வியாழன், 12 டிசம்பர், 2019

டிசம்பர் 12,
வரலாற்றில் இன்று.

 இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட தினம் இன்று(1911).

1911ஆம் ஆண்டு டிசம்பர் 12இல்
ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார்.

18,19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

அப்போது கொல்கத்தாவே அவர்களது தலைமையிடமாக இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது.

1911ஆம் ஆண்டு இதே நாளில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை டெல்லிக்கு மாற்றும் அறிவிப்பை விடுத்தார்.

1920களில் பழைய டெல்லி நகருக்குத் தெற்கே புதுடெல்லி என பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது.

1947இல் இந்திய விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.

On Dec 12, 1911, Delhi replaced Calcutta as the capital of India