வெள்ளி, 12 ஜூன், 2020

தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் மு.பழனிசாமி அவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் பணியிடத்தை நிர்வகிக்கும் கூடுதல் பொறுப்பு~தமிழக அரசு ஆணை…

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் தருபவர் முழு விபரம் அவசியம் _தமிழக அரசு உத்தரவு.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் தருபவர் முழு விபரம் அவசியம்
_தமிழக அரசு உத்தரவு

*🦚BREAKING NEWS🦚* தமிழக சுகாதாரத்துறை செயலர் மாற்றம் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக திரு ஜெ. ராதாகிருஷ்ணன் நியமனம். தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அவர்கள் வணிகவரித் துறைக்கு மாற்றம்.

*🦚BREAKING NEWS🦚*

*தமிழக சுகாதாரத்துறை செயலர் மாற்றம்*

*தமிழக சுகாதாரத் துறை செயலாளராக திரு ஜெ. ராதாகிருஷ்ணன் நியமனம்*

*தமிழக சுகாதாரத் துறை  செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அவர்கள் வணிகவரித் துறைக்கு மாற்றம்*

*🌐ஜூன் 12, வரலாற்றில் இன்று:கூகுள் எர்த் மற்றும் லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்ட தினம் இன்று(2006).*

ஜூன் 12, வரலாற்றில் இன்று.

கூகுள் எர்த் மற்றும் லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்ட தினம் இன்று(2006).

*🌐ஜூன் 12, வரலாற்றில் இன்று:நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தினம் இன்று (1964)*

ஜூன் 12, வரலாற்றில் இன்று.

நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தினம் இன்று (1964).

நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.

தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது. 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது என என அறை கூவி, அறப்போர் வழியில் போராட்டத்தை தொடங்கிய இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லா போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர்.

இதனால் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதான நெல்சன் மண்டேலா மீது தென்னாப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு ஜுன் மாதம் இதே நாளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் தனது 95ஆவது அகவையில் காலமானார்.

*🌐ஜூன் 12, வரலாற்றில் இன்று:"வாண்டுமாமா" என்று அழைக்கப்படும் பிரபல குழந்தைகள்எழுத்தாளர் வி.கிருஷ்ணமூர்த்தி நினைவு தினம் இன்று( 2014 ).

ஜூன் 12, வரலாற்றில் இன்று.

"வாண்டுமாமா" என்று அழைக்கப்படும்
பிரபல குழந்தைகள் எழுத்தாளர்
வி.கிருஷ்ணமூர்த்தி
நினைவு தினம் இன்று
( 2014 ).

*🌐ஜூன்-12, வரலாற்றில் இன்று:சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று.*

ஜூன்-12, வரலாற்றில் இன்று.

 சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று.

உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

📘பள்ளிக் கல்வி – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிஏ பவுண்டேசன் தேர்வுக்கான இலவச நிகழ்நிலை Online வகுப்புகள் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!-நாள்: 10.06.2020



📘பள்ளிக் கல்வி – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு  சிஏ பவுண்டேசன் தேர்வுக்கான இலவச நிகழ்நிலை Online வகுப்புகள் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!-
நாள்: 10.06.2020

*🌸இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது:* *மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு* *50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!*

இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது: மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு
50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!
**************************

இடஒதுக்கீடு
உரிமை என்பது அடிப்படை உரிமை ஆகாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு
50% இடஒதுக்கீடு கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு
விளக்கமளித்துள்ளது.

 பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு கோரும் மனுவை விசாரிக்க மாட்டோம் என்றும்   உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும்,
இதுபோன்ற மனுக்களை ஊக்குவிக்க மாட்டோம் என கருத்து தெரிவித்துள்ளது.

 இதுமட்டுமல்லாது, மருத்துவப் படிப்பில்
50% இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும்  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

*😷முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு ₹100 அபராதம்.-கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை.*

முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்களுக்கு ரூ.100 அபராதம்!

சமூகவிலகலைக் கடைபிடிக்காத நிறுவனங்கள்,
கடைகளுக்கு  பூட்டு! சீல் !

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன்.இஆப., அவர்கள் எச்சரிக்கை!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

 கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். அதே போல் இருசக்கர வாகனங்களில் வரும் போதும், பொது இடங்களுக்குச் செல்லும் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அப்போதுதான் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொவருக்கு பரவாமல் தடுக்க முடியும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இதனை மீறுவோருக்கு அபராதமாக ரூ.100 விதிப்பதோடு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 மற்றும் தொற்று நோய்ச் சட்டம் 1897 ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கையும் தொடரப்படும். மேலும் அனைத்து ஷோரும்கள் மற்றும் அனைத்து கடைகளுக்கும் மக்கள் செல்லும் போது ஒரே நேரத்தில் கடையில் ஐந்து நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாத வர்த்தக நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு மேல் நடவடிக்கை தொடரப்படும். அரசு ஊடரங்கை அமல்படுத்தியபோதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நோய் பரவலை தடுக்க இயலாது.

 எனவே, பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கையை சுத்தப்படுத்தவும் , வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும் , சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து , அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான் , இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும் .
எனவே , பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன்.இஆப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.