வியாழன், 1 அக்டோபர், 2020

தமிழகரசு விதிகளை நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பின்பற்றி செயல்பட வேண்டும் என்பது கோரிக்கையல்ல!அரசுவிதிகளை அரசுசொல்கிறபடி செய்ய வேண்டிய வட்டாரக்கல்வி அலுவலர்கள் அரசுவிதிகளை மதித்து செயல்பட வேண்டும் எனும் நினைவூட்டல்!வலியுறுத்தல்! அரசு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது எனும் குற்றச்சாட்டு!ஆதங்கம்!

தமிழகரசு விதிகளை நாமக்கல் மாவட்டத்தின் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பின்பற்றி செயல்பட வேண்டும்  என்பது கோரிக்கையல்ல!அரசுவிதிகளை அரசுசொல்கிறபடி 
செய்ய வேண்டிய வட்டாரக்கல்வி அலுவலர்கள் அரசுவிதிகளை 
மதித்து செயல்பட வேண்டும் எனும் நினைவூட்டல்!
வலியுறுத்தல்! 
அரசு விதிகள் 
காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது  எனும் குற்றச்சாட்டு!
ஆதங்கம்! 

சட்டத்தின் 
ஆட்சியை கோரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 
நாமக்கல் 
மாவட்ட அமைப்பு பாராட்டுக்குரியது!

அரசு விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளும் நாமக்கல்மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறை வரவேற்புக்குரியது!

ஆனாலும்,இத்தகு மென்மையான அணுகுமுறை பலனிக்காது !
இவைகள் 
காலந்தோறும்
காணப்படும் 
 கண்டும்,காணாதப்போக்கு!கண்டிக்காத-தண்டிக்காத 
அனுசரணையானப்போக்கு!

அரசுவிதிமீறல், நிதிகையாடல் ,
கடமைதவறியது, பணியில் பற்று உறுதிஇன்மை ,
நோய்த்தொற்று காலத்திய பேரிடர்மேலாண்மை விதிகளை காற்றில் பறக்க விடுவது 
என்பன போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி  
ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்காததும்,
மேற்கொள்ளாததும் அதிருப்திக்குரியது!

ஆசிரியர்கள் என்றால் எச்சரிக்கை விடலாம்!மிரட்டலாம்!பாயலாம்!அலுவலர்கள் எனில்... !?

இப்படியான !
எண்ணம் -சிந்தனை  நாமக்கல் மாவட்ட ஆசிரியர்களின் மனதில் ஓடுவதை  தடுத்திடும் வகையில் நடவடிக்கைகள் வேண்டும்!
-முருகசெல்வராசன்.

ஓசியில் பழம் தின்று 
தின்ற பழத்தின் 
கொட்டையை 
விற்று காசாக்கிக்கொள்ளும் 
வியாபார தந்திரமும், மலிவுச்சிந்தனையும்,
பேராசையும் 
 நூலோருக்கு அழகல்ல!
-முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக