சனி, 8 ஜூலை, 2023

2023-2024 பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 04.07.2023


 Click here to download pdf

தகுதியின் அடிப்படையில் பதவி உயர்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமைச் செயலாளர் கடிதம் 06.07.2023


 

அலகு விட்டு அலகு துறை மாறுதல் விண்ணப்பம் EMIS இணையதளத்தில் பதிவுசெய்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 06.07.2023


 

மாணவர்கள் உடல்நலம் சார்ந்த விவரங்கள் TNSED school app ல் பதிவிடுதல் சார்ந்து SPD Proceedings 07.07.2023



 


வியாழன், 6 ஜூலை, 2023

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர் தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க இயக்குநர் செயல்முறைகள் 05.07.2023










 

6,7,8 வகுப்பு சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி சார்ந்த SCERT Director Proceedings


 Click here to download pdf

DEO பணியிட பதவிஉயர்வு பட்டியல் வெளியீடு


 Click here to download pdf

பள்ளிக் கல்வி - நலத்திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து அரசாணை வெளியீடு!


Click here to download pdf
 

செவ்வாய், 4 ஜூலை, 2023

தலை’ இல்லாமல் செயல்படும் 3,343 அரசுப் பள்ளிகள்..

 தலை’ இல்லாமல் செயல்படும் 3,343 அரசுப் பள்ளிகள்; நிர்வாகப் பணிகள் முடங்கும் அபாயம்!



Published on 04/07/2023 (10:50) | Edited on 04/07/2023 


இளையராஜா


தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதமாகும் நிலையில், 3,343 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.


அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கற்பித்தல் நடைமுறை, பாடத்திட்டம் குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன. போதாக்குறைக்கு தற்போது 3000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாதது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது: தமிழகத்தில் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்படும்போது தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராகவும், பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாததால் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 


தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 670 மேல்நிலைப் பள்ளிகள், 435 உயர்நிலைப் பள்ளிகள், 1003 நடுநிலைப் பள்ளிகள், 1235 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 3343 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 


 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்குதல், மிதிவண்டி, மடிக்கணினி வழங்குதல் மற்றும் ஆசிரியர்களின் வருகை, கல்வி, பள்ளி மேம்பாடு உள்ளிட்ட அனைத்து வகை நிர்வாகப் பணிகளும் தலைமை ஆசிரியர்களைச் சார்ந்துதான் உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் அங்கு பணியாற்றி வரும் மூத்த ஆசிரியர் ஒருவருக்கு தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவதால் குறிப்பிட்ட அந்த ஆசிரியர் கையாள வேண்டிய பாட வகுப்புகள் பாதிக்கப்படும். மேலும், அவருக்கு சக ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பும் அளிக்கமாட்டார்கள். அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளிக்கல்வித்துறை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1முதல்12 வகுப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா பயண அட்டை வாங்குதல்சார்ந்த அறிவுரைகள் இணை இயக்குநர்செயல்முறைகள் 04.07.2023!