ஞாயிறு, 13 டிசம்பர், 2020

*💸ஆர்டிஜிஎஸ் மூலம் நாளை முதல் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம்*

*💸ஆர்டிஜிஎஸ் மூலம் நாளை முதல் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம்*
*ஆர்டிஜிஎஸ் முறை என்பது, மிகப்பெரிய தொகையை ஒரு வங்கியில் இருந்து, அதே வங்கியின் வேறொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் அனுப்ப பயன்படுத்தப்படுவது. ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் அனுப்புவதற்கு, இந்த முறைதான் பயன்படும்.*

*தற்போது ஆர்டிஜிஎஸ் முறை என்பது வங்கியின் வேலைநாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது . வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் சேவை இருக்காது.*

*இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‛‛ஆர்டிஜிஎஸ் முறை நாளை இரவு 12:30 மணி முதல் 24* *7 நேரமும் செயல்படும். இதனை சாத்தியாக்க பணியாற்றிய ரிசர்வ் வங்கி, ஐஎப்டிஏஎஸ்(Indian Financial Technology and Alied Services) மற்றும் உடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி. அதிகளவு பணத்தை 24 *7*365 அனுப்பும் முறையை செயல்படும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதன் மூலம் தொழில் செய்யும் எளிதாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.*

*ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நெப்ட் சேவை, ஆண்டு முழுவதும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டது. நெப்ட், ஆர்டிஜிஎஸ் சேவைக்கு கட்டணம் விதிக்கும் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக