ஞாயிறு, 13 அக்டோபர், 2019

*🌷அ
க்டோபர் 13, வரலாற்றில் இன்று.*

*🌷சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு தினம் இன்று.*


*நிலநடுக்கம், வெள்ளம், புயல், இடி, மின்னல், எரிமலை போன்றவை பேரழிவை ஏற்படுத்தும் இயற்கை இன்னல்களாகும். சாலை விபத்து, தீ விபத்து, நீரில் மூழ்குதல், கட்டிட விபத்து போன்றவை மனிதனின் கவனக் குறைவாலும், அறியாமையினாலும் தோற்றுவிக்கப்படும் இன்னல்களாகும். இன்னல்களின் தன்மைகளை அறிந்து, அவற்றால் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபட உதவும் உத்திகளை அறிந்து செயல்படுவதை பேரிடர் மேலாண்மை என்கிறோம்.*

*ஒன்றும் அறியா பள்ளிக் குழந்தைகள் கூட,*
*இத்தகைய பேரிடர்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கும்பகோணம் பள்ளி தீ விபத்து இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.*

*உலகெங்கும் பெரும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் ஆபத்து பெருகி வருகிறது. இதிலிருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்று மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை 1990 முதல்  அறிவித்தது. உலக நாடுகளில், குறிப்பாக வளரும் நாடுகளில் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் மோசமான விளைவுகள் நிகழாமல் செய்வதும், பாதிப்பைக் குறைப்பதும் இந்தப் பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.*

*உலகத்தில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானவை ஆசிய, பசிபிக் பகுதியில்தான் ஏற்படுகின்றன. புவியியல் அமைப்பாலும், வானிலையாலும், பூகோள அமைப்பாலும் இந்தப் பேரிடர்களில் பெரும்பாலானவை இந்தியாவில் ஏற்படுகின்றன.*

*புயலால் 41% நிலநடுக்கத்தால் 37%, வெள்ளத்தால் 16%, சூறாவளிப் புயலால் 2%, பனிப்புயல், எரிமலை, வெப்ப அலை, நிலச்சரிவு, பேரலைகளால் ஒவ்வொன்றுக்கும் 1% குறைவான உயிர்சேதம் ஏற்படுகிறது என ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.*

*நமது நாட்டில் 55% நிலப்பரப்பு நில நடுக்கத்தால் பாதிக்கப்படும் பகுதியாகும். இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளை ஐந்து மண்டலாகப் பிரித்துள்ளார்கள். தமிழ்நாடு இரண்டாவது மண்டலமாக உள்ளது.*
*🌷அக்டோபர் 13, வரலாற்றி
ல் இன்று.*

*🌷தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் இன்று.*

 *சங்கரலிங்கனார் இளமையில் நாட்டு விடுதலையில் நாட்டமும், ஈடுபாடும் கொண்டவராக விளங்கினார்.*

 *கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் சுதந்திரப் போராட்ட உரையினைக் கேட்டு விடுதலை உணர்வு பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1908ஆம் ஆண்டு முதல் தன்னை இணைத்துக் கொண்டார்.*

                *விருதுநகரில் ‘பங்கஜ விலாச வித்தயாபிவர்த்திச் சங்கம்’ என்னும் அமைப்பை 1914 ஆம் ஆண்டு ஏற்படுத்தி, பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சுவாமி திருவாலவாயர் செயல்பட்டார். சங்கரலிங்கனார் அச்சங்கத்தின் செயலாளராகத் தொண்டாற்றினார்.*

                *சங்கரலிங்கனார் செந்தியம்மாள் என்பவரை 1915 ஆம் ஆண்டு வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். தன் முதல் மகளுக்கு பங்கசம் என்று பெயர் சூட்டினார்.*

                *சங்கரலிங்கனார் ‘மாதர் கடமை’ என்னும் நூலை எழுதி 1920 ஆம் ஆண்டு வெளியிட்டார். நூல் வெளியீட்டைத் தொடர்ந்து சங்கரலிங்னாருக்கு மூதறிஞர் இராஜாஜியின் தொடர்பும் நட்பும் ஏற்பட்டது.*

                *அதே ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் இராஜாஜியை சந்தித்தது உரையாடினார்.*

 *அவரும் அவரது குடும்பத்தினரும் கதரே உடுத்துவதென*
*1922ஆம் ஆண்டு முதல் முடிவு செய்தனர். கதர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ‘விருதுநகர் கதர் வஸ்திராலயம்’ என்னும் கதர்க் கடையைத் திறந்தார். கதர் விற்பனையை அவர் அதிகமாகச் செய்ததைப் பாராட்டி 26.04.1926இல் சுதேசமித்திரன் இதழ் ஒரு பாராட்டுச் செய்தி வெளியிட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் கதர் வாரியத் தலைவராக தந்தை பெரியாரும், செயலாளராக எஸ்.இராமநாதனும் தொண்டாற்றினர்! விருதுநகருக்கு தந்தை பெரியாரை 1924 ஆம் ஆண்டு அழைத்து, த.இரத்தினசாமி நாடார் நினைவு வாசக சாலை சார்பாக பொதுக் கூட்டம் நடத்தினார்.*

      *காந்தியடிகளை 16.02.1925 பம்பாயில் சந்தித்தார். அன்று முதல் நாள்தோறும் நூல் நூற்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ‘மகாத்மா காந்தி கதர் வஸ்திராலயா’ என்னும் கதர்க்கடையில் பணியாற்றினார். 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் விருதுநகர் வருகை புரிந்த போது சிறப்பான ஏற்பாடுகளை சங்கரலிங்கனார் செய்தார். காந்திஜி தங்கிய கிராமத்திற்கு நகராட்சியின் ஒப்புதல் பெற்று ‘காந்தி தங்கல்’ என்று பெயர் சூட்டினார். காந்திஜி உப்புச் சத்தியாகிரகத்துக்காக 1930 ஆம் ஆண்டு தண்டியாத்திரை தொடங்கியபோது சங்கரலிங்கனார் மூன்று நாட்கள் காந்தியடிகளுடன் பயணம் மேற்கொண்டார்.*

   *காந்தியடிகளின் தலைமையில் 1930-31 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டக் காலத்தில், சங்கரலிங்கனார் சென்னை, திருச்செங்கோடு, ஈரோடு, காரைக்குடி ஆகிய நகரங்களுக்குச் சென்று தலைவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார். சங்கரலிங்கனார் கரூர், திருச்சி முகாம்களிலிருந்து சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தினார்.*

       *திருச்சி சத்தியாக்கிரகப் போராட்ட வழக்கில் ஆறு மாத‌ங்கள் கடுங்காவல் தண்டனையும், கரூர் வழக்கில் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்தார்.*

   *அவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளையும், அவர் சேமித்து வைத்திருந்த ரூபாய் நான்காயிரத்தையும் விருதுநகர் சத்திரிய மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு 1952 ஆம் ஆண்டு நன்கொடையாகக் கொடுத்தார். அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவாக உப்பில்லாக் கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். பெருந்தலைவர் காமராசர் பின்னர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்திற்கு இது முன்னோடியானதாகும்!*
 *தியாகி சங்கரலிங்கனார் பழம்பெரும் காங்கிரஸ் தியாகி; நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நம் தாய்த் தமிழகத்துக்கு 'மதராஸ்' என்னும் பெயர் இருத்தல் கூடாது; ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என உளமார விரும்பினார். தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை முன்னிட்டு 27.07.1956இல் விருதுநகர் தேசபந்து திடலில் “உயிர் பெரிதன்று – மானமே பெரிது” என்ற இலட்சியப் பிடிப்புடன் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பை மேற்கொண்டார். 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த அவர் 1956 அக்டோபர் 13இல் காலமானார்.*

*12 அம்சக் கோரிக்கைகள்:*

*1. மொழிவழி மாநிலம் அமைத்தல் வேண்டும்*

*2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல் வேண்டும்.*

*3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம் செய்தல் வேண்டும்.*

*4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கி, சைவ உணவு அளித்தல் வேண்டும்.*

*5. அரசுப் பணியி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் , சட்ட மேலவை மேனாள் உறுப்பினர் பாவலர் திரு க. மீனாட்சி சுந்தரம் அவர்களின் அறிக்கை


3,4,5 ம் வகுப்புகள் மாணவர்களுக்கு விளையாட்டுகள் போட்டி நடத்துதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை


அக்டோபர் 15 கை கழுவும் தினம் (Global Hand Washing Day) கொண்டாட அறிவுறுத்தல்- collector


Election format form



சனி, 12 அக்டோபர், 2019

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு-ஊதியம் நிர்ணயம் செய்தல் தெளிவுரைதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை நாள் 11.10.2019




NISHTHA - introduction guide

சாலச்சித்தி school external evaluation dashboard

*அக்டோபர் 12,-வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*

*🌷அக்டோபர் 12

, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.தமிழ்மொழியை செம்மொழி என்று இந்திய அரசு  அறிவித்த தினம் (2004)*

*2.*இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினம்.*

--------------------------------------------

 *🌷தமிழ் மொழியை  செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்த தினம் இன்று (2004).*

*ஒரு மொழி .. செம்மொழியாவதற்கு:*

*1.1500 முதல் 2000 ஆண்டுகள் வரை நூல்கள்* *பதிவுபெற்ற வரலாறு.*
*2. அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினரின் அரிய* *பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதப்படும் இலக்கிய நூல்கள்.*
*3. அம்மொழிக்கே உரியதாகவும் மற்ற மொழி குடும்பத்தினரிடமிருந்து கடன்பெறாததுமான இலக்கியப் பாரம்பரியம் கொண்ட*

*இந்த 3 தகுதிகளை உடைய மொழிகளையே செம்மொழி என்கின்றனர்.*

*மேலும்,  செம்மொழியாகக் கூறப்படுவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.*

*1. தொன்மை*
*2. தனித்தன்மை*
*3.பொதுமைப் பண்பு,*
*4.நடுவு நிலைமை,*
*5.தாய்மைத் தன்மை,*
*6.மொழிக்கோட்பாடு,*
*7.இலக்கிய வளம்,*
*8.உயர் சிந்தனை,*
*9.பண்பாடு, கலை,*
*10.பட்டறிவு*
*11.வெளிப்பாடு*
*ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்தான், அது செம்மொழியாகும்.*

*இந்த பதினோரு தகுதிகளை மட்டுமின்றி, இந்த தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான் தமிழ்மொழி என்பதை, தமிழகத்திலுள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம், ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.*

*தமிழ்,செம்மொழியே என*
 *முதன் முதலில் குரல் கொடுத்த தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர்.*

*தமிழ் செம்மொழி என்று முதன்முதலில் கூறிய வெளிநாட்டவர், அறிஞர் ராபர்ட் கால்டுவெல்.*

*அயர்லாந்து நாட்டில் "ஷெப்பர்ட்ஸ் காலனி' என்ற இடத்தில் வாழ்ந்த இவர், அங்கிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில், தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர்.*

*தமிழ் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளும், சென்னை பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்கலை கழகங்களும் குரல் கொடுத்தன.*

*மேலும்,  மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், முனைவர் ச. அகத்தியலிங்கம், வா.செ. குழந்தைசாமி, ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, அவ்வை நடராஜன், பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித்குமார்சட்டர்ஜி, கமில் சுவலபில், ஜார்ஜ் எல். ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் குரல் கொடுத்தனர்.*

*பல்லாண்டு காலம் போராட்டத்திற்கு பிறகு தமிழ் மொழியை  செம்மொழி என்று பிரகடனப்படுத்த வேண்டுமென்ற தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்கப்பட்டது. கடந்த 2004, அக்டோபர் 12இல் தமிழ் செம்மொழி என அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.*
-----------------------------------------------
*🌹இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினம் இன்று.*

*🇮🇳இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993 இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 , (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற* *ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது,*

*இங்கு பெற அல்லது வரப்படும் ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு* *செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப் படுகின்றது. அவற்றை* *ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து* *அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.*
*புகார்ரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல் ஆணையத்தின் முன் வைக்கவேண்டும்.* *அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்*
*தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.*

*டி பி எச் ஆர் ஏ பிரிவு 3 மற்றும் 4 ன் கீழ் வரையறுத்துள்ளதின்படி இவ்வாணையத்தின் நியமனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.*
-----------------------------------------------