வியாழன், 7 ஜனவரி, 2021

பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன?இந்தப் புதிய Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள்.

*பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன?*

இந்தப் புதிய Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள்.  

1.WHATSAPP ல் நீங்கள் அனுப்பும் Message யை அந்த நிறுவனம் சேகரித்துக் கொள்ளும்.

அதை FACEBOOK யை சார்ந்துள்ள அவர்களின் நிறுவனத்திற்கு வணிக முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள். 

(For Ex.) எடுத்துக்காட்டாக

நீங்கள் உங்கள் நண்பருடன் பேசும் செய்தியை  (Message)  WHATSAPP நிறுவனம் எடுத்து  FACEBOOK , INSTAGRAM etc., போன்ற அவர்களின்  வலைத்தளத்தை நீங்கள்  பயன்படுத்தும். நீங்கள் பேசியதற்கு சம்பந்தமாக விளம்பரங்களைத் தருவார்கள்.

2.நீங்கள் அனுப்பும் forward messages யை இதுவரை WHATSAPP சேகரிக்கவில்லை. ஆனால் இனிமேல் அந்த forward messages யும் தங்களது சர்வரில்  (Server ) சேகரித்துக் கொள்வார்கள்.

3.WHATSAPP ல் இருக்கும் Features (அம்சங்களை ) பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களின் Privacy Policy க்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும்.

அவர்கள் நீங்கள் பயன்படுத்தும் Features ல் உள்ள தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.

(For Ex.)எடுத்துக்காட்டாக

உங்களுடைய Location யை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் இருக்கும் இடத்தின் தகவல்களையும் WHATSAPP நிறுவனம் சேகரிக்கும். 

Location மட்டும் அல்ல உங்கள் நண்பருக்கு அனுப்பும் Voice message
 (குரல் செய்தி )யும் கூட சேகரிப்பார்கள்.

4.நீங்கள் அனுப்பும் செய்தி செல்லவில்லை என்றாலோ அல்லது அதை நீக்கி விட்டீர்கள் (Delete) என்றாலோ அந்த செய்தி அங்கு நீக்கப்படாது .

அது WHATSAPP நிறுவனத்தின் Server ல் 30 நாட்கள் சேகரித்து வைக்கப்படும்.
30 நாட்களுக்குப் பின் நீக்கப்படும்.

5.WHATSAPP நிறுவனம்  உங்களிடமிருந்து எடுக்கும் தகவல்கள் என்னவென்றால் 
நீங்கள் என்ன Mobile பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அதில் இருக்கும் OS (android or IOS ) என்னவென்றும் 
என்ன சிம் பயன்படுத்துகிறீர்கள் அதன் நம்பர்,எவ்வளவு சிக்னல் (signal )           உள்ளது,பேட்டரியின் அளவு நீங்கள் என்ன Browser பயன்படுத்துகிறீர்கள் என்றும் சேகரிப்பார்கள்.
    
உங்கள் Mobile ன் IP Address,Time Zone, Language போன்ற பல தகவல்களை                 சேகரிக்க உள்ளனர்.

6. நீங்கள் புதிதாக வந்த WHATSAPP PAYMENT யை பயன்படுத்துகிறீர்கள் என்றால் யாருக்கு நீங்கள் பணம் அனுப்புகிறீர்கள் என்ற தகவல்களையும் சேகரிக்க உள்ளனர்.


நீங்கள் Privacy Policy மற்றும் Terms Of Service ஒப்புதல் (agree) கொடுத்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள  அனைத்து தகவல்கையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.

*📘உண்மைத்தன்மை சான்றிதழ் (Genuineness) பெறுவதற்கு கட்டணங்கள்(2020 ஆம் ஆண்டின்படி புதிய கட்டணங்கள்.*

📘உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணம் சார்ந்த விபரங்களை  பல்கலைக்கழகத்திலேயே கேளுங்கள். வருடம் மாறினால் கட்டணமும் மாறுகிறது.


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உண்மைத் தன்மைக்கான கடிதம்  கொண்டு போனால் நம்மிடமே உண்மைத் தன்மை சான்று  கொடுத்து விடுகிறார்கள். 1500 ரூபாய் கட்ட வேண்டும். பணமாக கட்ட முடியாது. நேரடியாக கொண்டு செல்லும் போது உங்கள் D.D யும் ஏற்கப் படாது.உங்களது ATM கார்டில் இருந்து SWIP செய்து கொள்ளலாம்.

காரைக்குடி அழகப்பாவில் பட்டப்படிப்பு முடித்திருந்தால் ஒரு வருடத்திற்குள்
750 ரூபாய்,
ஒரு வருடத்திற்கு மேல் 1250. ரூபாய்
இங்கு D.D ஏற்கப்படுகிறது.
 
ஒவ்வொருவருமே அவரவர் பட்டம் ஆண்டுக்கு ஏற்ப  பல்கலைக்கழகத்தில் நன்கு  விசாரித்து பின்னர் அதற்கு தகுந்த தொகை செலுத்துவது நல்லது.
*இதனால் காலதாமதம் ஆவதை தவிர்க்கலாம்.


ஒவ்வொரு ஆண்டும்  உண்மைத்தன்மை சான்றுக்கு பல்கலைக்கழகத்தால் கட்டண மாற்றப்பட்டு வருகிறது.


2020ம் ஆண்டு தற்போதைய   நிலவரம்*l
உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணங்கள்:


அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ₹:1000

தமிழ்ப் பல்கலைக்கழகம் - ₹-1000

சென்னைப் பல்கலைக்கழகம் - ₹ 1000

இந்திர காந்தி தேசிய திறந்தநிலைப பல்கலைக்கழகம் - ₹ 400.


பாரதிதாசன் பல்கலைக்கழகம் - ₹ 2000.

பாரதியார் பல்கலைக்கழகம் - ₹ 1500.

அழகப்பா பல்கலைக்கழகம் - ₹ 1250.

மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - ₹ 1000.

*📘தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்கலாமா? SUN NEWS ட்விட்டரில் கருத்துக்கணிப்பு:*

*📘தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்கலாமா? SUN NEWS ட்விட்டரில் கருத்துக்கணிப்பு:*

*📘ஒருங்கிணைந்த பள்ளி மானிய செயல்திட்டத்திற்கான (Action plan)பள்ளி மேலாண்மைக்குழு தீர்மானம்.(மாதிரி).*

*📘ஒருங்கிணைந்த பள்ளி மானிய செயல்திட்டத்திற்கான (Action plan)பள்ளி மேலாண்மைக்குழு தீர்மானம்.(மாதிரி).*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்(கிளை),முப்பெரும் விருது விழா நாள்:09.01.2021.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்(கிளை),முப்பெரும் விருது விழா நாள்:09.01.2021.

புதன், 6 ஜனவரி, 2021

*📘தமிழகம் முழுவதும்.. நாளைக்குள் (07.01.2021)பள்ளி திறப்பு குறித்த கருத்துகேட்புக் கூட்டம் நடத்திட தமிழக அரசு உத்தரவு !*

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் நாளைக்குள் (07.01.2021)கருத்து கேட்பு கூட்டத்தை முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்னமும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்று06.01.2021 முதல் நாளை மறுதினம் 08.01.2021 வரை கருத்து கேட்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கூட்டத்தை நாளைக்கே (07.01.2021)முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை திடீரென உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்டு தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

*✈️சூப்பர் சோனிக் விமானத்தால் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு!-நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.*

*✈️சூப்பர் சோனிக் விமானத்தால் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு!-நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.*

*📘பள்ளிகள் திறப்பு எப்போது ? - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பேட்டி...*

*📘பள்ளிகள் திறப்பு எப்போது ? - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பேட்டி...*

*பொங்கல் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன்  தெரிவித்துள்ளார்.*


*சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்காகத் தயார் செய்யப்பட்ட வகுப்பறைகளைப் பார்வையிட்டு, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.*

*அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு 10 மற்றும்12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது பற்றி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. இந்தக் கூட்டம் 8-ம் தேதி வரை நடைபெறும்.  அனைத்துப் பள்ளிகளிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்க உள்ளது.*


*அதில் பெற்றோர்கள் முன்வைக்கும் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு ஏற்ப அரசு உரிய முடிவெடுக்கும்'' என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.*


*தமிழகம் முழுவதும் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் ஜன.8-ம் தேதி வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே இதுகுறித்த அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளன.*


*கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் ஏகமனதாக தெரிவிக்கும் கருத்துகளைத் தொகுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், நிர்வாகிகள், பெற்றோரிடம் கையொப்பம் பெற்று, அந்த விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அதைப் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.*


*இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில்தான் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.*

Smc பயிற்சி-பள்ளி மேலாண்மைக்குழு உறுபினர்களுக்கானபயிற்சியினை முழுவதும் Offline- ல் கொடுப்பதற்கான வழிமுறைகள்.


💥Smc பயிற்சி-பள்ளி மேலாண்மைக்குழு உறுபினர்களுக்கானபயிற்சியினை முழுவதும் Offline- ல் கொடுப்பதற்கான வழிமுறைகள்💥

💥 தலைமை ஆசிரியரின் பணிகள்💥

💥 பள்ளி மேம்பாட்டு வளர்ச்சித் திட்டம்💥
💥 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான வருகை பதிவேடு💥

💥 Videos மற்றும் PDF files - download  செய்வதற்கான வழிமுறைகள்💥

*🖥️Pongal Bonus Bill Preparing Steps in - IFHRMS ல் Pongal Bonus தயார் செய்வது எப்படி.?என்பது குறித்த வழிமுறைகள்.*

*🖥️Pongal Bonus Bill Preparing Steps in - IFHRMS ல் Pongal Bonus தயார் செய்வது எப்படி.?என்பது குறித்த வழிமுறைகள்.*