வியாழன், 1 அக்டோபர், 2020

அக்டோபர் 1, வரலாற்றில் இன்று. இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்ட தினம் இன்று(1854).

அக்டோபர் 1, வரலாற்றில் இன்று.

  இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்ட தினம் இன்று(1854).

இந்திய அஞ்சல் துறை 'இந்தியா போஸ்ட்' (India Post) என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. உலகில் அதிகமான அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட நாடு இந்தியா.

இந்திய அஞ்சல்துறை மொத்தம் 1,54,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும்(சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன.21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல்அலுவலகம் என்ற விகிதத்தில் இது உள்ளது.

வரலாறு

இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக 1764-1766களில் பம்பாய்(மும்பை), சென்னை மற்றும் கல்கத்தா(கொல்கத்தா) மாகாணங்களில் அஞ்சல் சேவையைத் துவக்கியது. வாரன் காஸ்டிங் கவர்னராக இருந்த போது அஞ்சல் சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியது. அப்போது 100 மைல் தூரத்துக்குட்பட்ட கடிதங்களுக்கு 2 அணா (ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு) வசூலிக்கப்பட்ட்து.
அஞ்சல் சேவையின் அவசியத்தை உணர்ந்தவுடன் பிறகு அனைத்து மாகாணங்களிலும் அஞ்சல் துறை செயல்படத் தொடங்கியது. 1839ல் வடமேற்கு, 1860ல் பஞ்சாப், 1861ல் பர்மா, 1866ல் மத்திய மாகாணம், 1869ல் சிந்து, 1871ல் ராஜபுதனா, 1873ல் அஸ்ஸாம், 1877ல் பீகார், 1878ல் கிழக்கு வங்காளம் ஆகிய அஞ்சல் வட்டங்கள் துவங்கப்பட்டு அஞ்சல்துறை செயல்படத் தொடங்கியது. பின் 1914ம் ஆண்டுவாக்கில் இந்த அஞ்சல் வட்டங்கள் இணைக்கப்பட்டு 7 அஞ்சல் வட்டங்களாகக் குறைக்கப்பட்டன. வங்காளம்&அஸ்ஸாம், பிகார்&ஒரிஸ்ஸா, பம்பாய்(சிந்து உள்ளடக்கியது), பர்மா, மத்திய,
சென்னை, பஞ்சாப்&வடமேற்கு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியனவாக இணைக்கப்பட்டன. தபால்தலைகளின் உபயோகம் 1 ஜூலை 1852ல் சிந்து மாவட்டதில் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால்தலைகள் வட்டவடிவில் இருந்தன. பின்னர் 1854ல் பேரரசி விக்டோரியாவின் உருவம் பொரிக்கப்பட்ட தபால் தலைகள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டு EAST INDIA POSTAGE என்ற பெயருடன் இந்தியா முழுவதும் உபயோகத்துக்கு வந்தன.

துறை அமைப்பு

இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 22 அஞ்சல் வட்டங்கள் தற்போது உள்ளன. ஒவ்வொரு அஞ்சல் வட்டமும் தலைமை அஞ்சல் அதிகாரியின் கீழ் இயங்குகின்றன. இந்த அஞ்சல் வட்டங்கள் தவிர இந்திய இராணுவத்தின் அஞ்சல்சேவைக்காக ஒரு சிறப்பு அஞ்சல் வட்டமும் செயல்படுகிறது

அஞ்சல் அலுவலகங்களின் வகைகள்

இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
தலைமை அஞ்சல் அலுவலகங்கள்
துணை அஞ்சல் அலுவலகங்கள்
புற உறுப்பான துணை அஞ்சல் அலுவலகங்கள்
புற உறுப்பான கிளை அஞ்சல் அலுவலகங்கள்

அஞ்சல் அலுவலகச் சேவைகள்

இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் சேவைகள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
ராஜதானிப் பிரிவு - தேசியத் தலைநகரத்திலிருந்து மாநிலங்களின் தலைநகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் அஞ்சல்கள் இவை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
பச்சைப் பிரிவு - தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்ட அஞ்சல் நிலையங்களில் இருந்து பெரும் நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் தபால்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி பச்சை நிறத்தில் இருக்கும்.
பெருநகரப் பிரிவு - பெங்களூர் , ஐதராபாத் , கொல்கத்தா , சென்னை , டெல்லி , மும்பை ஆகிய பெருநகரங்களுக்கிடையே செல்லும் அஞ்சல்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி நீல நிறத்தில் இருக்கும்.
வணிகப் பிரிவு - அதிக அளவு அஞ்சல்களை அனுப்புகிற வணிகர்களுக்காக அமைக்கப்பட்டது. பதிவு அஞ்சல் முதலான பல பிரிவுகளில் இந்த அஞ்சல்கள் மொத்தமாக ஒரு சில தபால் நிலையங்களில் பெறப்படும்.
பருவ இதழ்கள் பிரிவு - அஞ்சல் வழியில் வார, மாத அச்சிதழ்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பத்திரிகை அலுவலகங்கள் அனுப்பும் அஞ்சல்கள் இவ்வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு இதழுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு அந்த நாட்களில் மட்டும் பத்திரிகை அஞ்சல்கள் பெறப்படுகின்றன.
மொத்தத் அஞ்சல் பிரிவு - பெரும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் அதிகமான அஞ்சல்கள் அஞ்சல் பெட்டிக்கோ அல்லது அஞ்சலகத்திற்கோ செல்லாமல் அஞ்சல் பையில் இடப்பட்டு அஞ்சல் பிரிப்பகத்திற்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படும்

அஞ்சல் குறியீட்டு எண்

அஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972 -ல் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும். மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.
உதாரணமாக, * புதுடெல்லி , ஜம்மு - காஷ்மீர் , பஞ்சாப் , இமாசலப் பிரதேசம் , ஹரியானா, சண்டிகர் ஆகியவைகளுக்கு தொடக்க எண் 1 ஆக இருக்கிறது.
உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலத்திற்கு தொடக்க எண்ணாக 2 இருக்கிறது.
ராஜஸ்தான் , குஜராத் , டையூ -டாமன், நாகர்ஹவேலி பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 3 இருக்கிறது.
மத்தியப் பிரதேசம் , கோவா , மகாராஷ்டிரம் ஆகியவைகளுக்கு தொடக்க எண்ணாக 4 இருக்கிறது.
ஆந்திரப் பிரதேசம் , கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 5 இருக்கிறது.
தமிழ்நாடு , கேரளா , இலட்சத்தீவு , மினிகாய்த்தீவு ஆகிய பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 6 இருக்கிறது.
ஒரிசா , அந்தமான் - நிகோபார் , மேற்கு வங்காளம் , மிசோரம் , மேகாலயா , மணிப்பூர் , நாகலாந்து , அசாம் , அருணாச்சலப் பிரதேசம் , திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 7 இருக்கிறது.
பீகார் , ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 8 இருக்கிறது.

பலதரப்பட்ட அஞ்சல் சேவைகள்

பொதுவாக அனைத்து அஞ்சல் நிலையங்களும் பின்வரும் சேவைகளில் ஈடுபடுகின்றன.

அஞ்சல்தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடிதஉறைகள் விற்பனை
பதிவுத் அஞ்சல்கள் (Registered post) அனுப்புதல்
அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல் (Money order)
அஞ்சல் மூலம் பொருட்கள் அனுப்புதல் (Booking parcels)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை
செயற்கைக் கோள் வழியில் பணவிடை அனுப்பும் வசதி
மின்னணு அஞ்சல்
இணைய வழி பில் தொகை செலுத்தல்
புத்தகங்கள் விற்பனை

இதர சேவைகள்

இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் தபால் அனுப்பும் சேவைகளில் மட்டுமல்லாது கீழ்க்கண்ட பிற வசதிகளையும் பொதுமக்களுக்குத் தருகின்றன.
பொதுசேமநலநிதி
தேசிய சேமிப்புப் பத்திரம்
வங்கி சேமிப்புக் கணக்கு
மாத வருவாய்த் திட்டம்
வைப்புத் தொகைத் திட்டங்கள்
கடவுச்சீட்டு விண்ணப்பம்
தங்கக் காசு விற்பனை
காப்பீட்டுத் திட்டச் சேவை

அக்டோபர் 1,வரலாற்றில் இன்று.சர்வதேச முதியோர் தினம் இன்று.

அக்டோபர் 1,
வரலாற்றில் இன்று.

சர்வதேச முதியோர் தினம் இன்று.

ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 1991 இல் இருந்து இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.

*🌟Due date for furnishing of belated & revised ITRs for Assessment Year 2019-20 has been extended from 30 September, 2020 to 30th November, 2020*

*🌟Due date for furnishing of belated & revised ITRs for Assessment Year 2019-20 has been extended from 30 September, 2020 to 30th November, 2020*

*🌟2020 அக்டோபர் மாதம் ஆண்டு ஊதிய உயர்வு -ஊதிய படிநிலைகள் மற்றும் வீட்டு வாடகைப்படி உயர்வு படிநிலைகள்.*

*🌟2020 அக்டோபர் மாதம்  ஆண்டு ஊதிய உயர்வு -ஊதிய படிநிலைகள் மற்றும் வீட்டு வாடகைப்படி உயர்வு படிநிலைகள்.*

புதன், 30 செப்டம்பர், 2020

*🌟EER பதிவேடு மற்றும் 6-14, 15-18 வயதில் இடைநின்ற மாணவர்கள் விவரமும் பராமரிப்பது குறித்து நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.*

*🌟EER பதிவேடு  மற்றும் 6-14, 15-18 வயதில் இடைநின்ற மாணவர்கள் விவரமும் பராமரிப்பது குறித்து நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.*

*🌟02.10.2020 அன்று கிராம சபாக் கூட்டம் நடத்துதல் தொடர்பான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநர் கடிதம்.*

*🌟02.10.2020 அன்று கிராம சபாக் கூட்டம் நடத்துதல் தொடர்பான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநர்   கடிதம்.*

*2020-21 நிதியாண்டு வருமானவரி செலுத்துதல் பழைய வரி விகிதம் மற்றும் புதிய வரி விகிதம் வேறுபாடு.*

2020-21 நிதியாண்டு வருமானவரி செலுத்துதல் பழைய வரி விகிதம் மற்றும் புதிய வரி விகிதம் வேறுபாடு.வேறுபாடு அட்டவணையை பார்க்க கிளிக் செய்யவும்.

click here

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று. சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று.

செப்டெம்பர் 30, 
வரலாற்றில் இன்று.

 சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று. 

இவர் அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் நிலநடுக்கவியலாளர்.

 நிலநடுக்கத்தை உணர்வதற்கு உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ரிக்டர் அளவீடு என்ற அலகினைக் கண்டறிந்தவர். 

பைனோ கூட்டன்பர்க் என்பவரின் உதவியுடன் சார்லஸ் ரிக்டர் கண்டறிந்த இந்த அலகு நிலநடுக்க விளைவுகளைக் மடிமை அளவீட்டால் (logarithm) கணக்கிட பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று. எண்ணற்ற தகவல்களை அள்ளித் தரும் தமிழ் விக்கிபீடியா தொடங்கப் பட்ட தினம் இன்று (2003).

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று.

 எண்ணற்ற தகவல்களை அள்ளித் தரும் தமிழ் விக்கிபீடியா தொடங்கப் பட்ட தினம் இன்று (2003).

தமிழ் விக்கிப்பீடியாவின் 60000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும். 

மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது.

 விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது.

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று.சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் இன்று.

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று.

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் இன்று.

கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை மொழிபெயர்த்த புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு தினமான செப்டெம்பர் 30ஆம் தேதி, சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகிறது.

ஜெரோம் 'மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர்' என புகழப்படுகிறார். 1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'சர்வதேச மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்பு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1991ஆம் ஆண்டில் இந்த அமைப்பானது பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளை உலகளாவிய அளவில் கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.