புதன், 15 ஏப்ரல், 2020

*🌐மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு- மத்திய உள்துறை அமைச்சகம்*

*(முழு விவரம்)*

*☀பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்படும்.*

*☀இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி.*

*☀மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும்.*

*☀வரும் 20ந் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி*

*☀கட்டுமானப்பணிகள் நடைபெறவும் மத்திய அரசு அனுமதி*

*☀வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி*

*☀மீன் இறைச்சி கடைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு*

*☀வங்கிகள், ஏ.டி.எம்கள், காப்பீட்டுத் துறைகள் இயங்கும்.*

*☀மே 3 வரை அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து*

*☀மக்கள் கூடும் அனைத்து இடங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்க மே 3 வரை தடை*

*☀மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி.*

*☀தொற்று அதிமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல்வைக்கப்படும்.*

*☀மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை.*

*☀ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி*

*☀ஏப்ரல் 20க்கு பின்  ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க்  அணிவது கட்டாயம்*

*☀சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் 20ந் தேதி முதல் இயங்க மத்திய அரசு அனுமதி*

*☀அனைத்து கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து சேவைகள் இயங்க தடை*

*☀அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்க அனுமதி*

*☀நியாய விலைக்கடைகள் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி*

*☀விவசாய பணிகளை மேற்கொள்ள தடை இல்லை.*

*☀தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும்!*

*☀ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி*

*☀ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி*

*☀ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம்*

*☀முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி*

“ஆரோக்கிய சேது” கைப்பேசி செயலி ~ கொரோனா பற்றிய எச்சரிக்கை நமது கையில்...


வீடியோ சந்திப்புகளுக்கு வழி செய்யும் 'ஜூம்' செயலி - பயன்பாடும், விழிப்புணர்வும்...

*மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவ எந்த தடையும் இல்லை.-தமிழக அரசு விளக்கம்.*

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

*🌐மே மாதம் 3 ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கினை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை.*

*21 நாள் ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் பிரதமர் உரை.*

*கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது.*

*ஊரடங்கால் சிலருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான்.*

*கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை சிறப்பான பாதையில் செல்கிறது.*

*ஊரடங்கால் சிலர் தங்கள் குடும்பத்தை பிரிந்து இருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது.*

*பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு நாட்டை மக்கள் அனைவரும் காத்து வருகின்றனர்.*

*கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும் படை வீரர்கள் போல் செயல்படுகின்றனர்.*

*ஊரடங்கை சிறப்பாக பின்பற்றி கொரோனா பரவலை மக்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் கட்டுப்படுத்தியுள்ளனர்.*

*கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.*

*கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக தவிர்த்துள்ளது.*

*கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களை விமான நிலையங்களில் முன்கூட்டியே பரிசோதனைக்கு உட்படுத்தினோம்.*

 *இந்தியாவில் முதல் கொரோனா உறுதிப்படுத்தும் முன்பே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை யாரும் மறுக்க முடியாது.*

*கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பல்வேறு நாடுகளை விட இந்தியாவின் செயல்பாடு சிறப்பானது.*

*கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் செயல்பாட்டை உலகமே பாராட்டுகிறது.*

*சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.*

*மற்ற எதையும் விட இந்திய மக்களின் உயிர் முக்கியமானது என்கிற அடிப்படையில் அரசு செயல்படுகிறது.*

*கொரோனாவுக்கு எதிராக மாநில அரசுகள் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றன.*

*கொரோனா ஊரடங்கு சமயத்தில் மாநில அரசுகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தன.*

*மத்திய அரசும், சுகாதாரத்துறை நிபுணர்களும் தற்போதும் உஷார் நிலையில் இருக்கின்றன.*

*ஊரடங்கை நீட்டிப்பது என்று பல்வேறு மாநிலங்கள் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டன.*

*மே 3ந் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.*

திங்கள், 13 ஏப்ரல், 2020

மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி மாற்றம் - தமிழ்நாடு மின்சார வாரியம் செய்தி வெளியீடு நாள் 13.04.2020


*✳ஊரடங்கு ஏப்ரல் 30
வரை நீட்டித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிக்கை 13.04.2020.*


LIC பிரீமியம் செலுத்த ஒரு மாதம் அவகாசம்...

தூரத்திலிருந்தே இதய துடிப்பை அறியும் கருவி கண்டுபிடிப்பு...

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

கொரோனா எதிரொலி
ஏழை நாடுகள் கடனில் மூழ்கும் அபாயம் ;
ஐ.நா எச்சரிக்கை
*********************
 'கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால், ஏழை நாடுகள், கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது' என, ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

ஐ.நா., சபை எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் துணைத் தலைவர், அமினா முகமது கூறியதாவது:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என அனைத்தும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து நின்றுள்ளன.

குறிப்பாக, ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல், வளர்ச்சியடைந்த நாடுகள் திணறி வருகின்றன.


இதனால், அவை, ஏழை நாடுகளுக்கு எப்படி உதவும் என, தெரியவில்லை. கொரோனாவால் ஏழை நாடுகள், கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது.இதைத் தவிர்க்க, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த, நீடித்த திட்டம் தேவை. காலநிலை மாற்றத்தை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதிலும், ஏற்ற, தாழ்வுகளை சரி செய்வதிலும், வறுமையை ஒழிப்பதிலும், உலகம் ஏற்கனவே பின்தங்கியுள்ளது. இப்போது, இதில் கொரோனா தொற்றும் சேர்ந்துள்ளது.

இவற்றிலிருந்து உலகை மீட்டு, ஏழை நாடுகள் மற்றும் பூமியை காப்பாற்ற, நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


'பெண்கள், குழந்தைகளை காப்பாற்றுங்கள்' ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:
நாம், பல ஆண்டுகளாக பாடுபட்டு, பாலின சமத்துவம், பெண்கள் உரிமைகள் போன்றவற்றில், சிறிது முன்னேற்றம் கண்டுள்ளோம். கொரோனா வைரஸ், இந்த முன்னேற்றத்தையும் அழித்து விடுமோ என, அச்சமாக உள்ளது. அதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

முடிவு எடுக்கும் நடவடிக்கைகளில், பெண் தலைவர்களுக்கு முக்கிய பங்கு அளிக்க வேண்டும். கடனுதவி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உட்பட அனைத்து விஷயங்களிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.