செவ்வாய், 28 செப்டம்பர், 2021

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி நான்கு கட்டத் தொடர் நடவடிக்கை-கோரிக்கை மனு இயக்கம்

 கோரிக்கை மனு இயக்கம்

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி நான்கு கட்டத் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று முடிவாற்றப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முதற்கட்டமாக இன்று (27/09/2021) கோரிக்கை மனு இயக்கம் - நாமக்கல் மாவட்ட கல்வித்துறை அலுவலர்களை நேரில் சந்தித்து மனு அளிப்பதென்றும், உயர் அலுவலர்களுக்கு அஞ்சலில் அனுப்புவது என்றும் முடிவாற்றியது. நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலரிடமும், நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.





e.SR verification form

 


CLICK HERE TO DOWNLOAD

TRB ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்ய, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

 


CLICK HERE TO DOWNLOAD

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

2021 TN EMIS App-ல் பல வகுப்புகள் அல்லது பல பிரிவுகளுக்கு attendance போடும் போது அதிக நேரம் எடுப்பதை தவிர்க்க சுலபமான வழிமுறைகள்.

 

CLICK HERE TO DOWNLOAD

மே-2021 –ம் ஆண்டு TNPSC துறைத் தேர்வுகளின் கொள்குறி வகைத் தேர்வின் உத்தேச விடைகள் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு

 


அக்டோபர் 6 இல் எருமப்பட்டியில் வட்டாரக்கல்வி அலுவலரின் அராசகங்களை கண்டித்து கண்டன‌ ஆர்ப்பாட்டம்!

 அக்டோபர் 6 இல்

எருமப்பட்டியில் கண்டன‌ ஆர்ப்பாட்டம்!


எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் அராசகங்களை அம்பலப்படுத்திடுவோம்!


மன்றப் படையே!

ஒன்று கூடுக!

வென்று காட்டுக!


CLICK HERE TO DOWNLOAD

தகுதிகாண் பருவம், பணிவரன்முறை, தேர்வுநிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுவே போதுமானது. ஆணை நகல் தேவையில்லை - Cm Cell பதில்

 


வெள்ளி, 24 செப்டம்பர், 2021

வெண்ணந்தூர் உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணியில் இருந்து புதுச்சத்திரம் ஒன்றிய இடைநிலை ஆசிரியர்களை விடுவித்திடுக! நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஆசிரியர் மன்றம் கோரிக்கை!

 


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எலச்சிபாளையம் ஒன்றியக் கிளையின் செயற்குழுக் கூட்டம் 23.09.2021

 





தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் 

எலச்சிபாளையம் ஒன்றியக் கிளையின் செயற்குழுக் கூட்டம் வேலகவுண்டம்பட்டி 

மன்ற அலுவலகத்தில் இன்று (23.09.2021) பிற்பகல் 4.00 மணிக்கு வட்டாரத் தலைவர் திருமதி.சு.பேபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாநில செயலாளர் திரு. முருக செல்வராசன்

மாவட்ட செயலாளர் திரு. மெ.சங்கர்

மாவட்ட கொள்கை விளக்க செயலாளர் திரு. க.தங்கவேல்

மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ஆர்.ரவிக்குமார்

மாவட்ட துணை செயலாளர் திரு. க.வடிவேல்

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு. சு.செல்வகுமார் 

வட்டார மகளிர் அணி செயலாளர் திருமதி. ப.சுமதி

வட்டார பொருளாளர் திரு.தே.மணிகண்டன்

வட்டார செயலாளர் திரு. பெ.சிவக்குமார்

வட்டார துணை தலைவர் திரு .கு.துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்....