சனி, 5 செப்டம்பர், 2020

தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித்தலைவரும்,திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் "ஆசிரியர்நாள்" வாழ்த்துச்செய்தி ...

தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித்தலைவரும்,
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் "ஆசிரியர்நாள்" வாழ்த்துச்செய்தி  ... 

'மன்னர்களிடையே ஒரு தத்துவ ஞானியாகவும்; தத்துவ ஞானிகளிடையே ஒரு மன்னராகவும் திகழ்ந்து' இந்தியத் திருநாட்டிற்குப் பெருமை சேர்த்து வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது!

அறிவார் சமுதாயத்தை உருவாக்கத் தங்கள் வாழ்நாளை வகுப்பறைகளில் அர்ப்பணித்து அரும்பாடு படும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் 'ஆசிரியர் தின' நல்வாழ்த்துகள்!

ஆசிரியர் சமுதாயத்திற்காகவும், அவர்களது நலத்திட்டங்கள் - உரிமைகளுக்காகவும் என்றைக்குமே தி.மு. கழகம் பாதுகாப்பு அரணாகத் திகழும்!

*🌟அக்டோபரில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும்-தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் தேவை-மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்.*

*🌟அக்டோபரில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும்-தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் தேவை-மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்.*

அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது! முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கருத்து...

அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது! 

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கருத்து...

புதுதில்லி , செப் . 4 நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் கைவிடப்பட்டிருப்பது . அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்று குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியுள்ளார் . 

இது தொடர்பாக இன்றைய ' தி இந்து ' நாளிதழில் கட்டுரை ஒன்றை அவர் எழுதி யுள்ளார் . அதில் அவர் கூறியிருப்பதாவது : 

இந்திய மக்களாகிய நாம் , நாமாகவே ஏற்படுத்திக்கொண்ட அரசமைப்புச்சட்டம் , நம்முடைய ஜனநாயகத்திற்காக , ஒரு நாடாளுமன்ற வடிவத்திலான அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளவும் , அதன்படி அரசாங்கம் நாடாளுமன்றம் சட்டமன்றங்கள் மூலமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பதில் சொல்லக்கடமைப்பட்டது என்றும் வரையறுத்திருக்கிறோம் . அரசாங்கம் இவ்வாறு பொறுப்புடன் இருப்பது என்பதுதான் ஜனநாயக அரசாங்கத்தின் இதயமாகும் . இது நாடாளுமன்ற சட்டமன்றங்களின் நடைமுறைகள் மூலமாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது . நாடாளுமன்ற சட்டமன்றங்களின் நடைமுறைகள் என்பனவற்றில் சட்டமியற்றுதல் , நாட்டின் நிதிநிலைமைகளைக் கட்டுக்குள் வைத்தல் , வரி விதிப்புக் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் பொதுநலன் சார்ந்த பிரச்சனைகள் மீது விவாதங்கள் நடத்தல் முதலியனவுமாகும் , இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் , நாடாளுமன்றம் சட்டமன்றங்கள் நடைபெறுகையில் தினந்தோறும் அல்லது குறிப்பிட்டக் கால இடைவெளியில் , கேள்விகள் கேட்பதன் மூலமும் , ஒத்திவைப்புத் தீர்மானங்கள் கொண்டு வருவதன் மூலமும் , கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதன் மூலமும் , அரை மணி நேர விவாதம் நடத்துவதன் மூலமாகவும் , நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதன் மூலமாகவும் மற்றும் உரிமை மீறல் பிரச்சனை தொடர்பான விஷயங்களை எழுப்புவதன் மூலமாகவும் நிறைவேற்றப்படுகின்றன . 

நாட்டின் நாடியை பிடித்துப் பார்க்க 

கேள்வி நேரம் என்பது அரசாங்கத்தைப் பொறுப்பாக்கும் கருவியாகும்.

 நாடாளுமன்ற சட்டமன்றங்களின் செயல்பாடுகளில் அரசாங்கத்தை நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பொறுப்பாக்கும் கருவியில் மிகவும் முக்கியமானது கேள்வி நேரம் ' என்பதாகும் . நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளில் இதற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு . இது அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் , அது உள்நாட்டுப் பிரச்சனையாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாட்டுப் பிரச்சனையாக இருந்தாலும் சரி , கேள்விக்கு உள்ளாக்குகிறது . இதன்மூலம் நாட்டின் நாடியைப் பிடித்துப்பார்க்க அரசாங்கத்திற்கு இது உதவுகிறது . மேலும் இதன்மூலம் மக்களும் , தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் , அமைச்சர்களும் செயல்படும் விதம் குறித்தும் அறிந்துகொள்ள முடியும் . உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறும்போது தடுமாறுகிறவர்கள் அரிதாகவே மறக்கப்படுவார்கள் . 

கேள்விகள் பொதுவாக ஒரு பிரச்சனை குறித்துக் குறிப்பாகவும் , கறாராகவும் கேட்கப்படுவதால் அதன்மீது அரசாங்கத்திடமிருந்து சரியான தகவல் எதிர்பார்க்கப்படுகிறது . நம் நாடாளுமன்ற வரலாற்றில் பல கேள்விகளுக்கு அரசாங்கம் அளித்துள்ள பதில்கள் விரிவான அளவில் விவாதங்கள் நடத்திடவும் , விசாரணைகள் நடத்திடவும் , ஏன் , நிர்வாக ஊழல்களை வெளிக்கொண்டு வரவும் இட்டுச் சென்றிருக்கின்றன . 

எனவேதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அறிவார்ந்த குடிமக்கள் , நாடாளுமன்றத்தின் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் . அதனால்தான் செப்டம்பர் 14 தொடங்கும் நடைபெறவிருக்கும் மழைக்காலம் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இல்லை என்று செய்தி வெளிவந்ததும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள் , 

இதற்கு அரசாங்கத்தின் தரப்பில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று உருவாக்கியுள்ள நிலை என்று கூறப்பட்டிருக்கிறது .

பொருத்தமற்ற காரணம் 

கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டுவது பொருத்தமற்ற ஒன்று . இதனைக் கூறி , கேள்வி நேரத்தை நீக்கியிருப்பது திகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது . அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை வெட்டிக் குறைத்திருப்பதாகவே கருதப்படுகிறது . இப்போது , நட்சத்திரக் குறியல்லாத கேள்விகள் ( unstarred questions ) தொடரும் | என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது . எனவே கேள்வி நேரத்தில் நட்சத்திரக் கேள்விக்கு அமைச்சர் பதிலளிப்பதும் அதன்மீது துணைக் கேள்விகள் எழுப்பப்பட்டால் அவற்றுக்குப் பதிலளிப்பதும் இல்லை என்பது தெளிவாகி இருக்கிறது . 

ஜனநாயகத்தின் செயல்பாட்டில் தன்னைச் சோதித்துப் பார்ப்பது என்பது , நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான திறமை தன்னிடம் இருக்கிறதா என்பதற்காகவேயாகும் . அது சமூகரீதியானதாகவோ , பொருளாதார ரீதியானதாகவோ அல்லது அரசியல்ரீதியானதாகவோ இருக்கலாம் . எத்தகைய நெருக்கடியாக இருந்தாலும் அதனைச் சரிசெய்யக் கோருவதுதான் ஜனநாயக நிறுவனங்களின் கடமைகளாகும் . அவ்வாறு கோருவதைத் தவிர்க்கும் விதத்தில் ஒருவிதமான தவிர்ப்பு அரசியலை ' ( ' politics of avoidance ' ) மேற்கொள்வது , எவ்விதத்திலும் உதவிடாது . 

இப்வாறு ஹமீத் அன்சாரி குறிப்பிட்டுள்ளார். ( ந.நி. )

கோவிட் 19- விதிமுறைகள்!விதிமீறலுக்கு உரிய தண்டத்தொகைகள்!அரசு ஆணை வெளியீடு!

கோவிட் 19- விதிமுறைகள்!
விதிமீறலுக்கு உரிய தண்டத்தொகைகள்!
அரசு ஆணை வெளியீடு!

ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

மாற்றுத்திறனாளியை குடும்ப உறுப்பினராகக் கொண்ட அரசு ஊழியருக்கு மூன்றாண்டு இடமாறுதலில் விலக்கு!தமிழக அரசு ஆணை!

மாற்றுத்திறனாளியை குடும்ப உறுப்பினராகக் கொண்ட  
அரசு ஊழியருக்கு   மூன்றாண்டு இடமாறுதலில்  விலக்கு!

தமிழக அரசு ஆணை!

நாமக்கல் மாவட்டம் _ பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நலத்திட்ட பொருட்கள் ஒன்றிய மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு நேரடியாக வினியோகம் செய்ய வேண்டுதல்_ நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஆசிரியர் மன்றம் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் _ பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நலத்திட்ட பொருட்கள் ஒன்றிய மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு நேரடியாக வினியோகம் செய்ய வேண்டுதல்_ நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஆசிரியர் மன்றம் கோரிக்கை.

*🌟பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-ஆசிரியர் தினம் 2020-பள்ளிகளில் 07.09.2020 அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடுதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🌟பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-ஆசிரியர் தினம் 2020-பள்ளிகளில் 07.09.2020 அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடுதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

செத்த மொழிக்கு அரியாசனம்!-பேரறிஞர்.அண்ணா.

செத்த மொழிக்கு 
அரியாசனம்!
-பேரறிஞர்.அண்ணா.
**************************

மாங்க்ஸ் என்ற மொழி பேசுவோரில் இன்று எவருமே உயிருடனில்லை. இருந்தும் அவர்கள் மொழியை இப்பொழுது கேட்க முடியும்!

இடிந்த கோட்டை, பாழான அகழி, சிதிலமான மணி மண்டபம், சிதைந்த சிற்பங்கள், சீர் கெட்டுப் போன சித்திரங்கள் என்று காண்கிறோமே, அது போலவே பழையமொழி மாங்க்ஸை கேட்கச் செய்திருக்கின்றனர்.

மாங்க்ஸ் மொழி மறைந்து விடாதிருக்க, ‘ரிகார்டு’ மூலம் அம்மொழியைக் கேட்கச் செய்யப்பட்டுள்ளது.

செத்த இனமானாலும் அவர் வழங்கிய மொழி சாகாதிருக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இறந்த மொழிகளுக்கு இதுதான் இடம்! ஆனால் இந்தியப் பூமியிலே மட்டும் செத்த மொழிக்கு சீரும், சிறப்பும் தேடுவதில் முனைந்துள்ளவர்கள், அம்மொழிக்கு இடம் ‘ரிகார்டு’ என்பதை மறந்துவிட்டு, அரிசாயனம் அமைக்க ஆசை கொண்டு திரிகின்றனர்!

“ரிகார்டு” செய்து, காட்சி சாலைகளிலே, கேட்கச் செய்வதை விடுத்து விட்டு, அதற்குப் பன்னீர் தெளித்து, பரிமள கந்தம் பூசி, பட்டுபீதாம்பரம் உடுத்தி, பாலும் பழமும் ஊட்டி, பல்லக்கிலேற்றி பராக்கு கூறி, பாராள வைக்கலாம் என்று ஆகாத ஆசையினால் அவதிப்படுகிறார்கள்!

எங்கள் சமஸ்கிருதம், செத்த மொழியென்று பேசுகின்றனரே, இவர்கள் நா அழுகிப் போகாதா! நாசகாலர்கள், தேவ மொழியையே நிந்திக்கிறார்கள்! இவர்கள் வாழ்வார்களா! என்று ஆயாசங் கலந்து பேசிடும் பொழுது, சிரிப்பதா, அழுவதா என்று புரியவில்லை.

வடமொழி, பேசும் மொழியல்ல! தேவரும், மூவரும் கேட்டமொழி, பூசை நேரத்தில் பேசிய மொழியல்ல! இங்குள்ள பூதேவர்களும் நாவில் நடமிடவில்லை அம்மொழியை. செத்த மொழியைத் தாங்குகிறார்கள் தர்ப்பையைக் கொண்டு. புரி நூலால், அம்மொழியைக் கட்டித் தூக்கி நிறுத்துகின்றனர்!

- அறிஞர் அண்ணா,
திராவிட நாடு, 29.07.1951
'“நாம்“ பலர், அவர்கள் சிலர்” என்ற கட்டுரையிலிருந்து.

நன்றி:திரு.பெ.பழநி.

*🖥️தொடக்கக்கல்வி -2020-2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை -EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பான தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

🖥️தொடக்கக்கல்வி -2020-2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை -EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பான தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*