ஞாயிறு, 18 அக்டோபர், 2020

👫தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்களின் இல்லத் திருமண விழா நிகழ்வுகள்.

👫தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்களின் இல்லத் திருமண விழா நிகழ்வுகள்.
பார்க்க இங்கே கிளிக் செய்க..

சனி, 17 அக்டோபர், 2020

*🌟பள்ளிக்கல்வி -நாமக்கல் மாவட்டம்-அனைத்து பள்ளிக் கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள இலைகள்,செடிகள் சுத்தம் செய்வது தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🌟பள்ளிக்கல்வி -நாமக்கல் மாவட்டம்-அனைத்து பள்ளிக் கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள இலைகள்,செடிகள் சுத்தம் செய்வது தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🌟ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய (Incentive) உயர்வை நிறுத்திய அரசாணை -37 க்கு விரிவான விளக்கம் அளித்து தலைமைச் செயலாளர் அரசாணை வெளியீடு...*

*🌟ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய (Incentive) உயர்வை நிறுத்திய அரசாணை -37 க்கு விரிவான விளக்கம் அளித்து தலைமைச் செயலாளர் அரசாணை வெளியீடு...
அரசாணையினைப் படிக்க இங்கே கிளிக் செய்க..

click here

அக்டோபர் 17, வரலாற்றில் இன்று.கண்ணதாசன் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 17, வரலாற்றில் இன்று.

கண்ணதாசன் நினைவு தினம் இன்று.

திரைப்பட பாடல்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது கண்ணதாசன் தான்.இலக்கியங்களை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக்கி தந்தவர் அவர்.

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981)  நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

அக்டோபர் 17,வரலாற்றில் இன்று.சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று.

அக்டோபர் 17,
வரலாற்றில் இன்று.

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று.

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறதுஉலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

வெள்ளி, 16 அக்டோபர், 2020

*🌟ஒரு ஆசிரியர் மருத்துவ விடுப்பு எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் MLக்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை கழிக்க கூடாது , மருத்துவ விடுப்பு என்பது ஊதியத்துடன் கூடிய விடுப்பு . சம்பளமில்லா விடுப்பு எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.*

*🌟ஒரு ஆசிரியர் மருத்துவ விடுப்பு எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் MLக்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை  கழிக்க  கூடாது , மருத்துவ விடுப்பு என்பது ஊதியத்துடன் கூடிய விடுப்பு . சம்பளமில்லா விடுப்பு எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.*

அக்டோபர் 16, வரலாற்றில் இன்று. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று (1799)

அக்டோபர் 16, வரலாற்றில் இன்று.

 வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று (1799).

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட வீர மன்னர் கட்டபொம்மன். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் மேலாண்மையை ஏற்க மறுத்து அவர்களுக்கு கப்பம் கட்ட மறுத்தார்.1797இல் முதன் முதலாக ஆங்கிலேயரான ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்து வீரபாண்டிய கட்டபொம்மனிடம் போரிட்டு தோற்றுப்போனார்.
1799இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டு பின்னர் கைப்பற்றப்பட்டது. பாஞ்சாலன்குறிச்சியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் புதுக்கோட்டையில் பதுங்கினார். எனினும் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார். 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16, ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் வீரப்பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

அக்டோபர் 16,வரலாற்றில் இன்று."உலக உணவு தினம்" இன்று.

அக்டோபர் 16,
வரலாற்றில் இன்று.

"உலக உணவு தினம்" இன்று.

ஐக்கிய நாடுகளின் "உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு" தொடங்கப்பட்ட நாளை நினைவுகூறும் வகையில் 1979ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் உலக உணவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உணவின் முக்கியத்துவம், வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தி, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

வியாழன், 15 அக்டோபர், 2020

அக்டோபர் 15, வரலாற்றில் இன்று.டாட்டா விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவை ஆரம்பித்த தினம் இன்று (1932).

அக்டோபர் 15, வரலாற்றில் இன்று.

டாட்டா விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவை ஆரம்பித்த தினம் இன்று (1932).

பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.

அக்டோபர் 15, வரலாற்றில் இன்று.சர்வதேச கைகழுவும் தினம் இன்று.

அக்டோபர் 15,
 வரலாற்றில் இன்று.

சர்வதேச கைகழுவும் தினம் இன்று.

Global Handwash Day.

முதன்முதலாக உலக கைகழுவும் தினம் 2008ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று கொண்டாடப்பட்டது. நம்மையும் அறியாமல் கைகளில் அசுத்தங்கள் இருக்கின்றன. இதில் பல்வேறு நோய்க்கிருமிகள் இருக்கின்றன. கைகளை நன்றாக கழுவாமல் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, ஜலதோசம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்கள் ஏற்படும். ஆகவே கைகளை சோப்பு போட்டு 30 வினாடியாவது கழுவ வேண்டும்.