வெள்ளி, 15 ஜனவரி, 2021

☘️அனைத்து பள்ளிகளும், பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, பயனீட்டுச் சான்றை ஜனவரி 20 க்குள் சமர்ப்பிக்க SPD உத்தரவு.*

*☘️அனைத்து பள்ளிகளும், பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, பயனீட்டுச் சான்றை ஜனவரி 20 க்குள் சமர்ப்பிக்க SPD உத்தரவு.*

*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக , 2020 -21 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்பு உணர்வுடன் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதற்காக , “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” ( Safety & Security at School level ) என்ற தலைப்பில் , பார்வை 1 - இன்படி பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்காக , பள்ளி ஒன்றுக்கு ரூ .500 / - வீதம் 6,173 அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கும் , 31,297 அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கும் நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது.*


*இந்நிலையில் , 19.01.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாலும் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதாலும் பார்வை 1 இல் உள்ள வழிகாட்டுதல்களின்படி , விடுவிக்கப்பட்ட நிதியை உடனடியாக பயன்படுத்தி பணியினை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தவும் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழை பள்ளிகளிடமிருந்து பெற்று 20.01.2021 ஆம் தேதிக்குள் மாநில திட்ட இயக்ககத்தின் rmsatamilns@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.*

*📘✍️பள்ளி திறப்பின் போது வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை.*

*📘✍️பள்ளி திறப்பின் போது வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை.*


*பள்ளி திறப்பின் போது வேண்டியவை:*

1. அனைவரும் முகக்கவசம் அணிதல் . 

2. கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் . 

3. பள்ளிக்கு வரும்போதும் , முற்பகல் இடைவேளை , மதிய உணவு இடைவேளை , பிற்பகல் இடைவேளை மற்றும் வீட்டிற்கு செல்லும் போதும் கைகளை சோப்பு கொண்டு கழுவுதல் வேண்டும் . 

4. சமூக இடைவெளி கடைபிடித்தல் 

5. சமூக இடைவெளியைப் பின்பற்றும் பொருட்டு தரையில் வட்டம் / கட்டம் போன்ற குறியீடுகள் வரைதல் . 

6. ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டும் அனுமதி அளித்தல் . 

7. தெர்மல் ஸ்கேனர் ( THERMAL SCANNER ) கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதித்தல் . 

8. பல்ஸ் - ஆக்சிமீட்டர் பயன்படுத்த அறிந்திருத்தல் . 

9. வைட்டமின் மற்றும் துத்தநாக ( ZINC ) மாத்திரைகளை உரிய முறையில் மாணவர்கள் சாப்பிடுவதை உறுதி செய்தல் . 

10. ஆசிரியர்கள் , அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருத்தல் , 

11. பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள கோவிட் -19 - SOP ஐ ஆசிரியர்கள் முழுமையாக தெரிந்திருத்தல் . 

12. பள்ளி வளாகத்தில் அதிக அளவிலான குப்பைத் தொட்டிகளை வைத்தல் . 

13. கோவிட் -19 தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் சுவரொட்டிகள் , பதாகைகள் ஆகியவை பள்ளி வளாகத்தில் வைத்திருத்தல் . 

14. அருகாமையிலுள்ள சுகாதார நிலையத்தின் அவசர தொடர்பு எண்களை அறிந்திருத்தல் . 

15. வகுப்பிற்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராகவும் , அனைத்து பணிகளையும் மேற்பார்வையிட பள்ளிக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராகவும் நியமித்தல்.

*பள்ளித்திறப்பின்போது செய்யக்கூடாதவை.*

1. 25 மாணவர்களுக்கு மேல் ஒரு வகுப்பறையில் அனுமதிக்கக்கூடாது . 

2.பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புதல் கூடாது , கழிவறை செல்லும் நேரம் , உணவு இடைவேளைகளில் கூட்டம்  

3 . கூடுதலை தவிர்த்தல் . 

4 . உணவு , தண்ணீர் பாட்டில்கள் , எழுதுபொருட்களை பரிமாறிக் கொள்ளுதல் கூடாது . 

5 . இறைவணக்கக் கூட்டம் , கலாச்சார நிகழ்வுகள் , உடற்கல்வி / NSS / NCC / தவிர்க்கப்படவேண்டும் . 

6 . மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே சுற்றித் திரிதல் கூடாது . 

7. வகுப்பறையில் ஆசிரியர்கள் , மாணவர்கள் , முகக்கவசம் அகற்றுதல் கூடாது , 

8 . முகக் கவசம் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை பொது வெளியில் எறிதல் கூடாது . 

9 . மூடிய வகுப்பறைகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தவிர்த்தல் , 

10 . தூய்மையற்ற முகக் கவசம் அணிதல் கூடாது . 

11 . கைக்குட்டை , மெல்லிழைத்தாள் பயன்படுத்தாமல் பொதுவெளியில் இருமல் , தும்மல் கூடாது .

12. பயோமெட்ரிக் ( BIOMATRIC ) கைரேகை பதிவு கூடாது . 

13 . குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாமல் வைத்திருக்கக்கூடாது . 

14. தேவையற்ற பார்வையாளர்களை நுழைய அனுமதித்தல் கூடாது .

*📘பள்ளி திறப்புக்கான சரிபார்ப்பு பட்டியல்!!!*

பள்ளி திறப்புக்கான சரிபார்ப்பு பட்டியல்!!!

*📘பள்ளி திறப்புக்கான மண்டல மற்றும் மாவட்ட வாரியான பொறுப்பு அலுவலர்கள் பட்டியல் வெளியீடு.

பள்ளி திறப்புக்கான மண்டல மற்றும் மாவட்ட வாரியான பொறுப்பு அலுவலர்கள் பட்டியல் வெளியீடு.

வியாழன், 14 ஜனவரி, 2021

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி,ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டக்கிளையின் சார்பில் தமிழர்திருநாளான பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் செய்தி.

என் இனிய
தைப் புத்தாண்டு ,
தமிழர்,
உழவர் ,
திருநாள் 
நல்வாழ்த்துகள்!
எல்லா வளமும்-நலமும் நிறையட்டும்!

-முருகசெல்வராசன்,மாநிலச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி,ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டக்கிளையின் சார்பில்  தமிழர்திருநாளான  பொங்கல் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாவட்டச் செயலாளர் & மாநிலச் செயலாளர். 

புதன், 13 ஜனவரி, 2021

*📘✍️பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகளை செய்யக் கோரி பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்!!*

*📘✍️பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகளை செய்யக் கோரி பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்!!*

*📘✍️19.01.2021 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பின் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை 31 நாள்: 13.01.2021 வெளியீடு.*

*📘✍️19.01.2021 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பின் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை 31  நாள்: 13.01.2021 வெளியீடு.*
அரசாணை 31  நாள்: 13.01.2021 ஐப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

*📘✍️19.01.2021 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு குறித்த அரசாணை எண் 30 நாள்:13.01.2021*

*📘✍️19.01.2021 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு குறித்த அரசாணை எண் 30 நாள்:13.01.2021*

*📘✍️பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:*

📘✍️பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:

                                      
இம்மாதம் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

1. அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் பணியாளர்களும் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.

2. தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துபூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னர் தங்கள் பள்ளிகளை திறக்கலாம்.

3. கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

4. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும்.

5. இணையவழி தொலைதூர கற்றல் முறை ஒரு மாற்று கற்பித்தல் முறையாக தொடரும்.

6. பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்தும்போது சில மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வருவதை விட இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால் அவர்கள் அவ்வாறு கலந்து கொள்ள அனுமதிக்கப்படலாம்.

7. பெற்றோரின் எழுத்துபூர்வ இசைவுக் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர்.

8. பெற்றோரின் சம்மதத்துடன் வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்கள் அவ்வாறே அனுமதிக்கலாம்.

9. மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சார்ந்து இருக்க வேண்டும்.

10. அத்தகைய மாணவர்களின் கற்றல் விளைவுகளின் முன்னேற்றத்திற்கு தக்க முறையில் திட்டமிடவேண்டும்.

11. அனைத்து மாணவர்களுக்கு வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் சுகாதாரத் துறையால் வழங்கப்படும்.

12. பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்போது, அரசால் வெளியிடப்படும் இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயாமாக பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர் மன்றம்நாமக்கல் மாவட்டம் (கிளை)ஆசிரியர் கோரிக்கை மாவட்ட மாநாடு கொடியேற்றம் நிகழ்வு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்

நாமக்கல் மாவட்டம் (கிளை)

ஆசிரியர் கோரிக்கை மாவட்ட மாநாடு 

கொடியேற்றம் நிகழ்வு

09/01/2021-

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட மாநாட்டில்....
ஆசிரியர் மன்றத்தின் பச்சைவண்ணக்கொடி...
வளமையும்  - செழிப்பும் நிறைக்கும் கொடி...
உயர்த்தப்படும் நிகழ்வு....
மாவட்டத் துணைத்தலைவர் திரு.வெ.இராமச்சந்திரன் தலைமையில் 
மாநிலச் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர்.
திரு.பெ.பழனிசாமி 
கொடி  உயர்த்துகிறார்.