வெள்ளி, 6 நவம்பர், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வெண்ணந்தூர் ஒன்றியச்செயற்குழு கூட்டம் 05. 11. 2020 (வியாழன்) நிகழ்வுகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  வெண்ணந்தூர் ஒன்றியச்செயற்குழு கூட்டம்  05. 11. 2020 (வியாழன் )மாலை 04.30 மணி அளவில் வெண்ணந்தூரில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஒன்றியத்தலைவர் இர.மனோகரன் தலைமை தாங்கினார்.மாவட்டத்
துணைத்தலைவர் வெ.இராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் 
முருக செல்வராசன்  இயக்க உரையாற்றினார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெ. பால முரளி  சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  வெண்ணந்தூர் ஒன்றியச் செயலாளர் இர. ஜெகநாதன் தீர்மானங்களை முன்மொழிந்து 
விளக்க உரை ஆற்றினார்.

ஒன்றிய செயற்குழு கூட்டத்தில்  ஒன்றிய துணைத் தலைவர் 
அ. ராஜேந்திரன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் 
 ம. சுரேஷ்குமார் ,
திருமதி அனந்தநாயகி , திருமதி வைரம். திருமதி மோகனசுந்தரி  ,
திருமதி சுகுணா , திருமதி சித்ரா , ஆகியோர் கலந்து கொண்டார்கள் .
கூட்ட நிறைவில்  துணைச்செயலாளர் திருமதி. ப வசந்தா  நன்றியுரை ஆற்றினார்கள்.
இக்கூட்டத்தில்  12் அம்சக்கோரிக்கைகள் வடிவமைக்கப்பட்டு நேரடி நடவடிக்கைகள் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றிய ஆசிரியர்களின் 12 அம்சக்கோரிக்கைகள்!09.11.2020இல் சுவரொட்டி இயக்கம்!12.11.2020இல் கோரிக்கை ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றிய ஆசிரியர்களின் 12 அம்சக்கோரிக்கைகள்!
09.11.2020இல் சுவரொட்டி இயக்கம்!
12.11.2020இல் கோரிக்கை ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் அறிவிப்பு!

*📘✍️நாமக்கல் மாவட்டம் சிறுபான்மையினர் நலம்-கல்வி உதவித்தொகை-2020-2021 ஆம் ஆண்டிற்கு 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு, பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகைகள் மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை ஆன்லைன் மூலம் செயல்படுத்துதல் -கூட்டம் நடத்துதல் தொடர்பாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கடிதம்.*

*📘✍️நாமக்கல் மாவட்டம் சிறுபான்மையினர் நலம்-கல்வி உதவித்தொகை-2020-2021 ஆம் ஆண்டிற்கு 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு, பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகைகள் மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை ஆன்லைன் மூலம் செயல்படுத்துதல் -கூட்டம் நடத்துதல் தொடர்பாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கடிதம்.*

*📰தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட ஒன்றியச்செயலாளர்கள் கூட்டம் இந்து தமிழ்,தினமணி,தினத்தந்தி நாளிதழ் செய்திகள்.*

*📰தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட ஒன்றியச்செயலாளர்கள் கூட்டம் இந்து தமிழ்,தினமணி,தினத்தந்தி நாளிதழ் செய்திகள்.*

வியாழன், 5 நவம்பர், 2020

திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களை ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் இன்று (05/11/2020) பிற்பகல் சந்திப்பு.

🍁🍁🍁🍁🍁🍁🍁
*திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் சந்திப்பு*


திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களை ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் இன்று (05/11/2020) பிற்பகல் சந்தித்தனர்

சந்திப்பின் போது ஆசிரியர் கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. தீபாவளி முன்பணம் கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்க பெறும் வகையில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும்,  
கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீதும் விரைந்து தீர்வு காணவும் வலியுறுத்தப்பட்டது.


இச்சந்திப்பில் மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் ,
மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர்,  மாவட்டப் பொருளாளர் திரு சு.பிரபு , மாநில பொதுக்குழு உறுப்பினர் 
திரு.இரா.ரவிக்குமார்,    
திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் திரு.சி.கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் இன்று (05/11/2020) முற்பகல் சந்திப்பு..

*நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் சந்திப்பு*

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  பொறுப்பாளர்கள் இன்று (05/11/2020) முற்பகல் சந்தித்தனர் .
விலையில்லா பாடநூல்களை பள்ளிகளுக்கே கொண்டு சேர்த்திட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கியும்,
இராசிபுரம் ஒன்றிய ஆசிரியர்களின் ஈடிஎஸ் கோரிக்கை, நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர்களின்  கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொண்டதற்கு மாவட்ட அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

இச்சந்திப்பில் மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் ,
மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர்,  மாவட்டப் பொருளாளர் திரு சு.பிரபு , மாநில பொதுக்குழு உறுப்பினர் 
திரு.இரா.ரவிக்குமார்,  மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி ஆகியோர் பங்கேற்றனர்.

*📘புதுசா பழசா? ஓய்வூதியத் திட்டகுளறுபடி ஓயவில்லை மவுனம் காக்கும் வல்லுநர் குழு- தத்தளிக்கும் அரசு ஊழியர்கள்!*

*📘புதுசா பழசா? ஓய்வூதியத் திட்டகுளறுபடி ஓயவில்லை மவுனம் காக்கும் வல்லுநர் குழு- தத்தளிக்கும் அரசு ஊழியர்கள்!*

*☀️தேர்வுநிலை/சிறப்புநிலை கோரும் விண்ணப்பங்கள்,பதிவுத்தாள் மற்றும் கருத்துரு விண்ணப்பங்கள்..புதியது*

*☀️தேர்வுநிலை/சிறப்புநிலை  கோரும் விண்ணப்பங்கள்,பதிவுத்தாள் மற்றும் கருத்துரு விண்ணப்பங்கள்..புதியது*
விண்ணப்பங்களை படிக்க மற்றும் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க.

*📘✍️பள்ளிகள் திறப்பு - கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக - தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் உத்தரவு.

*📘✍️பள்ளிகள் திறப்பு - கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக - தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் உத்தரவு.

 
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9-ம் தேதி 12 ஆயிரம் பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3,000 உயர்நிலைப்பள்ளிகள், 3,000 மேல்நிலை பள்ளிகள், 6,000 தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளில் கருத்துக்கேட்கப்படுகிறது. 

 
பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடக்கும் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெற்றோர் கருத்துக்களை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கேட்பு முடிவுகளை அன்று மாலையே அறிக்கையாக தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.