புதன், 3 ஜூன், 2020

*🌷ஜூன் 3,வரலாற்றில் இன்று:எழுத்தாளர் பிரான்ஸ் காப்கா நினைவு தினம்.(1924)*

ஜூன் 3, வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் பிரான்ஸ் காப்கா நினைவு தினம் இன்று(1924).

இன்றைய இலக்கிய எழுத்தாளர்கள் பலரின் வாயில் புகுந்து புறப்படும் பெயர், காப்கா;

காந்தாரி ஓரு ஆஸ்திரிய எழுத்தாளர். அவரது தந்தை, மனைவியையும், மகனையும் ஓயாமல் போட்டு அடிப்பார். அந்த மன பாதிப்பு, காப்காவின் எழுத்தில் துாக்கலாக தெரியும்.

 26ஆம் வயதில் இவர் எழுதிய, 'ஒரு கிராமிய திருமணத்திற்கான ஏற்பாடுகள்' என்ற நாவல் தான், இவரது முதல் நூல்.

காதல், மது இரண்டிலும் பிரியம் கொண்ட காப்காவிற்கு, திருமண ஏற்பாடு நிச்சயத்தோடு நின்றது. காசநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த, 1910 முதல் 1923 வரை காப்கா எழுதிய, 'தி டிரையல், தி கேசில், தி ஜட்ஜ்மென்ட், மெட்டமார்பசிஸ், கன்ட்ரி டாக்டர்' என்ற அவரின் ஒவ்வொரு படைப்புமே, அவரது வாழ்க்கை அனுபவ வெளிப்பாடுகளே! காப்கா, தாம் எழுதிய கையெழுத்துப் பிரதிகளை, ஒரு இலக்கிய நண்பரிடம் கொடுத்து, தன் மரணத்திற்கு பின், அவற்றை தீ வைத்து எரித்து விடுமாறு கூறினார். நண்பரோ, அந்த உன்னத படைப்புகளை அழிக்க மனமின்றி, ஒவ்வொன்றாக பிரசுரித்து வெளியிட்டார்.

காப்கா, தன் நாற்பதாவது வயதில், இதே நாளில் காலமானார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக