ஞாயிறு, 1 டிசம்பர், 2019

💪ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீதான நடவடிக்கைகளை கண்டித்து டிச. ஆம் தேதி ஆா்ப்பாட்டம்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்களை பணி நீக்கம் செய்வதை கண்டித்து டிச.4 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற பொதுச் செயலாளா் க. மீனாட்சிசுந்தரம் தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.எத்தனை போராட்டங்கள் நடத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்து, அரசு பேசவில்லை. மாறாக போராட்டங்களில் ஈடுபட்டதிலிருந்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன.

பணி நீக்கம் செய்வது, பதவி உயா்வை பறிப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இன்னமும் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. அரசின் நடவடிக்கைகளை கண்டித்து டிசம்பா் 4ஆம் தேதி மாவட்ட ஒன்றியத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மேலும் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தோவு என்பதையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் வேண்டுகோளாகும் என்றாா்.

TN EMIS செயலி மூலம் TNTP -ல் உள்நுழைவது...

இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட TN EMIS எனும் செயலி மூலம் தற்பொழுது மாணவர் வருகை பதிவு செய்துகொண்டு வருகிறோம். அந்த செயலியிலேயே நாம் எவ்வாறு TNTP -ல் உள்நுழைவது, பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்...

```TN-EMIS APP```
⬇️
```INPUT- USERNAME ->```
(Aadhar last 8 digit)

```PASSWORD ->```
(Aadhar last 4 digit@birth of year)

⬇️
```CLICK TNTP icon```

⬇️
```Go to academic resources```

⬇️
```Select class```

⬇️
```Select term```

⬇️
```Select Subject```

⬇️
```Select topic```

⬇️
```Play video / download pdf```

Kindly Follow this steps and use TNTP...

TN-EMIS APP (0.0.7 UPDATE )...

Respected Sir/Madam, Sync issue faced in new TN-EMIS app is fixed. Kindly update your app through the below link or play store to get the latest fixed version. 

Please check TN-EMIS message section for official updates from EMIS team Thanks, EMIS Team.

Click here for update...
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.

மக்கள் எழுத்தாளர் இன்குலாப் நினைவு தினம் இன்று.


இன்குலாப்  தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார்.


சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.

இன்குலாப்பின் கவிதை:

ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
.
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
.
கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
.
எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.


'உலக எய்ட்ஸ் தினம் இன்று.

ஒரு தினத்தை நினைவுப்படுத்தி அனுசரிப்பதன் நோக்கம், அதற்கான முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணரவைப்பதாகும்.

 மருத்துவம், தொழில்நுட்பம் என பல துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுவிட்ட இன்றையச் சூழலில் நமக்குத் தேவை, எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி குறித்த போதிய விழிப்பு உணர்வு.


 முறையான விழிப்பு உணர்வுடன் செயல்படும்போது கொடிய நோய்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.


கணித மேதை
ஜி. எச். ஹார்டி அவர்களின் நினைவு தினம் இன்று.


ஹார்டி(Godfrey Harold  Hardy) (பிப்ரவரி 7, 1877-டிசம்பர் 1, 1947)என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர். அவர் எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்த அறிஞர்.

இவர் 1940 ஆம் ஆண்டு அவர் எழுதிய கணித அழகியல் சார்ந்த "ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்" என்ற கட்டுரைக்காக அவர் பெரிதும் மற்றவர்களால் அறியப்படுகின்றார்.

 மேலும் 1914 ஆம் ஆண்டு அவர் இந்திய கணித மேதையான சீனிவாச இராமானுஜன் அவர்களுடன் நட்புகொண்டு அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

பால் ஏர்டோசு என்பவர் ஒரு நேர்காணலின் போது அவரிடம் கணிதத்துறைக்கு அவர் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்று கேட்ட போது சற்றும் தயக்கமின்றி சீனிவாச இராமானுஜனைக் கண்டெடுத்ததே என்று பதிலளித்தார்.
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.


உரிமைப் போராளி & அணைகளுக்கான உலக ஆணையத் தலைவர் மேதா பட்கர் பிறந்த தினம் இன்று.

இந்தியாவில் பரவலாக அறிந்த உரிமைப் போராளி. குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர்.

மேதா பட்கர் இந்தியாவில் மும்பையில் வசந்த் கனோல்க்கர் என்னும் தொழிலாளர் தலைவருக்கும், இந்து கனோல்க்கருக்கும் மகளாகப் பிறந்தார்.

இவருடைய தந்தையார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருடைய தாயார், பொருளாதாரத்திலும், கல்வி, உடல்நலம் முதலியவற்றிலும் நலிவுற்ற பெண்களுக்கு உதவும் சுவதார் (Swadar) என்னும் நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார்.

இவருடைய பெற்றோர்களின் விழிப்புணர்வும் தொண்டும் இவருடைய கொள்கைகள் கருத்துகளை செதுக்கின.

இவர் டாட்டா சமூக அறிவியல் கழகத்தில் (Tata Institute of Social Sciences, TISS) சமூக பணியியலில் (Social work) முதுநிலை பட்டம் பெற்றார்.

முதுநிலை பட்டம் பெற்ற பின்னர் இவர் ஏழு ஆண்டுகளாக தன்னார்வலர் நிறுவனங்களில் பணியாற்றினார்.

மேதா பட்கர் 1991 ஆம் ஆண்டுக்கான ரைட் லைவ்லிஃகூடு பரிசு (Right Livelihood Award) பெற்றார்.

1999 ஆம் ஆண்டு விச்யில் இந்தியா இயக்கம் (Vigil India Movement) நிறுவனத்தின் எம். ஏ. தாமசு மனித உரிமைப் பரிசு (M.A.Thomas National Human Rights Award) பெற்றார்.

இவை தவிர பற்பல பரிசுகளும் பெருமைகளும் பெற்றுள்ளார். அவற்றுள் தீனா நாத் மங்கேச்கர் பரிசு (Deena Nath Mangeshkar Award), மகாத்மா பூலே பரிசு (Mahatma Phule Award), 1992இல் கோல்டுமன் சூழல்நலப் பரிசு (Goldman Environment Prize), பிபிசியின் (BBC) மிகச்சிறந்த அனைத்துலக அரசியல் பரப்புரையாளருக்கான பச்சை நாடா பரிசு (கிரீன் ரிப்பன் அவார்டு Green Ribbon Award), பன்னாட்டு மன்னிப்பு அவையின் மனித உரிமைக் காப்பாளர் பரிசு (Human Rights Defender's Award) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இவர் அணைகளுக்கான உலக ஆணையம் (World Commission on Dams) என்பதன் ஆணையராக உள்ளார்.
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.

விஜயலட்சுமி பண்டிட் நினைவு தினம் இன்று.


இவர் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி(Swarup Kumari) என்பது.

மோதிலால் நேருவின் மகளான இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி.


சோவியத் கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.

 ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் மோதிலால் நேரு குடும்பத்தில் அவரது தாக்கம் அதிகம் கொண்ட நபராகக் கருதப்பட்டார்.

1962 முதல் 1964 வரை மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த இவர் 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.

இவர்
இந்திரா காந்தியை கடுமையாக  விமர்சனம் செய்தவர்.

 இந்திராகாந்தி பதவிக்கு வந்த சில ஆண்டுகளில் இவர் முழுநேர அரசியலில் இருந்து விலகி டேராடூன் சென்று வாழ்ந்து வந்தார்.

1979 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

The Evolution of India (1958) மற்றும்
The Scope of Happiness: A Personal Memoir (1979) ஆகிய இரண்டும் இவர் எழுதிய ஆங்கில நூல்கள்.

இவரது மகள் நயந்தாரா சாகல் நன்கறியப்பட்ட நாவலாசிரியர்.
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.

எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) தினம் இன்று.

இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய ராணுவத்தில் ஒரு படை பிரிவாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை டிசம்பர் 1 1965இல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதும் ஆகும்.

நாம் பாதுகாப்பாக வாழ, நம் எல்லையை பாதுகாக்கும்  வீரர்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

சனி, 30 நவம்பர், 2019

நவம்பர் 30,
வரலாற்றில் இன்று.


இந்திய வரலாற்றாசிரியர்
ரூமிலா தாப்பர்
 (Romila Thapar) பிறந்த தினம் இன்று (1931).


இவரது முதன்மையான ஆய்வுப் பரப்பு பண்டைய இந்திய வரலாறு ஆகும். இவர் பல இந்திய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். அதோடு இந்திய வரலாறு எனும் மக்களுக்கான நூலையும் எழுதியுள்ளார். இவர் இப்போது புதுதில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவருக்கு இரு முறை பத்ம பூசண் விருது வழங்கப்பட்டாலும் அவற்றை இவர் ஏற்க மறுத்துவிட்டார்.


புகழ் பெற்ற பஞ்சாபிக் குடும்பத்தில் ரூமிலா தாப்பர் பிறந்தார். இவருடைய தந்தை படையில் பணியாற்றியதால் இந்தியாவின் பல பகுதிகளில் இவருடைய இளமைக் காலம் கழிந்தது. பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கீழை, ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளியில் 1958 இல் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாய்வாளர்
 ஏ. எல். பாஷம் தலைமையின் கீழ் லண்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் 1961 முதல் 1962 வரை குருசேத்திரா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றில் உயர்விரிவுரையாளராக இருந்தார். இதே பதவியில் 1963 முதல் 1970 வரை தில்லிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் இவர்
புது டில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றில் பேராசியரியராகப் பணியாற்றினார். இவர் இங்கு இப்போது தகைமைப் பேராசிரியராக உள்ளார்.

இவரது அரும்பெரும் பணி சார்ந்த நூல்களாக, அசோகரும் மவுரியரின் வீழ்ச்சியும், பண்டைய இந்தியச் சமூக வரலாறு: சில விளக்கங்கள், தொடக்கநிலை இந்திய வரலாற்றில் அண்மைக் கண்ணோட்டங்கள் (பதிப்பாசிரியர்), இந்திய வரலாறு, தொகுதி ஒன்று, தொடக்கநிலை இந்தியா: தோற்றம் முதல் கி.பி 1300 வரை ஆகியவை விளங்குகின்றன.



இவரது வரலாற்றுப் பணிகள் சமூக விசைகளின் ஊடாட்டம் வழியாக இந்து சமயத் தோற்றப் படிமலர்ச்சி விளக்கப்படுகிறது. இவரது அண்மை நூலாகிய சோமநாத் இந்த குஜராத் கோயில் பற்றிய வரலாறெழுதியல்களின் படிமலர்ச்சியை ஆய்கிறது.

இவரது முதல் நூலாகிய அசோகரும் மவுரியரின் வீழ்ச்சியும் 1961 இல் வெளியிடப்பட்டது. இதில் இவர் அசோகரின் தருமம் பற்றிய கொள்கையைச் சமூக, அரசியல் சூழலில் வைத்து, பல்வேறு இனக்குழுக்களும் பண்பாடுகளும் நிலவும் பேரரசை ஒருங்கிணைக்க கருதிய பிரிவினைவாதமற்ற பொது அறமாக மதிப்பிடுகிறார். இவர் மவுரியப் பேரரசின் வீழ்ச்சி, அப்பேரரசின் ஆட்சி, உயர்மையப்பட்டதாலும் அத்தகைய பேரமைப்பைச் சிறப்பாக ஆளும்ஆட்சியாளர்கள் இன்மையாலும் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.


தாப்பரின் இந்திய வரலாறு எனும் நூலின் முதல் தொகுதி மக்களுக்காக எழுதப்பட்டது. இந்நூலின் கருப்பொருள் தொடக்க காலத்தில் இருந்து ஐரோப்பியர் வருகை நிகழ்ந்த 16 ஆம் நூற்றாண்டு வரை அமைந்தது.

பண்டைய இந்தியச் சமூக வரலாறு எனும் தாப்பரின் நூல் தொடக்க காலகட்டத்தில் இருந்து கி.பி முதல் ஆயிரம் ஆண்டுகள் வரையிலான இந்து, புத்த சமயங்களின் ஒப்பீட்டு ஆய்வாகும். இது புத்த மதம் சாதியமைப்பை எதிர்த்து பல சாதிகளின் இணக்கமான உறவுக்கு பாடுபட்டது என்பதை விவரிக்கிறது.
குலக்கல்வியில் இருந்து அரசு உருவாக்கம் வரை எனும் இவரது நூல் கி.பி முதல் ஆயிரம் ஆண்டுகளில் நடுவண் கங்கைப் பள்ளத்தாக்கில் அரசு உருவாக்க நிகழ்வைப் பகுத்தாய்கிறது. இம்மாற்றத்தில் இரும்பும் ஏர்க்கலப்பையும் உந்திய வேளாண் புரட்சியின் பாத்திரத்தை படிப்படியாக விளக்குகிறார். இதில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்ட தொடர்ந்து இடம் மாறும் கால்வழி சார்ந்த முல்லைநிலச் சமூகம் ஒரிட்த்தில் நிலைத்து வாழும் உழவர்ச் சமூகமாக, அதாவது உடைமைகளும் செல்வத் திரட்சியும் நகர்மயமாக்கமும் விளைந்த சமூகமாக மாறியதைக் காட்டுகிறார்.


இவர் ஆசிய, ஐரோப்பா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று தம் வரலாற்று ஆய்வைச் செய்தார். சீனாவில் உள்ள புத்தர் காலக் குகைகளைப் பார்த்தார். ஆரியர்களின் முதல் வருகையில் இருந்து முஸ்லிம்களின் வருகை வரை உள்ள வரலாற்றை எழுதியுள்ளார். இந்திய நாடு மதச் சார்பில்லாமல் அமைய வேண்டியத் தேவைகளை வலியுறுத்திக் கூறுபவர். இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர். இவர் ஆணாதிக்க எண்ணம் பெண்களை அடக்கியும் ஒடுக்கியும் வைத்த வரலாறு எப்படி எப்போது தொடங்கியது பற்றியும் ஆய்வு செய்துள்ளார். அடிப்படை வாதம் பேசுவோரும் நேர்மையற்ற அரசியல்வாதிகளும் வரலாற்றைத் திரித்து மக்களிடம் பரப்பிவருகிறார்கள் என்பது அவர் கருத்து. அரசியல் நோக்கில் வரலாறு எழுதப்படுதல் கூடாது என்றும் வரலாறு அரசியலின் குறுகிய நோக்கங்களுக்கு பலி ஆகக் கூடாது என்றும் சொல்லி வருகின்றார்.


ஆக்ஸ்போர்டில் லேடி மார்கரட் ஆல் என்பதில் மதிப்புமிகு உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.
கார்னெல் பல்கலைக் கழகம், பென்சில்வேனியா பல்கலைக் கழகம், பாரீசு நகரில் உள்ள காலேஜ் தி பிரான்சு ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராக இருந்தார்.
1983இல் இந்திய வரலாற்றுப் பேராயம் என்னும் அமைப்பில் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1999இல் பிரிட்டிஷ் கல்விக்கழகத்தில் தொடர்பாளர் என்னும் பதவியிலும் இருந்தார்.


2004ஆம் ஆண்டில் அமெரிக்க நூலகப் பேராயத்தில் லூச் கட்டில் பதவியை இவருக்கு அளித்தனர்.
2008 ஆம் ஆண்டில் மனிதவியல் ஆய்வுக்காக பீட்டர் பிரவுன் என்பவரும் தாப்பரும் சேர்ந்து லூச் பரிசைப் பெற்றனர்.
சிக்காக்கோ பல்கலைக் கழகம் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் எடின்பர்க் பல்கலைக் கழகம்,
கல்கத்தா பல்கலைக் கழகம்,
ஐதராபாத் பல்கலைக் கழகம் ஆகியவை இவருக்குத் தகைமை முனைவர் பட்டங்கள் அளித்து பாராட்டின.


1992இல் இந்திய ஆரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்க முன்வந்தபோது, அந்த விருதை இவர் தமக்கு வேண்டாமென புறக்கணித்தார். குடியரசுத் தலைவரிடம், இவ்விருதைப் புறக்கணிப்பதற்கான காரணத்தையும் கடிதம் மூலம் தெரிவித்தார். கல்வி நிறுவனங்களிலிருந்தும், பல்கலைக்கழகங்களிலிருந்தும் வழங்கப்படும் விருதுகளை மட்டுமே அவர் ஏற்க அவர் தயாராக உள்ளதாகவும், அந்த விருதுகள் மட்டுமே அவருடைய துறைசார்ந்ததாக இருக்கும் என்பதாலும் அரசு விருதுகளைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தார்.