சனி, 10 ஜூன், 2023

12.06.2023 அன்று பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி - Dir Proceedings & Pledge

12.06.2023 அன்று பள்ளிகள்களில் எடுக்க வேண்டிய உறுதிமொழி - Dir Proceedings & Pledge

சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு பதிலாக 12-ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் இதுபோன்று ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சமயத்தில், வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி சீரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் பாடங்களை விரைவாக முடிக்க சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், பள்ளிகளை திறக்க தாமதம் ஏற்படுவதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. மாணவர்களுக்கு பாட சுமை இல்லாதவாறு சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும் என்றார்.

மேலும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும். போட்டி குறித்த முறையான தகவல் வரவில்லை, 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் போட்டியில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.

1 முதல் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை, மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகவல் அனுப்புதல் சார்ந்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்.

 1 முதல் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை, மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகவல் அனுப்புதல் சார்ந்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்.


CLICK HERE TO DOWNLOAD

9.6.23 சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் பேச்சு வார்த்தையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் மாநில அமைப்பு செயலாளர் கோ. செல்வகுமார் மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் இரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வு

9.6.23 சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் பேச்சு வார்த்தையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா.சண்முகநாதன் மாநில அமைப்பு செயலாளர் கோ. செல்வகுமார் மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர்  இரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வு





வெள்ளி, 9 ஜூன், 2023

🕹️CRC - Postponed - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

🕹️CRC - Postponed - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

குழந்தைகளிடம் உரையாடுங்கள்

குழந்தைகளிடம் உரையாடுங்கள்

1. அறிவிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்டு வெளிப்படுவது எழுத்து. ஆனால் மனதின் ஆழத்திலிருந்து உணர்வு நிலைகளை வெளிப்படுத்துவது உரையாடல்.

2. சிந்தனைகள் ஒருவரை பற்றி புரிந்து கொள்வதற்கும் அவருடைய சிந்தனைகளை எண்ணங்களை உணர்ச்சிகளை அறிந்து கொள்வதற்கும் மிக முக்கியமான கருவி.

3. உரையாடும்போது அனைவருக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கின்றது. 

4. எந்த வயதினராக இருந்தாலும் உரையாடல் அவர்களின் மனதை தொடுகிறது.

5. உரையாடல் வழியே கருத்து வேறுபாடுகளை அங்கீகரித்து மதித்து அதை சரியான திசைவழியில் மாற்ற முடியும்.

6. உரையாடல் ஒருவரை ஆற்றுப்படுத்துகிற அற்புதமான மருந்து.

7. குழந்தைகளிடம் உரையாடுங்கள். மனம் திறந்து உரையாடுங்கள். அவர்களுக்கு புரியுமா புரியாதா என்று யோசிக்காமல் உரையாடுங்கள்.

8. குழந்தைகளுக்கு உரையாட இடம் தாருங்கள். அவர்கள் பேசும்போது கவனமாக கேளுங்கள். குழந்தைகள் உரையாடும்போது அவர்களை தொட்டுப் பேசுங்கள். அது ஒரு நெருக்கமான உணர்வை குழந்தைகளிடம் தோற்றுவிக்கும்.  அவர்கள் உயரத்திற்கு உங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

10.  குழந்தைகள் உரையாடும்போது இடையில் குறுக்கீடு செய்யாதீர்கள். அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வர வேண்டும். அத்தகைய முகமொழியும் உடல் மொழியும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்களுடைய சரி தவறுகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள்.

11. நீங்கள் அப்படி உடனடியாக குறுக்கிடும்போது குழந்தைகள் தங்கள் உரையாடலை தணிக்கை செய்ய தொடங்கி விடுவார்கள் அல்லது எதை சொல்ல வேண்டும் எதை மறைக்க வேண்டும் என்று யோசிப்பார்கள்.

12. குழந்தைகளிடம் உரையாடும்போது எப்போதுமே அறிவுரைகளை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.

13. குழந்தைகளிடம் உரையாடும்போது எப்போதுமே கல்வி சார்ந்த விஷயங்களை மட்டுமே பேசாதீர்கள்.

14. குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்பதால் அவர்கள் இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார்கள் எப்படி உள்வாங்குகிறார்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதை எல்லாம் உரையாடும்போது நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

15. குழந்தைகளுக்கும் உலக அனுபவம் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

16.  உலகம் பற்றிய உங்கள் கருத்துக்களை தீர்மானங்களை அற உரைகளை நன்னெறிகளை குழந்தைகளிடம் திணிக்க முயற்சிக்காதீர்கள்.

17. குழந்தைகள் முன்னால் நீங்கள் முன்மாதிரியாக நடந்து காட்டுங்கள் குழந்தைகள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்.

18. குழந்தைகள் சொற்களை அல்ல. செயல்களையே உடனடியாக புரிந்து கொள்கிறார்கள்.

19. உரையாடும் போது குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப நீங்கள் உரையாட வேண்டும். அவர்கள் தவறான விஷயங்களை மதிப்பீடுகளை கொண்டிருந்தால் அதை அவர்கள் உணரும்படி கதைகள் வழியாக உரையாட வேண்டும்.

20. குழந்தைகளுக்குத் தேவை கைகாட்டிகளே. யாராலும் குழந்தைகளின் விரல் பிடித்து அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் அழைத்து ச் செல்ல முடியாது.

21. இந்த உலகைப் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால் மட்டுமே சரியான விஷயங்களை உரையாடும் போது குழந்தைகளுக்கு சொல்ல முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

22. குழந்தைகளிடம் உரையாடுவோம்.

-எழுத்தாளர் உதயசங்கர்

வியாழன், 8 ஜூன், 2023

தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தும் எண்ணும்.... எழுத்தும்... வகுப்பறைகளை எவ்வாறு பிரிப்பது?

தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தும் எண்ணும்.... எழுத்தும்... வகுப்பறைகளை எவ்வாறு பிரிப்பது?

✍️நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிப்பு.

✍️நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிப்பு.

வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை!-மின்வாரியம் தெரிவிப்பு

வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை!
-மின்வாரியம் தெரிவிப்பு

DEO PROMOTION - அரசு உயர்நிலைப்பள்ளி / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்தல் - சார்புதமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.07.06.2023

DEO PROMOTION - அரசு உயர்நிலைப்பள்ளி / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்தல் - சார்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்.07.06.2023