திங்கள், 19 அக்டோபர், 2020

அக்டோபர் 19,வரலாற்றில் இன்று.கடித தொடர்புக்கு பயன்படும் தபால் கார்டு அறிமுகமான தினம் இன்று.

அக்டோபர் 19,
வரலாற்றில் இன்று.


கடித தொடர்புக்கு பயன்படும்  தபால் கார்டு அறிமுகமான தினம் இன்று.

1869ஆம் ஆண்டு, முதல் தபால் கார்டு ஆஸ்திரியா நாட்டினரால் வெளியிடப்பட்டது. வியன்னா ராணுவ கழகத்தை சேர்ந்த,  டாக்டர் இம்மானுவேல் ஹெர்மன் என்பவர் இதனை வடிவமைத்தார். 1875இல் சர்வதேச தபால் யூனியன் உருவான போது அப்போதையை இந்திய தபால்துறை டைரக்டர் ஜெனரலாக இருந்த மோன்டீத் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியால் 1879இல் தபால்கார்டு முறை இந்தியாவில் அறிமுகமாகியது. இங்கிலாந்தில் 1870ஆம் ஆண்டிலும், இந்தியாவில் 1.7.1879 அன்றும் தபால் கார்டுகள் அறிமுகமாயின.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக