வியாழன், 14 நவம்பர், 2019

நவம்பர் 14,
வரலாற்றில் இன்று.


தேசிய குழந்தைகள் தினம் இன்று.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் நாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் நவம்பர் 20ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

உலகிலேயே, அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது.

குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

குழந்தைகள் தின விழா என்றால், பள்ளிகளில் கொண்டாட்டம் தான்.

அன்றைய தினத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு, பேச்சு, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

அடிப்படை கல்வி பெற்று குழந்தைகள் முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெறவேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கமாக உள்ளது.