஆராய்ச்சியாளராக பணிபுரியும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்தியாவிலேயே பணிபுரிய விரும்பினார். 1952இல் இந்திய அறிவியல் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1952இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.*

*இந்தத் துறையின் கீழ் கிரிஸ்டலோகிராஃபி மற்றும் பயோபிசிக்ஸ் என்ற புதிய துறையை நவீன ஆய்வு வசதிகளுடன் சர்வதேசத் தரத்துடன் உருவாக்கினார். இது நாட்டின் தலைசிறந்த ஆய்வுநிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தசைநார் புரதத்தில் சவ்வு என்ற முக்கோண அமைப்பைப் பற்றி ஆய்வறிக்கை வெளியிட்டார். எக்ஸ்-கதிர் படிகவியல், கூடுதல் ஆப்டிகல் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.*

*இந்த ஆய்வுகள் எக்ஸ்-ரே துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது பெப்டைட் தொகுப்புகள் குறித்த ஆராய்ச்சிகள், புரதக் கூறுகளின் வடிவமைப்பைப் புரிந்துகொள்ள பயன்பட்டது. இது ‘ராமச்சந்திரன் பிளாட்’ என்று குறிப்பிடப்பட்டது.*

*மூலக்கூறு உயிரி இயற்பியலில் புரதங்களின் கட்டமைப்புப் பற்றிய தசைநார்ப் புரதத்தின் மும்மடங்கு எழுச்சுருள் வடிவம் (triple-helical model for structure of collagen) என்ற இவரது கண்டுபிடிப்பு புரதக்கூறுகளின் வடிவமைப்பின் அடிப்படைகளை அறிந்துகொள்ள உதவியத



திங்கள், 7 அக்டோபர், 2019

அரசுப்பணியில் இருக்கும் ஆசிரியர்களின் குழந்தைகள் விவரங்களை மட்டும் Emis ல் பதிவேற்றம் செய்வது ஏன்? - ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் கேள்வி

அரசுப்பணியில் இருக்கும் ஆசிரியர்களின் குழந்தைகள் விவரங்களை மட்டும் Emis ல் பதிவேற்றம் செய்வது ஏன்?

ஆசிரியர்களின் குழந்தைகள் மட்டுமல்ல, 
அமைச்சர்களின்,
உயரதிகாரிகளின் குழந்தைகள்  முதல் அடிப்படை ஊழியரின் குழந்தைகள் வரை தங்கள் குழந்தைகளை அரசு பள்ளி  சேர்க்கவேண்டும்... அந்தநிலையில் தான் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகள் தனியார் பள்ளிகளை விஞ்சும்!
 டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் பேட்டி...

NISHTHA 5 நாள் பயிற்சி நடைபெறும் இடமும், தேதியும் நாமக்கல் மாவட்ட கல்வித்துறையால் வெளியீடப்பட்டுள்ளது