செவ்வாய், 24 டிசம்பர், 2019

திருப்பாவை விழாவில் கலந்து கொள்ள பள்ளி மாணவர்களை தயார் செய்தல் சார்ந்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலர் செயல்முறை


தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் மற்றும் தேசிய கொடி சார்ந்து வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் பின்பற்றுமாறு திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர் செயல்முறை




டிசம்பர் 24,
வரலாற்றில் இன்று.

வாஸ்கோடகாமா நினைவு தினம் இன்று(1524).

இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தான்.

1498 மே மாதம் 20ஆம் தேதி அந்த வெள்ளிக்கிழமை இரவு அரபிக்கடல் வழியே கப்பலில் பொர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா கேரளாவில் உள்ள கோழிக்கோடு வந்து சேர்ந்தான்.இந்தியாவின் அளப்பரிய செல்வம் கேள்விப்பட்டு ஐரோப்பியர் இந்தியாவோடு வியாபாரம் செய்யத்துடித்த காலமது. இங்கு தங்கமும், வாசனைத் திரவியங்களும் மிகுந்திருப்பதாய் கேள்விப்பட்டு கொலம்பஸ் கடல் வழியே 1492இல் இந்தியாவிற்குப் பதிலாக மேற்கு இந்தியத் தீவுகளையும் அமெரிக்காவையும் கண்டறிந்த சம்பவத்திற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது.

வாஸ்கோடகாமாவோடு கப்பலில் பயணம் செய்த குழுவில் ஒருவன் எழுதி வைத்த டயரிக்குறிப்பில் அந்தப் பயணத்தின் அதிர்ஷ்டம் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.
பயணம் செய்த குழு தரை இறங்கி விசாரித்துவிட்டு படகில் கப்பலுக்குத் திரும்பியபோது கொண்டு விட வந்த கோழிக்கோட்டுக்காரன் “அதிஷ்டமான பயணம்! மகா அதிஷ்டமான பயணம்! வைரமும் வைடூரியமுமாய் இருக்கின்றன. இந்த வளமான பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்ததற்கு தாங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.: என போர்ச்சுக்கீசிய மொழியிலேயே பேசியது கண்டு பிரமிப்பு அடைந்து போனார்களாம்.

இந்த பயணம்தான் ஐரோப்பாவிலிருந்து போர்த்துகீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வழி அமைத்து கொடுத்தது.

ரூட் அறிந்து அடுத்தடுத்து (மூன்றாவது முறையாக) இந்தியா வந்தபோது இந்தியாவுக்கான அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் வாஸ்கோடகாமா. ஆனால் வந்த சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டு 1524ஆம் ஆண்டு  டிசம்பர் 24ஆம் தேதி அவர் கோழிக்கோட்டிலேயே காலமானார். கொச்சியில் உள்ள ஒரு தேவலாயத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டு பின்னர் 1539ஆம் ஆண்டு அதன் மிச்சங்கள் போர்ச்சுக்கலுக்கு அனுப்பபட்டன.
டிசம்பர் 24,
வரலாற்றில் இன்று.

ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் பிறந்த தினம் இன்று.

ஆற்றல் அழிவின்மை விதியை உருவாக்கிய அறிவியல் அறிஞரான ஜூல், 1818ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று இங்கிலாந்தின் சால்ஃபோர்டில் பிறந்தார். ஒரு பொருளினை ஒரு மீட்டர் தொலைவிற்கு நகர்த்த தேவையான ஆற்றலின் அலகு ஜூல் என அழைக்கப்படுகிறது. மொத்த ஆற்றலானது ஒருபோதும் மாறாததாகும். ஆற்றல் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறக்கூடியது. ஆனால் அதனை ஒருபோதும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதை ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் நிரூபித்தார்.
💐டிசம்பர் 24,வரலாற்றில் இன்று.தந்தை பெரியார் நினைவு தினம்.

1. தந்தை பெரியார் 1879-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டது.

2. தந்தை பெரியார் தனது படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். 19 வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.

3. 1902-ம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். அனைத்து சாதியினருடனும் சேர்ந்து சமமாக உணவு சாப்பிட்டார். இதனால் அவருக்கும், அவர் தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, துறவு பூண்டு காசிக்கு சென்றார் தந்தை பெரியார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வுகளால் இறைமறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார்.

4. ஆரம்ப காலத்தில் காந்தி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு 1919-ம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்திய பல போரட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். 1922-ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தந்தை பெரியார் தேர்தெடுக்கப்பட்டார்.

5. அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்ததால், தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார்.

6. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் கோயிலுக்குள் நுழையவும், கோயில் வீதியில் நடக்கவும் தலித் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை எதிர்த்து நடந்த போரட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என அழைக்கப்பட்டார்.

7.1925-ம் ஆண்டு சமுகத்தில் இருக்கும் மூடபழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என ‘சுயமரியாதை இயக்கம்’  தொடங்கினார். அதே அண்டு “குடியரசு நாளிதழை” தொடங்கினார் தந்தை பெரியார். இந்த நாளிதழ் மூலம் பெரியார் தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்பினார். இதற்க்கு மக்களின் பெரும் ஆதரவும் கிடைத்தது. மாநாடு, கூட்டங்கள் நடத்தி மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

8. 1937-ம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. 1938-ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் இந்தி மொழிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


9. 1939-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும், நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ம் ஆண்டு ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார் பெரியார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது.


10. 1949-ம் ஆண்டு முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்பட்டனர். திராவிடர் கழகம் தலித்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.


11. 1949-ம் ஆண்டு தனது வழிகாட்டியான தந்தை பெரியாரிடமிருந்து அண்ணாதுரை விலகி, திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.


12. இந்து மத கடவுள்கள் மூடநம்பிக்கைகளை மக்களிடையே வளர்ப்பதாக கூறி, 1952-ம் ஆண்டு பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல், இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தினார்.


13. 1962-ம் ஆண்டு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் அவருக்கு பொறுப்பை தந்தார்.


14. அப்போதைய இந்திய கல்வி அமைச்சர் திரிகுனா சென் அவர்களால், தந்தை பெரியாருக்கு ‘யுனஸ்கோ விருது’  1973-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி வழங்கப்பட்டது.


15. 1973-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில், சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டார்.
1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24அன்று தனது 94 வது வயதில் காலமானார்.
டிசம்பர் 24,
வரலாற்றில் இன்று.

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று.

இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்வதற்கும் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த சட்டம் வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குவோர் தங்களது வணிகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யவும் வழிவகை செய்கிறது. மேலும் எந்தவொரு பொருள் வாங்கினாலும் ரசீதையும் கேட்டு வாங்க வேண்டும். அப்போதுதான் ஏதாவது பிரச்சனை என்றால் உரிமையோடு போராட முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.

திங்கள், 23 டிசம்பர், 2019

பள்ளிக்கல்வி_தண்ணீர் சிக்கனம் சேமிப்பு விழிப்புணர்வு விருது 2019 சார்ந்து இயக்குநர் செயல்முறை



டிசம்பர் 23,
வரலாற்றில் இன்று.

உலகின் பல விடுதலைப்போராட்ட வரலாற்றிலும், இராணுவ வரலாற்றிலும் என்றும் அழிக்க முடியாத இடத்தை பிடித்த AK 47 தானியங்கித்
துப்பாக்கியின் தந்தை மிக்கெயில் தி. கலாஷ்னிகோவ் (Mikhail Timofeyevich Kalashnikov) நினைவு தினம் இன்று.

மிக்கேயில் தி.கலாஷ்னிகோவ்
(10,நவம்பர் 1919 – 23, டிசம்பர் 2013)



AKM, AK 74 உட்பட பல துப்பாக்கிகள் AK 47ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டன. 75 மில்லியன் AK 47 உட்பட மொத்தம் 175 மில்லியன் துப்பாக்கிகள் இன்றுவரை தயாரிக்கப்பட்டுள்ளன.

ஏ.கே 47 இல் ஏ.கே என்பது Automatic Kalashnikov (தானியங்கி கலாஷ்னிகோவ்) என்பதையும் 47 என்பது  1947ம் ஆண்டையும் குறிக்கின்றது.

(படத்தில் 1949 மற்றும் 2009களில்
மிக்கெயில் தி. கலாஷ்னிகோவ்)
டிசம்பர் 23, வரலாற்றில் இன்று.

அய்யா கக்கன் அவர்கள் நினைவு தினம் இன்று.

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார்.

அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார்.

கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், ‘அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.

உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, ‘இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான்.

ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம்.

நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன்’ என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், ‘சிங்கிள் பெட்ரூம்’ வீட்டில் தங்கிக்கொண்டார்.

கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது.

கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன்.

இதைக் கேட்டதுமே, ‘அப்படியா’ என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக ‘தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும்.

ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்’ என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன்.

எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார்.

இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்.

இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.

சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்:

எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை’ தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது.

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன்.

1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.

இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார்.

அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார். அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு,

 ‘அண்ணே! முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு’ என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். ‘அப்படியா? இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை? ஐயா எந்த வார்டில் இருக்கிறார்?’ என்று கேட்டார்.

அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் எ
டிசம்பர் 23,
வரலாற்றில் இன்று.

முதல் சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த தினம் இன்று.

1954ஆம் ஆண்டில் உலகின் முதல் வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பாஸ்டனிலுள்ள ப்ரிகாம் மருத்துவமனையில் செய்யப்பட்டது.

 ஜோசஃப் முர்ரே தலைமையிலான மருத்துவர்கள் குழு இச்சிகிச்சையைச் செய்தது. உடலின் எதிர்ப்புச் சக்தியால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்காக, இரட்டையர்களுக்கிடையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது. ஏனெனில் இதற்கு முந்தைய முயற்சிகளில் உடல் ஏற்காததால், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

 இருதயம், இரைப்பை, தமனிகள், சிறுநீரகம் முதலான உறுப்புக்களை இறந்தவர்களின் உடலிலிருந்து மாற்றும் சிகிச்சை எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்று முதன்முதலில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சைமன் ஃப்ளெக்ஸ்னர் என்ற அமெரிக்க ஆய்வாளர் சமர்ப்பித்த 'நோயியலின் போக்குகள்' என்ற ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

சோவியத் அறுவை சிகிச்சை நிபுணர் யூரி வோரோனி, 1933இல் இறந்தவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை ஒரு நோயாளிக்குப் பொருத்தினார். ஆனால், அது நோயாளிக்குப் பொருந்தாததால் அவர் இரண்டு நாளில் இறந்தார். 1950 ஜூன் 17 அன்று இல்லினாய்சில் ஒரு 44 வயதுப் பெண்மணிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. ஆனால், உடலின் நோயெதிர்ப்பு செயல்பாடுகள், மாற்றப்பட்ட சிறுநீரகத்தை வெளிப்புறப்பொருள் என்று கருதி நிராகரிப்பதைத் தடுப்பதற்கான மருந்துகள் அக்காலத்தில் இல்லாததால் 10 மாதங்களுக்குப்பின் அந்தச் சிறுநீரகம் செயலிழந்தது.
ஆனாலும் தனது பழுதாகாத மற்றொரு சிறுநீரகத்தின் உதவியுடன் அவர் 5 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். உயிருடன் இருக்கும் ஒருவரிடமிருந்து சிறுநீரகம் பெற்று மாற்றும் சிகிச்சை முதன்முதலாக 1952இல் பாரீசிலுள்ள நெக்கர் மருத்துவமனையில் ஜீன் ஹாம்பர்கர் என்ற மருத்துவரால் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால்  அந்த சிறுநீரகம் 3 வாரத்தில் செயலிழந்தது.

 1954 டிசம்பர் 23இல் முர்ரே செய்ததே முழுமையான வெற்றிபெற்ற சிறுநீரக மாற்று சிகிச்சையாகியது. இதற்கும், இதனைத் தொடர்ந்து ஆற்றிய பணிகளுக்கும் 1990இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜோசஃப் முர்ரே-க்கு வழங்கப்பட்டது.