வியாழன், 15 ஆகஸ்ட், 2024

ஆசிரியர் இனக்காவலர் நினைவில்வாழும் பாவலர் திரு.க.மீ.,அவர்களின் 15.08.2024 ,ஆம்நாள் பிறந்த நாள். அணைக்கும் கரங்கள் இல்லத்தில் இரவு உணவு வழங்கியது இராசிபுரம் ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

 ஆசிரியர் இனக்காவலர்

நினைவில்வாழும் பாவலர் திரு.க.மீ.,அவர்களின் 15.08.2024 ,ஆம்நாள்

பிறந்த நாள்.


அணைக்கும் கரங்கள் இல்லத்தில் 

இரவு உணவு வழங்கியது

இராசிபுரம் ஒன்றிய 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.


பாவலர் புகழ் வாழ்க!


*************************


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் இராசிபுரம் ஒன்றிய அமைப்பின் சார்பில்

இராசிபுரம் 

அணைக்கும் கரங்கள் இல்லத்தில் 

வாழும் சுமார் 100 க்கும் மேற்பட்டோருக்கு

 ரூ 8500/ மதிப்பில்

இரவு உணவு 

இயக்க நிறுவனர்-பாவலர் திரு.க.மீ ,ஐயா அவர்களின் 15.08.2024 ஆம்நாள்

பிறந்தநாளில்

வழங்கப்பட்டது‌.



இராசிபுரம் அணைக்கும் கரங்கள் இல்லத்தில் 

பாவலர் ஐயா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தி பாவலரின் சேவைகள் நினைவுகூறப்பட்டது.



இராசிபுரம் ஒன்றியப்

பொறுப்பாளர்கள்

ஆண்டுதோறும்

பாவலர் ஐயா அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் 

அணைக்கும் கரங்கள் இல்லத்தில் உணவு வழங்குதல் செய்து வருவது 

குறிப்பிடத்தக்கதாகும்.



தேவையானவருக்கு வாய்ப்புள்ள போது

அண்ணம் இடுதலும்,

ஏழை எளிய குழந்தைகளின் கல்விப்பசி போக்கும்  கற்பித்தலும்,

உழைப்பிற்கேற்ற உரிமைக்கு

 குரல் கொடுத்தலும் ,

இனத்தின் கண்ணியமிகு வாழ்விற்கு சலிப்பின்றி போராடுதலும்

நாடும் மொழியும் நமதிருகண்கள்

என்று  பேணுதலும்

பாவலர் ஐயா அவர்களின் வழிவந்த 

இயக்கப்பணிகளாகும்!


இந்நாளில் இத்தகு உறுதிமொழி ஏற்று செயலாற்றுவதே

பாவலர் புகழ் வளர்க்கும் 

நற்செயலாகும்! 



-முருகசெல்வராசன்

















புதன், 31 ஜூலை, 2024

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - நிதி விடுவித்தல் சார்பு.

பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி -2024 2026-ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - நிதி விடுவித்தல் சார்பு.

தற்காலிக பணியிடங்களுக்கு 01.07.2024 முதல் 30.09.02024 வரை மேலும் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை(Pay Authorization) வழங்குதல் -சார்பு.

பள்ளிக்கல்வி 2006-2007 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6,7 மற்றும் 8 வகுப்புகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 7,979 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - இப்பணியிடங்களுக்கு 1.04.2021 முதல் 31.03.2024 வரை 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டது 01.04.2024 முதல் 30.06.2024 வரை மூன்று மாதத்திற்கு பள்ளிக் கல்வி இயக்குநரால் தற்காலிக தொடர் நீட்டிப்பு (Express Pay Order) முடிவடைந்துவிட்டது வெளியிடப்பட்டு தற்போது 01.07.2024 முதல் 30.09.02024 வரை மேலும் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை(Pay Authorization) வழங்குதல் -சார்பு.

ஞாயிறு, 28 ஜூலை, 2024

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இணை இயக்குனர்கள்(JD) மாற்றம்.

 பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் இணை இயக்குனர்கள்(JD) மாற்றம்.

தொடக்கக்கல்வி இணை இயக்குநராக (நிர்வாகம்) திரு.கோபிதாஸ் அவர்கள் நியமனம்.
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻