வியாழன், 21 ஜனவரி, 2021

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கேள்வித்தாள்...

மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுகிறார்களா?தினமும் இணையத்தில் தகவல் பதிவிட உத்தரவு...

தமிழகத்தில் 35 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது ~அரசாணை வெளியீடு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட மாநாடு கோரிக்கைகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)அவர்கள்,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்திட்ட இயக்குநர் ஆகியோரிடம் கோரிக்கை விண்ணப்பம் படைப்பு.

அன்புடையீர்! வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கோரிக்கை மாநாடு கடந்த 09.01.2021 அன்று நடைபெற்றது. இக்கோரிக்கை மாநாட்டின்  மாவட்ட அளவிலான  15 அம்சக் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் வகையில்  தலையீடு செய்து உதவிட வேண்டுமாய்  இன்று (20.01.2021-புதன்) பிற்பகல் 05.00 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்திப்பதற்கு  மாவட்ட அமைப்பு முடிவாற்றியது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையப் பெறாத நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் 15 அம்சக் கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டு கோரிக்கைகளின் நியாயம் எடுத்துரைக்கப்பட்டது. 

மேலும் ,பரமத்தி ஒன்றியம் சார்ந்த திருமதி.மு.செயந்தி இடைநிலை ஆசிரியருக்கும் 2020 மார்ச்சு  மற்றும் ஏப்ரல் மாதங்களுக்குரிய தொகுப்பூதியம் வழங்கப்படவேண்டும் எனும் தனிக்கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டது.

கூட்டுறவு துறைச்சார்ந்த 
05 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட அனைத்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டது. 

மேலும், நாமக்கல் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்  அலுவலகக் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

பரமத்தி ஒன்றியத்தின் 12 தொடக்கப்பள்ளிகளின் தூய்மைப்பணியாளர்களுக்கு 15 மாத கால ஊதியம் வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையை வலியுறுத்தி  மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தின்
கணக்கு அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அலுவலகத்தின் 
கணக்கு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பம் படைக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் எதிர் வரும் 22.01.2021க்குள் பரமத்தி ஒன்றியத்தின்  12 பள்ளிகளின் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊதியம் விடுவிக்கப்படும் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கணக்கு அலுவலரும், நிர்வாக அலுவலரும்  நம்பிக்கைத்தந்து உள்ளனர்.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் தலைமையில் ,
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்டத் துணைச்செயலாளர் வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர்கள் அ.செயக்குமார் (நாமக்கல்), கா.சுந்தரம் (சேந்தமங்கலம்), கொ.கதிரேசன் (புதுச்சத்திரம்)
ஆகியோர் இச்சந்திப்பில்  பங்கேற்றனர்.

-மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம்.

புதன், 20 ஜனவரி, 2021

*இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது-முழு விவரம்*

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது: முழு விவரம்

https://drive.google.com/file/d/1HAtWTBR-SsKoKyl3Qi-R06e3QEpwiHUp/view?usp=drivesdk

*✍️சிறுபான்மையினர் நலம்-நாமக்கல் மாவட்டம்-சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பள்ளி படிப்பு,பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம)வருவாய் அடிப்படையிலான உதவித்தொகை 2020-21 மற்றும் புதியது/புதுப்பித்தல் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மறு சரிபார்ப்பு செய்யும் பொருட்டு கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது-விண்ணப்பங்களை மீள சரிபார்த்து விண்ணப்பங்களின் ஒருங்கிணைந்த பட்டியலை 25.01.2021 க்குள் சமர்பிக்கக் கோருதல் தொடர்பான சுற்றறிக்கை.*

*✍️சிறுபான்மையினர் நலம்-நாமக்கல் மாவட்டம்-சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பள்ளி படிப்பு,பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம)வருவாய் அடிப்படையிலான உதவித்தொகை 2020-21 மற்றும் புதியது/புதுப்பித்தல் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மறு சரிபார்ப்பு செய்யும் பொருட்டு கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது-விண்ணப்பங்களை மீள சரிபார்த்து விண்ணப்பங்களின் ஒருங்கிணைந்த பட்டியலை 25.01.2021 க்குள் சமர்பிக்கக் கோருதல் தொடர்பான சுற்றறிக்கை.*

செவ்வாய், 19 ஜனவரி, 2021

*🖥️safety and security Online பயிற்சி முடிக்கும் காலம் 24.01.2021 வரையும்,SMC & SMDC பயிற்சி முடிக்கும் காலம் 31.01.2021 வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.*

*🖥️safety and security Online பயிற்சி  முடிக்கும் காலம் 24.01.2021 வரையும்,SMC & SMDC பயிற்சி முடிக்கும் காலம் 31.01.2021 வரையும்  நீடிக்கப்பட்டுள்ளது.*

*🖥️safety and security Online training முடிக்கும் காலம் 24.01.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.இதுவரை பயிற்சியினை தொடங்காதவர்கள் மற்றும் 100 % நிறைவுசெய்யாமல் உள்ளவர்கள் மட்டும் 24.01.2021 க்குள் நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.ஏற்கெனவே பயிற்சியினை முடித்தவர்கள் எவரும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டாம்.*
SMC & SMDC Training Incomplete Teacher 31-01-2021 வரை பயிற்சியில் கலந்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது...
 SMC & SMDC Training Incomplete Teacher 31-01-2021 வரை பயிற்சியில் கலந்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது...

ஏற்கனவே முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டாம் கலந்து கொண்டால் ஏற்கனவே கலந்து கொண்ட உங்களது பயிற்சிக்கான சான்றிதழ் மாற்றியமைக்க வேண்டியதாக இருக்கும்.

*📘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2020-21 ஆம் கல்வியாண்டு – விளையாட்டு மற்றும் உடற்கல்வி – பள்ளி மற்றும் மாவட்டங்களிடமிருந்து SMC/SMDC தீர்மானத்தின் படி கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்...*

*📘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – 2020-21 ஆம் கல்வியாண்டு – விளையாட்டு மற்றும் உடற்கல்வி – பள்ளி மற்றும் மாவட்டங்களிடமிருந்து SMC/SMDC தீர்மானத்தின் படி கொள்முதல் செய்ய உள்ள விளையாட்டு உபகரணங்களின் விவரம் 22.01.2021க்குள் அனுப்பக் கோரி மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம்...*

புக்கிங் செய்த உடனே சிலிண்டர் டெலிவரி செய்ய தட்கல் திட்டம்...

8ம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க 20ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு...