செவ்வாய், 28 ஏப்ரல், 2020

காவேரி நதி நீர் பங்கீட்டில் ஓரவஞ்சனையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது!
காவேரி நதி நீர்  மேலாண்மை ஆணையத்தை மத்திய
 நீர்வள அமைச்சகத்திற்குள் மத்திய அரசு கொண்டுவந்து உள்ளது !

தொன்மைமிகு காவேரி நதியின் தமிழ்நாட்டு
நீர் உரிமை நிலைநாட்டப் படுவதற்கு
தமிழக அரசு தலையீடு செய்திட வேண்டும்!

கூட்டாட்சி தத்துவத்தின் மீது மற்றொரு மோசமான தாக்குதல்! மாநிலப் பணிகளில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றும் மாநில அரசுக்குநிதி தரவேண்டியதில்லை! மாண்புமிகு பிரதமர் அவர்களின் "PM-CARE " க்குத்தான் சம்பளம் பிடிப்பு நிதி கொடுக்க வேண்டும்! மத்தியரசு ஆணை


தமிழ்நாடு அரசுக்கு நிதி்ஆதாரத்தைப் பெருக்க ஆயி்ரமாயிரம் வழிகள் இருக்கும் போது மேன்மேலும் எதற்கெடுத்தாலும் அரசுப்பணியாளர்கள் ,ஆசிரியர்கள் , ஓய்வூதியதாரர்கள் வயிற்றில் அடிப்பது வேதனைக்குரியதாகும்! தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வேண்டுகோள்





அரசு ஊழியர்களின் ஊதியத்தில் கைவைப்பதா? மத்திய அரசிடம் நிதியைப் பெறுங்கள் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

அரசு ஊழியர்களின் ஊதியத்தில் கைவைப்பதா? மத்திய அரசிடம் நிதியைப் பெறுங்கள் - மு.க.ஸ்டாலின் கண்டனம்
அரசு ஊழியர்களுக்கு முற்றிலும் எதிரான அரசாணைகளை முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசு ஊழியர்களுக்கான ஊழியர்களுக்கு ஊதியத்தை இறுக்குவதைவிட மத்திய அரசிடம் வலியுறுத்தி மாநில அரசின் நிதியைப் பெறவேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



தமிழக அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘’தமிழக அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி”, “15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமை" ஓராண்டிற்கு நிறுத்தி வைப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டி குறைப்பு என்று அ.தி.மு.க. அரசு, தன்னுடைய ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தின் மீது தாக்குதல் தொடுத்து, ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது; கண்டனத்திற்குரியது.

கொரோனா நோய்த் தொற்றுப் பேரிடர் அறிவிக்கப்பட்டவுடன் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய அரசு ஊழியர்கள்- கொரோனா தடுப்புப் பணிகளையும், “மெய் வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது", முழு ஈடுபாட்டுடன் ஆற்றி வருகிறார்கள். குறிப்பாக, காவல்துறையினர், மருத்துவத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சித் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் என பெரும்பாலான முக்கிய அரசுத் துறைகளின் லட்சக்கணக்கான ஊழியர்கள் அனைவரும், மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் பணியாற்றி - கொரோனா நோய்த் தடுப்பிலும் சிகிச்சையிலும் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


கொரோனா நேரத்தில் நடைபெற்ற தேர்வு மையங்களில் எல்லாம் ஆசிரியர்கள் பணியாற்றியுள்ளார்கள். அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு “அவசியமான” அனைத்துத் துறை அரசு ஊழியர்களும் ஒருங்கிணைந்து, நமது மக்களைக் காப்பாற்றிட, போர்க்கால உணர்வுடன் பணியாற்றி வரும் நேரத்தில் அ.தி.மு.க அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை - அரசு ஊழியர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெருமளவில் இழக்க வைத்து மனதளவில் சோர்வடையச் செய்யும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அரசு ஏனோ உணரவில்லை.



மத்திய பா.ஜ.க. அரசு முடிவு எடுத்தவுடன் – உடனே அதைப் பின்பற்றி, அ.தி.மு.க. அரசும் இதுபோன்று அரசு ஊழியர்களின் வாழ்வாதார உரிமைகளை மனம் போன போக்கில் ரத்து செய்வதை, மக்கள்நலனில் அக்கறையுள்ள யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. “நிதி மேலாண்மையில் நாங்கள் புலிகள்” என்று “விளம்பரம்” செய்து வந்த அ.தி.மு.க. அரசும், அதன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இதுபோன்ற ஊழியர்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்திருப்பது - அ.தி.மு.க. ஆட்சியின் நிதி மேலாண்மை படுகுழியில் தள்ளப்பட்டு விட்டது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. ரூ.4.56 லட்சம் கோடி கடனில் தமிழகத்தை வீழ்த்திய கொடுமையான அ.தி.மு.க. ஆட்சிதான், இப்படியொரு பின்னடைவான சூழலை கொரோனா போரில் கள வீரர்களாக நிற்கும் காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்களின் மீது திணித்து, அவர்கள் தலையில் கைவைத்திருக்கிறது என்பது மிகுந்த கவலையளிக்கிறது.



“ஏற்கனவே ஈட்டிய விடுப்புக்குப் பதில் ஊதியம் வழங்குவதற்கு ஆணை பிறப்பித்திருந்தால் அதையும் ரத்து செய்யுங்கள்” என்று அமைச்சர் ஜெயக்குமாரின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை வெளியிட்டிருப்பது சிறிதும் ஈவு இரக்கமற்றது. கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, இப்படி உதாசீனப்படுத்துவது ஏற்புடையதாகாது.



“அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்பிற்குப் பதில் ஊதியம் பெறும் உரிமை ரத்து” போன்ற நடவடிக்கைகள், அரசு ஊழியர்களின் பொருளாதார நிலைமையைப் பாதிக்கும். அரசு ஊழியர்களுக்கு முற்றிலும் எதிரான அரசாணைகளை முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.



மேலும், மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு, நிதிக் கமிஷன் பகிர்வு போன்ற பல்வேறு நிதிகளையும், கொரோனா பேரிடர் நிவாரணத்திற்கான நிதியையும், தேவையான அரசியல் அழுத்தம் கொடுத்து, உரிமையுடன் தட்டிக் கேட்டு, உடனடியாகப் பெற வேண்டும். அதை விடுத்து, தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதைப் போல, அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது’ என்று குறிப்பிட்டுள்ளார்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்திடும் இயற்கை பானம் மற்றும் சூடான பானம் தயாரிப்புக்குறிப்புகள் ~ தமிழக அரசு வெளியீடு…

மத்திய அரசை  காக்காய்ப் பிடித்துத் தன்னாட்சியை தக்கவைத்துக்கொள்ளும் எடப்பாடி அரசே!
ஆசிரியர்-அரசூழியர்களின்
மன உளைச்சலை  இரட்டிப்பாக்காதே!
பழிவாங்கும் நடவடிக்கைகளை -பொய்வழக்குகளை திரும்பப் பெறுக!
அகவிலைப்படிகளை, விடுப்பூதியங்களை " சுவாகா " போடாதே!
அரசியல் கற்பிக்கும் ஆசிரியர் சமுதாயத்தின் சார்பில் கோருகிறேன்!
*முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்.* *பாவலர்.திரு.க.மீனாட்சிசுந்தரம் அறிக்கை...*

தமிழக ஆசிரியர்-அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ரத்து மற்றும் ஈட்டிய விடுப்பூதியம் இரத்து செய்த தமிழக அரசுக்கு முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்.* *பாவலர்.திரு.க.மீனாட்சிசுந்தரம் கண்டனம்.*




திங்கள், 27 ஏப்ரல், 2020

அகவிலைப்படி முடக்கம்! மத்திய அரசின் தன்னிச்சையானப் போக்கிற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை கடும்கண்டனம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு தன்னிச்சையாக முடக்கி உத்தரவிட்டுள்ள மத்திய அரசை கண்டிக்கிறோம்.!

தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், எம்.பி. அறிக்கை

நாட்டில் உயர்ந்துள்ள விலைவாசிப்புள்ளிகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய 4% அகவிலைப்படி உயர்வு உட்பட அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியின் மூன்று தவனைகளை ஒட்டு மொத்தமாக முடக்கிட தன்னிச்சையாக அரசு வெளியிட்ட உத்தரவு,  48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களையும், தங்களது ஓய்வு கால வாழ்க்கையை பென்சன் வருவாயை மட்டுமே நம்பி நகர்த்திக் கொண்டிருக்கிற 65 லட்சம் ஓய்வூதியதாரர்களையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது! கொரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி நூறாண்டுகளுக்கும் மேலாக போராடிப் பெற்ற உரிமைகளை மறுக்கும் மத்திய அரசின் செயல் ஏற்கத்தக்கதல்ல !

கொரோனா வைரஸுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் சவால்களை எதிர் கொண்டு, எந்தவித ஆபத்துகளையும் பெரிதென நினைக்காமல், போதுமான “பணியாளர் பாதுகாப்பு உபகரணங்கள்” ( PPE ) அரசினால் வழங்கப்படாத போதும் கூட,  24 மணி நேரமும் குடும்பத்தையும் மனைவி மக்களையும்  மறந்து  பணியாற்றுவதன் மூலம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களது அளப்பரிய சேவையை செய்து வருகின்றனர் என்பதை  நாட்டு மக்கள்  நன்கு அறிவார்கள்!
டாக்டர்கள்,மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த நெருக்கடி நேரத்தில் மிகவும் அவசியமான  பல்வேறு “ பணியாளர் பாதுகாப்பு உபகரணங்களை”   ( PPE )  தயாரிப்பதில் ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை ஊழியர்கள் முழு மனதுடன் ஈடுபட்டுள்ளனர், ரெயில்வே, தபால், மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பாதுகாப்பு சிவில் ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை  பிரதமரின் நிவாரன நிதிக்கு வழங்கியுள்ள நிலையில், பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் PM- CARES நிதிக்கு இரண்டு நாட்கள் சம்பளத்தை வழங்கியுள்ளனர். ஆனால் அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் PM-CARES க்கு சேகரிக்கப்பட்ட நிதி கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுமா அல்லது அரசாங்கத்துக்கு அவ்வப்போது தொடர்ந்து நெருக்கடிகளை தந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பயன்படுத்தப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. . அரசு ஊழியர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பைப் புறக்கணித்து, கொரோனாவினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை காரணம் காட்டி அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்வாதாரத்தை நசுக்க முற்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது !

அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் இனாம் அல்ல! மாறாக விலைவாசி உயர்வை ஈடுகட்டுவதற்காகவும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காகவும்  சட்டப்பூர்வமாக ஊழியர்களுக்கு வழங்கப் பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையாகும்! விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் முழுமையாக தோற்றுப்போயிருக்கிற மத்திய அரசு, அகவிலைப்படியை முடக்கியிருப்பது “ குதிரை குப்புற தள்ளியதோடு குழியையும் பறித்த கதையாக” உள்ளது! அண்டை நாடுகளுடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட போர் மற்றும் இயற்கை பேரழிவு உள்ளிட்ட நெருக்கடி நேரங்களில் எல்லாம் அரசுக்கு பக்க பலமாக செயலாற்றிய மத்திய அரசு ஊழியர்களை இந்த உத்தரவின் மூலம் வஞ்சித்துள்ளதோடு அரசு எடுக்கும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கொரோனாவின் பெயரால் அரசு நியாயப்படுத்த முயலுவது கண்டிக்கத்தக்கதாகும்!

 திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு  தொழிலாளர்களின் மீது பொருளாதார தாக்குதலை தொடுப்பதற்கு பதிலாக அரசியல் இலாபத்திற்காக முன்னெடுத்துள்ள, 98 ஆயிரம் கோடி செலவிலான மும்பை- அகமதாபத் அதிவிரைவு புல்லட் ரயில் திட்டத்தையும், புது தில்லியில் எழுப்ப திட்டமிட்டுள்ள 20,ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான புதிய பாராளுமன்றக் கட்டிடம் உட்பட மத்திய விஸ்டா திட்டத்தையும் தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு அத்தொகையை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய முன்வரவேண்டும். நாட்டு மக்கள் ஒருபுறம் கொரோனா அச்சத்தாலும் மறுபுறம் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினாலும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து , தவித்துக் கொண்டிருக்கும் போது ஏற்கனவே 2063 கோடி ரூபாய் செலவில் பட்டேல் சிலையை நிறுவி தங்களது அரசியல்  நோக்கங்களை நிறைவேற்றி கொண்டதைப் போன்று அல்லாமல் மக்களின் உயிர் காக்கும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட மத்திய அரசு முன்வர வேண்டும் .
தற்போது அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி முடக்கத்தினால் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ஜனவரி 2020 முதல் ஜீன் 2020 வரை 4% ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலான காலத்திற்கு 3% மற்றும் ஜனவரி 2021 முதல் ஜீன் 2021 வரை 3%  ஆக மொத்தம் சம்பளத்தின் 10% இழப்பை ஏற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல ஏழாவது ஊதியக்குழு வழங்கியுள்ள பரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படி இருபத்தைந்து சதவீதத்தை எட்டும் போது , தற்போது அரசு ஊழியர்கள் பெற்று வரும் வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டு தற்போதுள்ள  சென்னை உள்ளிட்ட X  நகரங்களுக்கு 24%,லிருந்து 27% சதவீதமாகவும்,  Y  நகரங்களுக்கு 16% லிருந்து 18% ஆகவும், Z  நகரங்களுக்கு 8% லிருந்து 9% ஆக உயர்த்தி வழங்கப்படுவதும்  அரசின் இந்த உத்தரவினால் தற்போது முடக்கப்பட்டுள்ளது!  அது மட்டுமல்லாமல் அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும், மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் அரசின் இந்த உத்தரவை காரணம் காட்டி அகவிலைப்படி உயர்வு மறுக்கப்படும் அபாயமும் உள்ளது! அரசின் இந்த தாக்குதல் தொழிலாளர்களின் மன உளைச்சலை அதிகப்படுத்தி அவர்களின் செயல் பாடு மற்றும் உற்பத்தி திறனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த அரசு உணர வேண்டும்.
எனவே அரசு தற்போது வெளியிட்டுள்ள உத்தரவை உடனடியாக திரும்ப பெறுவதோடு ஏற்கனவே மார்ச் மாதம் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த 4% அகவிலைப்படியை வழங்குவதற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என்று தொமுச பேரவையின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசே!போராடிப்பெற்ற உரிமைகளை பறிக்காதே!அகவிலைப்படி, விடுப்பூதியம்
உள்ளிட்ட உரிமைப்பறிப்பை கைவிடுக!   சர்வதிகாரப்
போக்கைக் கைவிடுக!
ஜாக்டோ-ஜியோ வேண்டுகோள்!

Go.Ms.No:231 Date: 23.4.2020 GPF - Rate of interest for the finacial year 2020-2021 With effect from 01.4.2020 to 30.6.2020

Go:No: 231Date:23.4.2020 வருங்கால வைப்பு நிதி
வட்டி விகிதம் 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப் பட்டது!
தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!