ஞாயிறு, 6 டிசம்பர், 2020

*🏥 NHIS - G.O Ms.No. 441 Dt: December 03, 2020 - MEDICAL AID - New Health Insurance Scheme, 2018 for the Pensioners (including spouse) /Family Pensioners – Empanelment of Accredited Hospitals – Approval of 133 additional hospitals and inclusion of Additional speciality in 29 hospitals based on the recommendations of the Accreditation Committee – Notified – Orders – Issued.*

*🏥 NHIS - G.O Ms.No. 441 Dt: December 03, 2020 - MEDICAL AID - New Health Insurance Scheme, 2018 for the Pensioners (including spouse) /Family Pensioners – Empanelment of Accredited Hospitals – Approval of 133 additional hospitals and inclusion of Additional speciality in 29 hospitals based on the recommendations of the Accreditation Committee – Notified – Orders – Issued.*
அரசாணை மற்றும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியலைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

*🌻TN-EMIS - New Update Available Now - Direct Link.*

*EMIS FLASH NEWS*

*TN -EMIS NEW UPDATE* AVAILABLE UPDATE NOW

*DATE 05.12.2020*

*TN -EMIS New Update direct link* Available -update Now

TN-EMIS ஐ Update செய்ய இங்கே கிளிக் செய்க.

சனி, 5 டிசம்பர், 2020

🖥️வருமானவரி 2020-21 ஆம் நிதியாண்டுக்கான வழிகாட்டுதல் குறிப்பு-பழைய வருமானவரி முறை-புதிய வருமானவரி முறை ஓர் ஒப்பீடு.மற்றும் 2020-21 ஆம் நிதியாண்டிற்கான பழைய வருமானவரி முறையிலான படிவம்&புதிய வருமானவரி முறையிலான படிவங்கள்.*

*🖥️வருமானவரி 2020-21 ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதல் குறிப்பு-பழைய வருமானவரி முறை-புதிய வருமானவரி முறை  ஓர் ஒப்பீடு.மற்றும் 2020-21 ஆம் நிதியாண்டிற்கான பழைய வருமானவரி முறையிலான படிவம்&புதிய வருமானவரி முறையிலான படிவங்கள்.*


வருமானவரி 2020-21 ஆம் ஆண்டுக்கான SBI -இன் வழிகாட்டுதல் குறிப்புகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.


பழைய வருமானவரி முறை 
மற்றும் புதிய வருமானவரி முறை வவேறுபாடு தொடர்புடைய குறிப்புகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

*2020-21 ஆம் நிதியாண்டிற்கான பழைய வருமானவரிப் படிவத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.(4 பக்கம்)


2020-21 ஆம் நிதியாண்டிற்கான புதிய வருமானவரிப் படிவத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.(2 பக்கம்)

பல்கலைக்கழகமாக மாறும் இந்திய மொழிகள் மத்திய நிறுவனம்... இந்தியில் பெயர் மாற்றம்.

பல்கலைக்கழகமாக மாறும் இந்திய மொழிகள் மத்திய நிறுவனம்... இந்தியில் பெயர் மாற்றம்
4 December 2020 

புதுதில்லி:
மைசூருவில் உள்ள இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் மத்தியப் பல்கலைக்கழகமாக மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய மொழிகள் ஆய்வுக்காக மைசூருவில் 1969-ல் இந்தியமொழிகள் மத்திய நிறுவனம் (சிஐஐஎல்)அமைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்தி மற்றும்ஆங்கில மொழி வளர்ச்சிக்கான கல்வி நிறுவனங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக மேம்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து மொழிகள் நிறுவனத்தை பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா (பிபிவி) என்றுஇந்தியில் பெயர் மாற்றி, மத்திய பல்கலைக்கழகமாக மாற்றவும் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளை இதன் துறைகளாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய மொழிகளும் செம்மொழி அந்தஸ்து பெற்றாலும் தமிழைப் போல அவற்றுக்கு தனி ஆய்வு நிறுவனம் அமைக்கப்படாதது இதற்கு சாதகமாக உள்ளது.தமிழுக்கு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இதற்கு நிரந்தர இயக்குநர், சில மாதங்களுக்கு முன்புதான் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் மற்ற மொழிகளுடன் தமிழும் இணைக்கப்பட்டால் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும் பிபிவி உடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.செம்மொழிகளை புதிய மத்திய பல் கலைக்கழகமான பிபிவி உடன்இணைப்பதுஉள்ளிட்ட பல்வேறு கூறுகளை ஆய்வு செய்ய 11 அறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை மத்திய கல்வி அமைச்சகத்தின் மொழிகள் பிரிவு அமைத்துள்ளது.இக்குழுவுக்கு தமிழரான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தலைமை ஏற்றுள்ளார். அடுத்த 3 மாதங்களில் அறிக்கை அளிக்குமாறு இவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பாளர்கள் தட்டுப்பாடு
இதுகுறித்து என்.கோபாலசாமி கூறுகையில், தற்போது இந்திய மொழிகளை மொழிபெயர்ப்பதில் வல்லுநர்கள் தட்டுப்பாடு உள்ளது. இது கவனிக்கப்படாமலேயே உள்ளது. இதை முக்கிய குறிக்கோளாக்கி அனைத்து மொழிகளையும் வளர்க்கும் வகையில் சிஐஐஎல் நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஏற்கெனவே செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையுடன் இணைக்கும் முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.

சமஸ்கிருதத்தைச் சீராட்டும் மத்திய அரசு, செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தை, மைசூருவில் உள்ள பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்துச் சுருக்குவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முடிவை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சமஸ்கிருதத்தைச் சீராட்டும் மத்திய அரசு, செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தை, மைசூருவில் உள்ள பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்துச் சுருக்குவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முடிவை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்!

முதலமைச்சர் திரு. பழனிசாமி அனைத்துப் பிரச்சினைகளிலும் அமைதி காப்பது போல், பாஜக அரசின்  இந்த முடிவையும் ஆமோதிக்காமல், அதனைக் கைவிட வலியுறுத்தி உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மத்திய கல்வி அமைச்சகத்தில் காலிப்பணியிடங்கள் !தகவல் உரிமைச்சட்டப்பதில்கள்!பணியாளர் இல்லாமல் முடங்கி கிடக்கும் மத்திய கல்வி அமைச்சகம் !

மத்திய கல்வி அமைச்சகத்தில் காலிப்பணியிடங்கள் !
தகவல் உரிமைச்சட்டப்பதில்கள்!


பணியாளர் இல்லாமல் முடங்கி கிடக்கும் மத்திய கல்வி அமைச்சகம் ! 

  தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக சில தகவல்களை பெற மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மனு அனுப்பியிருந்தேன்.

 அதில் கிடைத்த பதில்களை இதனுடன் இணைத்துள்ளேன் ! 

 மத்தியகல்வி அமைச்சர் அலுவலகத்தில் கூட காலிப்பணியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு மெத்தனமாக இருப்பது கல்வி வளர்ச்சியில் மத்திய அரசின் உண்மையான அக்கறை தெரியவருகிறது ! 

  தற்போது பணியாற்றிவருபவர்களின் எண்ணிக்கை 754 

 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 326 

 

 நாடு முழுவதும் உள்ள IIT,IIM,IISE,மத்தியபல்கலைகழகங்கள் என அனைத்து நிறுவனங்களின் நிலையும் இது தான் ! 

 கல்வி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்காமல் கொள்கையை அறிவிப்பதும்,மேடையில் முழங்குவதும் மக்களை ஏமாற்றும் செயல் ! 

 மத்திய அரசிற்கு உண்மையான அக்கறை இருக்குமானால் மத்திய அரசின் கல்வித்துறை,கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் அனைத்து பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்களையும் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் !

 இதை செய்யாமல் புதியகல்வி கொள்கையை அமுல்படுத்தி கல்வியில் மாற்றம் செய்வோம் என கூச்சலிடுவது எந்த பலனையும் தராது ! 

 ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் அமைச்சக அதிகாரிகள் பற்றாகுறை உள்ள நிலையில் அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் சொற்பொழிவில் எதையும் முறையாக கவனிக்க இயலாமல் நிர்வாக சீர்குழைவு தான் ஏற்படும் ! 

 தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் ! 

 ஆத்த மாட்டாதவன் கையில் ( .. )58 அறிவாளாம் ! 

 மத்தியகல்வி அமைச்சகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பணியாளர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பது வியப்பளிக்கிறது ! 

 மத்திய கல்விதுறை பதிலை இதனுடன் இணைத்துள்ளேன்.

வே.ஈசுவரன், மதிமுக.

வெள்ளி, 4 டிசம்பர், 2020

*💫ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-AWP & B 2021-22 ஆண்டு வரைவுத்திட்டம் தயாரித்தல்-வட்டார மற்றும் பள்ளி அளவில் தயாரிப்புப்பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பான நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*💫ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-AWP & B 2021-22 ஆண்டு வரைவுத்திட்டம் தயாரித்தல்-வட்டார மற்றும் பள்ளி அளவில் தயாரிப்புப்பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பான நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*💥 DGE - NTSE Exam - தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 2020 - பள்ளிகளிடமிருந்து Summary Report - ஐ பெறுதல் - தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி வெளியீடு**👉 தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செலுத்த முடியாத பள்ளிகள் வங்கி வரைவோலையாக செலுத்தலாம் என அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு!!!*

*💥 DGE - NTSE Exam - தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 2020 - பள்ளிகளிடமிருந்து Summary Report - ஐ பெறுதல் - தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி வெளியீடு*

*👉 தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செலுத்த முடியாத பள்ளிகள் வங்கி வரைவோலையாக செலுத்தலாம் என அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு!!!*

*🌻 2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட முழுமையான தகவல் தொகுப்பு *

*🌻 2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட முழுமையான தகவல் தொகுப்பு *
தகவல் தொகுப்பினைப் படிக்க இங்கே கிளிக் செய்க.
click here

பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?

பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?

ஆண்களின் உடையில் பாக்கெட் தவறாமல் இடம்பெறுகிறது. ஆனால் பெண்களின் உடையில் அது அவசியமற்றதாக கருதப்படுகிறது; அல்லது முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, ஏன் ?

By வினவு செய்திப் பிரிவு -December 3, 2020
வரலாறு முழுக்க பெண்களின் ஆடைகளில் பாக்கெட்டுக்கு ஏன் இடமில்லாமல் போனது என்பதற்கும் ஆண்கள் ஆடைகளில் ஏன் இடமிருந்தது என்பதற்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது.

வீட்டிலிருந்து எப்போது புறப்பட்டாலும் வீட்டைப்பூட்டிய பின் சாவி அண்ணனின் கைக்கோ அல்லது அப்பாவின் கைகளுக்கோ தான் போகும். அப்படித்தான் கார் சாவியும். ஏனெனில் அவர்களிடம்தான் சட்டைப்பை இருக்கும். அப்போது நம்மிடம் கிட்டெ இல்ல. அன்று பெண்களிடம் கைப்பை பெருமளவில் இல்லையென்றாலும், இன்று பெண்களிடம் கைப்பை இருக்கும் காலத்திலும் சாவி இடம்பெருவது என்னமோ அந்த சொக்காயில் தான்.

அந்தக்காலத்தில் நமது பாட்டியெல்லாம் ஓரு சுருக்குப் பை தான் வைத்திருந்து பாத்திருப்போம். அவரவர்களுக்கு  தேவையானது எல்லாம் அந்த பைக்குள் தான் இருக்கும். ஆனால் தாத்தா எப்போவும் பட்டாப்பட்டி கால் டிரோசர் பையிலும்,  சட்டையிலும்தான் காசு வைத்திருப்பார். ஆனால் நமது பாட்டியிடம் நாம், “ஏன் பாட்டி நீயும் சட்டை பையில் வைக்காம சுருக்கு பைல வெச்சிருக்க?” என்று கேட்டதில்லை. ஏனெனில் அக்கேள்வி இயல்பாகவே நமக்குத் தோன்றுவதில்லை.

17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் எல்லாம், யாருடைய ஆடையிலும் பாக்கெட் இல்லை. எல்லாரும் பணத்தை இடுப்புத் துணியோடு சுற்றி முடிச்சு போட்டுதான் வைத்திருந்தார்கள். தொழில் புரட்சிவந்து தான் இந்த இடுப்புத்துணி முடிச்சை  சட்டைப்பையாக மாற்றியது. 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த சட்டைப்பை என்பது ஆடையில் ஓரு அடையாளத்தைப்  பெற்றது. அதுவும் ஆண்களுக்கு மட்டுமே.

ஏன் என்றால் ஆண் வேலை செய்து பணம் ஈட்டுபவர். பணத்தை வைக்க பாக்கெட் தேவை என்பதால் அவர்கள் உடையில் பாக்கெட் இடம்பெற்றது. அன்று பெண்களின் நிலைமை வீட்டு வேலையும், குழந்தைகளை பராமரிப்பது மட்டுமே என இருந்தது. அதற்குப் பிறகு தான் பெண்கள் தனது பொருட்களையும், தேவைகளையும் வைக்க துணியாலான ஒரு பையை தைத்தார்கள். அதில் அவர்களுக்கு தேவையான எல்லாம் வைத்துக்கொண்டார்கள்(இன்று பெண்கள் பயன்படுத்தும் பர்ஸ் அல்லது ஹான்டு பேக்  போன்று).

பொருளாதார ரீதியாக பெண்கள் ஆண்களைச் சார்ந்து இருப்பதையே, ஆண்களுக்கு மட்டும் ஆடைகளில் பாக்கெட்டுகள் வடிவமைக்கப்படுவது வெளிப்படுத்தியது. ஆண் பெண் ஏற்றத்தாழ்வு  ஆடைகளிலும் வெளிப்பட்டது

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘Suffragettes Suit’ என்ற அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் பெண்களின் ஆடைகளிலும் சட்டைப்பை வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். ஆனால் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு ஆண்களின் கைகளில் இருந்ததால் அவர்கள் அதை எதிர்த்தனர். அதன் பின் 1910-ல் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து பெண்களின் ஆடையிலும் குறைந்தது 6 சட்டைப்பைகள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை  ‘Suffragettes Suit’  இயக்கத்தின் மூலம் எல்லா இடங்களிலும் பேசப்பட்டது.

பிறகு 20-ம் நூற்றாண்டில், இரண்டாம் உலகப்போரின் மூலம் பெண்கள் இராணுவத்தில் ஈடுபட்டு போரை எதிர்கொண்டு பொருளும் ஈட்டினர். பெண்கள் போரை எதிர்கொள்ளவும்,  காயங்களை தடுப்பதற்கும், பணத்தை சேமிக்கவும் அவர்களின் ஆடையில் இடம் பிடித்தது பெரிய சட்டைப்பை. உலகப்போர்  1940ல் முடிவுற்ற பின் பெண்கள் ஆடையின் மேல் அதீத ஈர்ப்பும், உடலமைப்பிலும் கவனம் செலுத்தினர். அதன் பின் பெண்களின் கைப்பை நவநாகரிகம் என்று போர்வையில் மிண்டும் பிரபலமானது. திரும்பவும் சட்டைப்பை சடங்காக மாறியது

தற்போது பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமடைவதற்கான சூழல் ஓரளவிற்கு சாத்தியமாகியிருக்கும் நிலைமையிலேயே,  இன்றைக்கும் பெண்களின் ஆடைகளில் பாக்கெட் என்பது போலியாக வடிவமைக்கப்பட்ட ஓரு அங்கமாகவோ அல்லது பயன்படாத நிலையிலோதான் இடம்பெறுகிறது. பெண்கள் ஆண்களுக்கு நிகராக உடுத்தும் ஜீன்ஸ் கூட பாக்கெட் அளவு சராசரி ஆண்களின் பாக்கெட்டைவிட 48% நீளம் குறைவாகவே வடிவமைக்கப்படுகிறது. பெண்களுக்கு இருக்கும் பொருளாதார சுதந்திரம் பெயரளவிலானதுதான் என்பதை அந்த பாக்கெட்டின் அளவே நமக்குப் பறைசாற்றப்படுகிறது.

இன்றும் பெண்கள் சட்டைப்பை புரட்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் #ithaspockets என்ற “டேக்”-ல் பல ஆயிரம்  பேர் பாக்கெட் உள்ள பெண்களின் உடைகளை பதிவிட்டு பின்தொடர்கிறார்கள். பெண்கள் வாங்கும் ஆடைகளில் பாக்கெட் அவசியம் வேண்டும் என 78℅ பெண்கள் விரும்புகின்றனர்.

பெண்கள் தங்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், ஆடை வடிவமைப்பாளர்கள், “Perfect Pants answer this call. பெரிய, பயன்படுத்த கூடிய பைகள் கொண்ட உடை” என்று விளம்பரப்படுத்தும் காலம் விரைவில் வரும்.

வரலாறு முழுவதும், பெண்களின் உரிமைகளில் முன்னேற்ற காலங்களுடனும், பாலின சமத்துவத்துடனும் பாக்கெட்டுகள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. பாக்கெட்டுகள் சுயேட்சை மற்றும் பொருளாதார அதிகாரத்தை குறிக்கின்றன. அடுத்த முறை உங்கள் அலைபேசியை உங்கள் பேண்ட் பாக்கெட்டில் பொருத்த முயற்சிக்கும்போது, ​​தோல்வியுற்றால், நீங்கள் பல நூற்றாண்டுகள் நீடித்த போரின் ஒரு பகுதியாக இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்...