ஞாயிறு, 11 அக்டோபர், 2020

அக்டோபர் 11, வரலாற்றில் இன்று.புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், மறுமலர்ச்சி கவிஞருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று (1826).

அக்டோபர் 11, வரலாற்றில் இன்று.

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், மறுமலர்ச்சி கவிஞருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று (1826).

மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணி புரிந்ததால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன.

தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார்.

தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை 63ஆவது வயதில் (1889) காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக