செவ்வாய், 1 டிசம்பர், 2020

*☀️ பள்ளி வரைபட பயிற்சி 2020--2021 மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குநர் கடிதம்*

*☀️ பள்ளி வரைபட பயிற்சி 2020--2021 மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குநர் கடிதம்*

இயக்குநர் கடிதத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

*🌻SPD PROCEEDINGS - Samagra Shiksha - Online teacher Development Programme on ICT facilities - Level 1 - schedule for 5 days from 3.12.20 to 5.12.20, 7.12.20 & 8.12.20-reg*

*🌻SPD PROCEEDINGS - Samagra Shiksha - Online teacher Development Programme on ICT facilities - Level 1 - schedule for 5 days from 3.12.20 to 5.12.20, 7.12.20 & 8.12.20-reg*

*🌻தவறான பேங்க் அக்கவுண்டில் பணம் சென்று விட்டால் அதை எப்படி திரும்பி பெறுவது.*

*🌻தவறான பேங்க் அக்கவுண்டில் பணம் சென்று விட்டால் அதை எப்படி திரும்பி பெறுவது.*
 
*ஈமெயில் , போன் கால் வழியாக பிரான்ஜ் மேனேஜரிடம் தகவல் அளியுங்கள் மேனேஜரிடம் கொடுங்கள்.*



*அக்கவுண்ட் மற்றும் பணம் தொடர்பான தகவல் பேங்க் கடுமையான இதில் நடவடிக்கை எடுக்கும் இப்பொழுதெல்லாம் நடக்கும் எல்லாம் வேலைகளும் டிஜிட்டல் மூலம் தான் நடைபெறுகிறது மற்றும் இதனுடன் நாம் எந்த ஒரு சிறிய முதல் பெரிய வேலைகள் இருந்தாலும், விடுமுறை நாட்களில் அதை முடிக்க நினைப்போம் அது போல ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்வதற்கு இன்டர்நெட் உதவி தேவை வேண்டி இருக்கிறது, இதனுடன் நம்முள் பல பேர் அக்கவுண்ட் நமபர் என்டர் செய்யும்போது தவறுதலாக ஒன்று அல்லது இரண்டு நம்பரை மாற்றி போட்டு விடுகிறோம்.*


*இதனுடன் நாம் அனுப்பிய பணம் வேறு ஒரு நபருக்கு சென்று விடுகிறது இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் பல பேர் அவர்கள் பணத்தை பறி கொடுத்தது இருக்கிறார்கள் இதற்க்கு என்ன செய்வது என்பதே தெரியாமல் போய்விடுகிறது இதனுடன் மேலும் பல பேர் அந்த பணத்தை திருப்பி எப்படி பெறுவது என்பதை பற்றி தெரியாமல் ஏமாந்து போகிறார்கள், அப்படி நினைக்காமல் நீங்கள் உங்கள் பணத்தை எளிதாக திரும்ப பெறலாம் உங்களின் அக்கவுண்டிலிருந்து பணத்தை தவறுதலாக வேறு ஒரு அக்கவுண்டில் பணத்தை ட்ரான்ஸ்பர் செய்து விட்டிர்கள் என்றால், அதை நீங்கள் எளிதாக திருப்பி பெறலாம்.*

 
*இதற்க்கு ஒரு சிறிய வேலை செய்ய வேண்டும்,நீங்கள் தவறுதலாக வேறு ஒருவரின் அக்கவுண்டில் பணம் அனுப்பி விட்டிர்கள் என்றால், முதலில் இதை பற்றி பேங்கில் தகவல் கூற வேண்டும், நீங்கள் இந்த தகவலை போன் அல்லது ஈமெயில் மூலம் தெரிவிக்கலாம் அல்லது நீங்கள் பேங்க் மேனேஜரிடம் சென்று இந்த தகவலை வழங்கலாம்.*


*ப்ரான்ஜ் மேனேஜரிடம் உங்கள் அக்கவுண்ட் நம்பர், இதனுடன் எந்த அக்கவுண்டில் பணம் அனுப்பினீர்களோ அந்த அக்கவுண்ட் நம்பர், தேதி, நேரம் மற்றும் பணம் எவ்வளவு மதிப்பு என்பதை பற்றி தகவல் வழங்க வேண்டும். இதன் பிறகு, நீங்கள் பணத்தை எந்த பேங்கில் அனுப்பினீர்களோ அந்த பேங்கை பேங்க் தொடர்பு கொள்ள வேண்டும். புகாரை தாக்கல் செய்த பிறகு, உங்கள் பணத்தை திரும்பப் பெற வாடிக்கையாளர் இடம் இருந்து திரும்பி தர அனுமதி அளிக்கும்.*

 
*இதனுடன் பேங்க் முழு நடவடிக்கையும் எடுத்து உங்கள் பணத்தை அந்த நபரிடம் இருந்து வாங்கி தந்து விடும் .புகாரைப் பெற்ற பிறகு, பேங்க் வாடிக்கையாளருக்கு எதிராக ஒரு புகாரை பதிவு செய்யலாம் மற்றும் ரிசர்வ் பேங்கிங் படி, பேங்க் அக்கவுண்டில் பணத்தை மாற்றுவதற்குப் பிறகு கண்டிப்பான அறிவுறுத்தல்களை எடுக்க வேண்டும்.*

*🌻ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-2021 கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.30.11.2020*

*🌻ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2020-2021 கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.30.11.2020*
செயல்முறைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க..

*🌻ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21 ஆம் கல்வி ஆண்டு Quality Components Teacher Exchange Programme - மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல் - சார்பு - மாநிலத் திட்ட இயக்ககம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

*🌻ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21 ஆம் கல்வி ஆண்டு Quality Components Teacher Exchange Programme - மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல் - சார்பு - மாநிலத் திட்ட இயக்ககம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

திங்கள், 30 நவம்பர், 2020

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூர் பாலாஜி -இன் ஹோட்டல்.நாள்:28.11.2020 அன்றைய நிகழ்வுகள்.*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூர் பாலாஜி -இன் ஹோட்டல்.நாள்:28.11.2020 அன்றைய நிகழ்வுகள்.
இயக்க நிறுவனர்,பொதுச்செயலாளர் பாவலர் ஐயா படத்திற்கு மரியாதை.
தலைமை :முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் மாநிலத் தலைவர்.
மாநிலச் செயலாளர் திரு.முருக.செல்வராசன் அவர்கள் உரை.
நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் உரை.

பங்கேற்பாளர்கள் உடனான புகைப்படங்கள்...

*🔖தமிழகத்தில் ஊரடங்கு 2020 டிசம்பர் 31வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை எண் 673 நாள்:30.11.2020 வெளியிட்டு வழிகாட்டுநெறிமுறைகளை பிறப்பித்துள்ளது.

*🔖தமிழகத்தில் ஊரடங்கு 2020 டிசம்பர் 31வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை எண் 673 நாள்:30.11.2020 வெளியிட்டு வழிகாட்டுநெறிமுறைகளை பிறப்பித்துள்ளது.அரசாணையை படிக்க இங்கே கிளிக் செய்க.

click here.

*✍️வட்டாரக் கல்வி அலுவலகங்களில் மண்டல தணிக்கைத் துறை அலுவலர்களால், ஆசிரியர்களின் பணிப் பதிவேடு தொடர்பான தணிக்கை நடைபெறும் போது, தணிக்கை அலுவலர்களால் பொதுவாக சுட்டிக் காட்டப் படும் சிறு சிறு குறைபாடுகளும்,ஆசிரியர்களுக்கான ஆலோசனைகளும் ஒரு பார்வை.*

*✍️தணிக்கை தொடர்பாக ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள்!*

வட்டாரக் கல்வி அலுவலகங்களில் மண்டல தணிக்கைத் துறை அலுவலர்களால், ஆசிரியர்களின் பணிப் பதிவேடு தொடர்பான தணிக்கை நடைபெறும் போது, தணிக்கை அலுவலர்களால் பொதுவாக சுட்டிக் காட்டப் படும் சிறு சிறு குறைபாடுகள்: 


1. ஒரு ஆசிரியர் அரசுப் பணிக்கு வரும் முன்னரே, கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால், பணியில் சேரும் முன்னரே உயர் கல்வி பெற்றுள்ளார் என்ற பதிவை வட்டாரக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து பணிப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

 
2. உயர் கல்வி பயில்வதற்கான முன் அனுமதி ஆணை வழங்கப் படும் விவரம், 2012 ஆம் ஆண்டிற்கு பின்பு தான், பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப் படுகிறது. அதற்கு முன்னர் ஆணை மட்டும் தான், வழங்கப் பட்டது. ஆனால் தற்போது தணிக்கைத் துறை அலுவலர்கள், பணி நியமன நாள் முதல் இன்று வரை, பணிப் பதிவேட்டில் பதிவு செய்துள்ள அனைத்து கூடுதல் கல்வித் தகுதிகளுக்கும் முன் அனுமதி அல்லது பின்னேற்பு பதிவு செய்வது கட்டாயம் என வலியுறுத்துகின்றர். ஊக்க ஊதியம் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முன் அனுமதி / பின்னேற்பு ஆணையை வட்டாரக் கல்வி அலுவலரிடம் காண்பித்து, பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 


3. 10 ஆம் வகுப்பு முதல், நாம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்கும் அனைத்து கல்வித் தகுதிகளுக்கும் உண்மைத் தன்மைச் சான்றினைப் பெற்று பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். அதன் நகலும் ஆசிரியர் கைவசம் வைத்திருக்க வேண்டும். 

 
4. பணிப் பதிவேட்டில், தற்காலிக தேர்ச்சி சான்று மட்டும் பதிவு செய்திருத்தல் கூடாது. அப்படிப்பிற்கான பட்டச் சான்றை பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். 


5. இதற்கு முந்தைய தணிக்கையின் போது, ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக் காட்டப் பட்டிருந்தால், அவற்றை நிவர்த்தி செய்திருக்க வேண்டும். 


6. பணியிட மாறுதல் ஏதேனும் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப் படாமல் விடுபட்டிருந்தால், அவற்றை உரிய ஆவணங்களின் அடிப்படையில் விடுதல் பதிவாக பதிவு செய்ய விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும். 

 
7. CL, RH தவிர பிற அனைத்து விடுப்பு வகைகள், ஈட்டிய விடுப்பு பணப் பயன், ஈட்டிய விடுப்பு கையிருப்பு, பணிக் காலம் சரி பார்ப்பு இவற்றில் ஏதேனும் விடுபட்டிருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்ட காலம், ஊதியமில்லா விடுப்பாக பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். கலந்து கொண்ட போராட்ட நாட்களுக்கு ஏற்ப, ஆண்டு ஊதிய உயர்வு தள்ளி போயிருக்க வேண்டும். 



8. குடும்ப உறுப்பினர் விவரம், வாரிசு நியமனம் இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் உடனே விண்ணப்பித்து சரி செய்து கொள்வது நல்லது. 


 
9. பி.எட். கற்பித்தல் பயிற்சிக்காக, அரைச் சம்பள விடுப்பு எடுத்திருந்தால், அதை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 



10. பணிப் பதி வேட்டின் நகல் தங்களிடம் இருந்தால், அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

*📘பாடத்திட்டம் குறைப்பது குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வரும் திங்கட்கிழமை முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து சில நாட்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.*

*📘பாடத்திட்டம் குறைப்பது குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வரும் திங்கட்கிழமை முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து சில நாட்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.*


பாடத்திட்டம் குறைப்பது குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வரும் திங்கட்கிழமை முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து சில நாட்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசாணைக்கு ஏற்ப கல்வி தொலைக்காட்சியிலும், ஆன்லைன் மூலமும் பாடங்கள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் என்றார். மேலும், தற்போதைய சூழ்நிலையில் அரையாண்டு தேர்வு நடைபெறாது என்றும் தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கை குறித்து நிபுணர் குழு, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர் இடமிருந்து கருத்துக்களை திரட்டி வருவதாக தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு முதல் புதிய கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.