திங்கள், 18 டிசம்பர், 2017
சைகை மொழிக்கு ஆப்!
பேசும் மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ளவர்கள்மற்ற மக்களிடையே தகவல் தொடர்பு கொள்வது என்பது கடினமான ஒன்றாகும்.
குறைபாடுள்ளவர்களின்நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் மட்டுமே அந்தச்சைகை மொழியைப் புரிந்துகொள்ள முடியும்.
வேலை காரணமாக இவர்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது மிகக் குறைவானவர்கள் மட்டுமே சைகை மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சிசெய்கிறார்கள். இது தொழிலில் முன்னேற்றம் அடைவதற்குத் தடையாக இருக்கிறது. சைகை மொழியைக் கற்றுக்கொள்வது என்பது எளிதல்ல.
இவர்களுக்கு உதவக்கூடிய அப்ளிகேஷன் ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சைகை மொழியை எழுத்துப் பிரதியாக மாற்றுவதற்கான அப்ளிகேஷன்உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பை ஐஐடி வாரணாசியில் உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.ஐஐடி வாரணாசியில் உயிரியல் பொறியியல் பிரிவில் நான்காம் ஆண்டு படிக்கும் நிகில் டாக்கா என்ற மாணவன் இந்த ஆப் உருவாக்குவதற்கான யோசனையைவழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல், இதை ஒரு செயல்திட்டமாகவும் செய்துள்ளார். ஆரம்பத்தில் கை சைகைகளை அடையாளம் கண்டுகொள்வதற்காக ஒருஆப் உருவாக்கப்பட்டது.
டாக்கா செயல் திட்டத்தை மதிப்பீடு செய்த உயிரியல் மருத்துவ பொறியியல் துறையின் தலைவர் பேராசிரியர், நீராஜ் ஷர்மா, சைகை மொழியை எழுத்துபிரதியாக மாற்றக் கூடிய ஒரு ஆப்பை உருவாக்க முடியும் என்று பரிந்துரைத்தார். இதனால், மக்கள் மற்றும் குறைபாடுள்ள மக்களிடையே தகவல் தொடர்புஎளிமையாகும்.இந்தப் பயன்பாடு நடைமுறைக்கு வந்தால், அத்தகைய குறைபாடுள்ளவர்கள் சமூகத்தில் நல்ல முறையில் செயல்பட முடியும். தற்போது, இந்த ஆப் வளர்ச்சிக்கட்டத்தில் உள்ளது.
இந்த ஆண்டு முடிவதற்குள் இதை நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான் எங்களுடைய நோக்கம். ஆனால், எழுத்துப் பிரதியாக மாற்றுவதில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது. முடிந்தவரையில் விரைவில் துல்லியமாக அதை முடித்துவிடுவோம். சைகை மொழியைப் பேச்சு மொழியாக மாற்றவும் முயற்சி செய்துவருகிறோம். எங்களுடைய அடுத்தகட்ட வேலை அதுதான் என மாணவர் நிகில் டாக்கா கூறியுள்ளார்.
ஜப்பானை சுற்ற தயாராகும் ஆசிரியர், மாணவர் பட்டியல்...
தமிழகத்தில் கல்வி பரிமாற்றம் திட்டத்தின்
கீழ் ஜப்பான் செல்ல தகுதியுள்ள ஆசிரியர், மாணவர் பட்டியல் தயாரிக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரு நாட்டின் ஒப்பந்தம் அடிப்படையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து 96 மாணவர்கள், 16 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக தமிழக கல்வித் துறையில் ஐந்து மாணவர்கள், ஒரு ஆசிரியரை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரு நாட்டின் கலாசாரம், பண்பாடு, கல்வி முறை குறித்து தெரிந்து கொள்வதற்கு திட்டம் வகை செய்துள்ளது. மாணவர்கள் பிளஸ் 1 அல்லது பிளஸ் 2 வகுப்பை சேர்ந்தவராகவும் அதிக மதிப்பெண் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். ஆங்கில புலமையும், தேசிய மற்றும் ஊரக திறனாய்வு தேர்வுகளில் பங்கேற்று உதவி தொகை பெறுபவராகவும், பாஸ்போர்ட்
பெற்ற மாணவராகவும் இருக்க வேண்டும். ஆசிரியரை பொறுத்தவரை அவர் முதுகலை பிரிவில்
ஆங்கிலம் நன்கு தெரிந்து, மத்திய நல்லாசிரியர் விருது பெற்றவராகவும், ஜப்பானுக்கு இதுவரை செல்லாதவராகவும் இருக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஒரு மாவட்டத்திற்கு தலா 32 ஆசிரியர், மாணவர் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் தயாரித்து, அதில் இருந்து தமிழகம் சார்பில் ஐந்து மாணவர், ஒரு
ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு வரும் ஏப்., அல்லது மே மாதத்தில் ஜப்பான் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். இதுபோல் ஜப்பானில் இருந்தும் ஆசிரியர், மாணவர்கள் இந்தியா வரவுள்ளனர், என்றார்.
ஞாயிறு, 17 டிசம்பர், 2017
Facebook வழங்கிய "ஸ்னூஸ்" வசதி...
ஃபேஸ்புக் நிறுவனம் "ஸ்னூஸ்" என்ற வசதியை புதிதாக
வழங்கி உள்ளது.
இதன் மூலம் பயனர்கள் குறிப்பிட்ட நபர்களை 30 நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக தடை செய்து வைக்கும் வசதியை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக "பிளாக்" என்ற வசதியின் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத நபரின் தகவல்களை நிரந்தரமாகத் தடைசெய்ய முடியும்.
ஆனால் தற்போது வெளியாகி உள்ள இந்த ஸ்னூஸ் வசதியின் மூலம் 30 நாட்கள் தற்காலிகமாக மட்டும் ஒரு நபரின் தகவல்களை தடை செய்து வைக்க இயலும்.
இதன் மூலம் தடைசெய்யப்பட்ட நபர், பயனரின் தகவல்களை காண இயலாது. ஒரு தனி நபர் மட்டுமின்றி ஒரு குரூப்பினை தற்காலிகமாகத் தடை செய்யவும் இந்த "ஸ்னூஸ்" வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் தேவையற்ற செய்திகளை தடைசெய்து தேவையான தகவல்களை மட்டும் பயனர்கள் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் 'EMIS' எண்ணோடு, ஆதார் எண்ணை டிச.31-க்குள் 100 சதவீதம் இணைத்து அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது...
பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை போலியாக காண்பித்தல், நலத்திட்ட உதவிகளில் முறைகேட்டில் ஈடுபடுதல் உள்ளிட்டவையை களைய 'EMIS' என்ற கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டது.
மாணவர்களுக்கு தனி இலக்க அடையாள எண் வழங்கப்பட்டு, அவர்களது பெயர், ரத்த வகை, பெற்றோர் பெயர், வருமானம், முகவரி, புகைப்படம், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
'EMIS' எண்ணோடு மாணவர்களின் ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 'EMIS' எண்ணோடு இதுவரை ஆதார் எண் பதியாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் டிச.31-க்குள் ஆதார் எண்ணை பதிவு செய்து 100 சதவீத பணியை நிறைவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: 'EMIS' எண்ணோடு ஆதாரை இணைப்பதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்படும். 'EMIS' அடிப்படையில் வருகின்ற கல்வி ஆண்டில் பள்ளி கல்வி துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
இதற்கான பிரத்யேக அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் விபரங்களை எங்கிருந்தும் கண்காணிக்கலாம். வேறு பள்ளிக்கு மாணவர் மாற்றம் கேட்டால், 'EMIS' இணையதளத்தில் மாணவரை மாற்றம் செய்தால் மட்டுமே, புதிய பள்ளியில் சேர்க்க முடியும், என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)