வெள்ளி, 25 ஜூன், 2021

வெளிநாடு செல்வோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை http://selfregistration.cowin.gov.in இணையதளத்தில் இணைக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு

 வெளிநாடு செல்பவர்கள் கோவின் இணையதளத்தில் பாஸ்போர்ட் தகவலை பதிவிட்டு தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு



தமிழக அரசே! கல்வித்துறையே! நடப்பாண்டில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்கள் வழங்கிடுக .. கடந்தாண்டு மாணவர்கள் எண்ணிக்கையில் வழங்காமல், நடப்பாண்டு மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஏற்ப பாடநூல்களை வழங்கிடுக...


 

₹ 50,000-க்கு மேல் TDS பிடித்தம், ITR தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்; புதிய விதிமுறைகள் என்னென்ன?

 ₹ 50,000-க்கு மேல் TDS பிடித்தம், ITR தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்; புதிய விதிமுறைகள் என்னென?


பான் எண் கொடுத்தால் 10 சதவிகிதம் டி.டி.எஸ் பிடிக்கும்பட்சத்தில், பான் எண் இல்லை என்றால் 20% டி.டி.எஸ் பிடிக்கப்படும்.

2021 ஜூலை 1-ம் தேதி முதல் இந்திய வருமான வரிச் சட்டத்தில் புதிய பிரிவு நடைமுறைக்கு வருகிறது.

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மத்திய வருமானவரித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி கடந்த 2020-21 பட்ஜெட்டின்போது வருமான வரிச் சட்டத்தில் 206 ஏ.பி மற்றும் 206 சி.சி.ஏ ஆகிய (206AB and 206CCA) பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்து சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான கே.ஆர்.சத்தியநாராயணன் கூறும்போது, ``ஒருவரிடமிருந்து டி.டி.எஸ் (மூலத்தில் வருமான வரி பிடித்தம்) பிடிக்கும்பட்சத்தில் அவர் கண்டிப்பாக பான் கார்ட் எண் கொடுக்க வேண்டும். அப்படி பான் எண் கொடுக்கவில்லை என்றால் அதிக வரி பிடிக்கப்படும். பொதுவாக, பான் எண் கொடுத்தால் 10 சதவிகிதம் டி.டி.எஸ் பிடிக்கும்பட்சத்தில், பான் எண் இல்லை என்றால் 20% டி.டி.எஸ் பிடிக்கப்படும். 


கடந்த இரண்டு ஆண்டுகளில் (2018-19 மற்றும் 2019-20) ரூ.50,000-க்கு மேல் ஒருவரிடமிருந்து டி.டி.எஸ் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அவர் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தால், இனி அவர்களுக்கு இரு மடங்கு டி.டி.எஸ் பிடிக்கப்படும். மேலும், அபராதம் செலுத்த வேண்டி வரலாம். இந்தப் புதிய சட்டப்பிரிவு 2021 ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது’’ என்றார்.


வருமான வரித்துறை ஏற்கனவே 2021-22 –ம் நிதி ஆண்டில் 2018-19 மற்றும் 2019-20 நிதி ஆண்டுகளில் ரூ.50,000-க்கு மேல் டி.டி.எஸ் பிடிக்கப்பட்டு, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களின் பட்டியலைத் தயாரித்திருக்கிறது. அவர்கள் விரைவில் வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் அவர்களுக்கான டி.டி.எஸ் பிடித்தம் இரு மடங்காக அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது.


நன்றி : விகடன்

பள்ளிக்கல்வி - உட்கட்டமைப்பு வசதிகள்- தேசிய பேரிடர் மேலாண்மை நிர்வாகம்- பள்ளி கட்டிடங்கள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளில் மழையுடன் கூடிய மின்னல் மற்றும் இடி தாக்குவதில் இருந்து பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்துதல்- செயல் திட்டம் தயாரிப்பதற்கான வழிகாட்டிகள் வழங்குதல் - தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.. நாள்: 18.06.2021.



 

வியாழன், 24 ஜூன், 2021

*எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க செயல்பாடுகள் மீது ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு அளித்த புகார் மனுவிற்கு நாமக்கல் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அளித்துள்ள பதில் நடவடிக்கைகள்..*




 

தமிழக‌ அரசே! தலையிடுக! தமிழ்நாடு‌ அரசின்‌ அரசாணையின்படி தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி இல்லை ! 11 மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் ஒன்று! ஆனால் ,நாமக்கல் மாவட்டத்தில் கடந்த14.06.2021 முதலே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்க வைக்கப்படுகிறது! தொற்று பரவல் அதிகமாக உள்ள இத்தகு‌ சூழ்நிலையில் ஆசிரியர்கள், பொதுமக்கள்‌ மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வது சரியான‌ செயலாகுமா?! பள்ளிகளை திறப்பது தான் பொருத்தமானதாகுமா?!



 

கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் விவரம் மற்றும் விலையில்லா பாடநூல்கள் விநியோகித்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்... நாள் : 21.06.2021





 

பள்ளிக்கல்வி – 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள், மாறுதல் மற்றும் பதவி உயர்வு நிறுத்தி வைத்தல் - சார்பான விவரங்கள் கோருதல் - சார்பு