ஞாயிறு, 19 நவம்பர், 2017

E -Pay Roll News


1.Personal Pay  for High School HM  and SG Asst, Conveyance Allowance for Disabled and AHM allowance is change  DUEs detail using edit option in Current detail of individual. 

PP  treated as  allowance. No DA and don't Calculate HRA as like as Deputy Tahsildar and Deputy Block Development Officer for Revenue Department.

2.Revision of Pay Arrear -  Check all details in Arrear statement , schedule and outer (Enfacement and outer in Gross & Net Amount as same as in all)  then click forward in arrear bill . Next  Bill Approve in DDO Lgin same as click  Revision Pay Arrear - Approve

3. After that ECS Reports are Generated in Accountant Login . Enter Bill number sequence in your MTC 70. Then click Download SES File.

பொது தேர்வு-மாணவர்கள் அச்சமடைய வேண்டாம்.


அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் உள்ளதால், பொதுத் தேர்வு எழுத உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில், அரசு தேர்வுத் துறை ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத, சில தனியார் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்களை, அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டிய நிலை உள்ளதாகவும், 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகள் பரவுகின்றன.

இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக் அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளே கிடையாது. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் உள்ளது.

எனவே, வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுத் தேர்வு எழுதும் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அச்சமின்றி தேர்வுக்கு தயாராக வேண்டும்' என்றனர்.

நம் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் !

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு,

2.மாணவர் வருகைப் பதிவேடு,

3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு,

4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு,

5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்,

6.அளவைப் பதிவேடு,

7.நிறுவனப்பதிவேடு,

8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு,

9.தணிக்கைப் பதிவேடு,

10.பார்வையாளர் பதிவேடு,

11.பள்ளி விவரப் பதிவேடு (school profile ),

12.ஊதியப்பட்டியல் பதிவேடு,

13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு,

14.மதிப்பெண் பதிவேடு,

15.தேக்கப் பட்டியல்,

16.வருகைப்பட்டியல்,

17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு,

18.வரத்தவறியவர் பதிவேடு,

19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு,

20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்,

21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு,

22.சுற்றறிக்கைப் பதிவேடு,

23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு,

24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு,

25.தற்செயல் விடுப்பு,

26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு,

27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு,

28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு,

29.வாசிப்புத்திறன் பதிவேடு,

30.அஞ்சல் பதிவேடு,

31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு,

32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு,

33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு,

34.Inspire விருது பதிவேடு,

35.கிராமக்கல்விக்குழு பதிவேடு,

36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு,

37.அன்னையர் குழு பதிவேடு,

38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு,

39.மன்றப் பதிவேடுகள்:

a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு,

b.கணித மன்றம்,

c.அறிவியல் மன்றம்,

d.செஞ்சிலுவைச் சங்கம்,

e.சுற்றுச்சூழல் மன்றம்,

40.கால அட்டவணை.

வியாழன், 16 நவம்பர், 2017

மொபைல் - ஆதார் இணைப்பு : 3 புதிய வசதிகள் அறிவிப்பு

பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான அவகாசம், 2018, பிப்., 6 வரை வழங்கப்பட்டுள்ளது.

மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களிடம் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதில் மக்களுக்கு உள்ள சிரமங்களை போக்கும் வகையில் மாற்று திட்டங்களை அறிவிக்கும்படி, மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

மொபைல் நிறுவனங்களின் புதிய வசதிகளுக்கு, ஆதார் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது:

மொபைல் போன் சந்தாதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய வசதிகளை அறிமுகம் செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

1.ஆதாருடன் இணைந்த, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு அளிக்கும் முறை,

2. புதிய மொபைல் ஆப் முறை,

3.ஐ.வி.ஆர்.எஸ்., எனப்படும் தொலைபேசி மூலம் தானியங்கி சேவை வழங்கும் முறை,

ஆகிய மூன்று புதிய வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்தே ஆதார் எண்ணை இணைக்க முடியும். இந்த வசதிகள், டிச., 1 முதல் அமலுக்கு வருகின்றன. 

செல்போன் நிறுவனங்களின் முகவர்களிடம் நேரில் பதிவு செய்யும் முறையும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்