வியாழன், 4 அக்டோபர், 2018

DSE- DGE - மே மாதத்தில் விடைத்தாள் திருத்திய பணிக்கு - ஈடுசெய் விடுப்பு (Compensation Leave) கிடையாது


பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா - மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கி சுற்றுலாத்துறை ஆணையர் உத்தரவு செயல்முறைகள்




பள்ளிக்கல்வித்துறை முக்கிய நிகழ்வுகள் ( 04.10.2018 ) - செய்தி வெளியீடு



இரவில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள்

நிலவைக் காட்டி குழந்தைகளுக்குச் சோறூட்டிய காலம் மலையேறிப் போய்விட்டது. இன்றைக்கு செல்போனைக் காட்டி, சோறூட்டும் காலமாகிவிட்டது. குழந்தைகளின் நிலைமை இதுவென்றால், செல்போன்களின் துணையோடும் தொலைக்காட்சிகளின் அரவணைப்போடும்தான் பெரும்பாலானோர் இரவு உணவைச் சாப்பிடுகிறார்கள். காலை உணவைத் தவிர்க்காமல் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல இரவு உணவை அளவோடு முறையாகச் சாப்பிடுவதும் மிகவும் முக்கியம். 
இரவில் சாப்பிடக் கூடாத உணவுகள்
`ஒருநாளில் எந்த வேளை உணவைச் சாப்பிடப் பிடிக்கும்’ என்ற கருத்துக்கணிப்பை மேற்கொண்டால், பெரும்பாலானோரின் பதில் `இரவு உணவு’ என்பதாகத்தான் இருக்கும். `இரவு நேரங்களில் ஓரளவு நேரம் கிடைக்கிறது. எனவே, மற்ற வேலைகளைவிட இரவில் அதிகமாகச் சாப்பிட முடியும்…’ என்று பலர் சொல்வதைக் கேட்கலாம். ஆனால், முப்பொழுதுகளில் குறைவாகச் சாப்பிட வேண்டிய பொழுது இரவுதான்!
காலையில் அரசரைப் போலவும், மதிய வேளையில் இளவரசரைப் போலவும், இரவில் யாசகனைப் போலவும் உணவின் அளவை அமைத்துக் கொள்ள அறிவுறுத்திய சமூகம் நம்முடையது. ஆனால், இன்றைய நிலையோ தலைகீழ். நேரமின்மை காரணமாக காலை உணவைக் குறைவாகவும், இரவு நேரத்தில் அதிக உணவுகளையும் எடுத்துக்கொள்ளும் சமூகமாக மாறிவிட்டோம். 

இரவு உணவை எட்டிலிருந்து ஒன்பது மணிக்குள் முடித்துக்கொள்வது நல்லது. சாப்பிட்டுவிட்டு, சிறிது தூரம் மெதுவான நடை மேற்கொண்டபிறகு உறங்கச் செல்வது நலம். இரவு 11 அல்லது 12 மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, தட்டிலேயே கை கழுவிவிட்டு, படுக்கையில் சாய்ந்து உறங்குவது போன்ற மிகப்பெரிய உணவியல் தவறு வேறு எதுவும் இருக்க முடியாது. சாப்பிட்டவுடன் உறங்குபவர்களுக்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் இரைப்பைக் குடலை நோக்கி மேலேறி புண்களை உருவாக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று. தொடர்ந்து இப்படிச் செய்வதால், இரைக்குழல் பகுதியில் ஏற்பட்ட புண், புற்றுநோயாகக்கூட மாற்றம் பெறலாம். 
நன்றாக உறங்கி இளைப்பாற வேண்டிய இரவு நேரத்தில், உணவுகளைச் சாப்பிட்டு செரிமான உறுப்புகளுக்கு பணிச்சுமையை அதிகரிக்கக் கூடாது. இந்தத் தவற்றைச் செய்பவர்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு, பாதிப்பு ஏற்படுவது உறுதி. `நான் என்ன செய்ய, எனது வேலை முடியவே 10 மணி ஆகிவிடுகிறது’ என்பவர்களுக்கான ஒரே வழி… எப்படி மதிய உணவை வீட்டிலிருந்தே பார்சல் செய்கிறோமோ, அதைப் போல இரவு உணவையும் சூழலுக்கேற்றபடி அமைத்துக்கொண்டு, 9 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது.

கொட்டும் மழையில் ஜாக்டோ ஜியோ போராட்டம்

கொட்டும் மழையிலும் ஜாக்டோ ஜியோ போராட்டம் -- நாமக்கல் மாவட்டம்




தமிழகத்தில் 7ம் தேதி கனமழை பெய்யும்

தமிழகத்திற்கு 7 ஆம் தேதி ரெட் அலர்ட்.

மிக கனமழைக்கு வாய்ப்பு.


மாவட்ட நிர்வாகங்கள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை- இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்.
தமிழகத்திற்கு வரும் 7ந் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்
வரும் 7ந் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை
7ந் தேதி தமிழகத்தில் 25 செ.மீக்கு மேல் மழை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் கனமழை கொட்டித் தீர்த்திருந்தது
ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு கொடுக்கப்பட்டது போல் அக்டோர் 7ந் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
மிக தீவிரமாக கனமழையை எதிர்பார்க்கும் போது ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தது
அக்டோபர் 7ந் தேதி அதிகனமழையை எதிர்கொள்ள தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் உள்ளது.

பள்ளிக்கல்வி - PG உபரி ஆசிரியர் பணியிடங்கள் இயக்குனர் தொகுப்பிற்கு ஒப்படைத்து ஆணை வெளியீடு - உபரி பணியிடங்கள் பள்ளி/பாட வாரியாக அனைத்து மாவட்டத்திற்கும் வெளியீடு - இயக்குனர் செயல்முறைகள்

அரசு ஆரம்பப்பள்ளிகளுக்கு அடுத்து ஆண்டு புதிய சீருடை

பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்த கல்வி ஆண்டு முதல்  அரசுப்பள்ளிகளில் படிக்கும்1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பச்சை   நிற  சீருடை  வங்கப்படும். அரசுப்பள்ளிகளில் படிக்கும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பழுப்பு  நிற  சீருடை  வழங்கப்படும்.

மாணவ மாணவிகளுக்கு தலா 4 செட் சீருடைகள் வழங்க்கப்படும். அடுத்த கல்வி ஆண்டு முதல் சீருடை மாற்றம் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்

+1 பாடம் நடத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -- கல்வி அமைச்சர்

பிளஸ் 1 பாடங்களை நடத்தாத பள்ளிகள் மீது,அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

தமிழக பள்ளி கல்வி துறையில், பிளஸ் 1க்கு பொது தேர்வு, 'ரேங்கிங்' முறை ரத்து, புதிய பாடத்திட்டம் போன்ற அறிவிப்புகள், கல்வி தரத்தை உயர்த்த உதவும் என, கல்வியாளர்கள் பாராட்டினர். இந்நிலையில், 'பிளஸ் 1 பொது தேர்வு மதிப்பெண், உயர் கல்விக்கு எடுத்து கொள்ளப்படாது' என, திடீரென பள்ளி கல்வி துறை அறிவித்தது. உயர் கல்விக்கான நுழைவு தேர்வுகளுக்கு, பிளஸ் 1 பாடங்கள் அடிப்படையாக உள்ள நிலையில், 'பிளஸ் 1 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டால், அந்த பாடங்கள், பள்ளிகளில் நடத்தப்படாது' என, கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர். அதைப் போலவே, பல பள்ளிகளில், பிளஸ் 1 பாடங்கள் நடத்துவதை விட்டு, 'நீட்' நுழைவுத் தேர்வு மற்றும் பிளஸ் 2 பாடங்களுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க துவங்கி உள்ளனர். இந்நிலையில், ''பிளஸ் 1 பாடங்களை நடத்தாத பள்ளிகள் மீது, அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


நிருபர்களிடம், அவர் கூறியதாவது: மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக, முதலில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முறை அறிவிக்கப்பட்டது. ஆனால், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மூன்று ஆண்டுகளாக தேர்வு சுமை இருக்க கூடாது என, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டதால், அரசாணை திருத்தம் செய்யப்பட்டது. தற்போதுள்ள நிலையில், பிளஸ் 1க்கான பொது தேர்வு முறை ரத்து செய்யப்படவில்லை. அரசு தேர்வுத்துறை தேர்வை நடத்தி, தேர்ச்சியை அறிவிக்கும். பிளஸ் 1 தேர்ச்சி இல்லாமல், பிளஸ் 2வுக்கு செல்ல முடியாது.

அதேபோல், பிளஸ் 1 பாடங்களை, ஒவ்வொரு பள்ளியும் கட்டாயம் நடத்த வேண்டும். பிளஸ் 1 மாணவர்கள், வெறும் தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெறாமல், குறைந்தபட்சம், 50 சதவீதம் வரை மதிப்பெண் பெற வேண்டும். அந்த அளவுக்கு, மாணவர்களை, பள்ளிகள் தயார்படுத்த வேண்டும் என, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளும், பள்ளி கல்வி அதிகாரிகள்குழுவால் கண்காணிக்கப்படுகிறது. பிளஸ் 1 பாடங்களை நடத்தாத பள்ளிகள் குறித்து, பெற்றோர் புகார் தெரிவிக்கலாம்.அதேபோல், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களை, அதிகாரிகள் ஆய்வு செய்வர்.

பிளஸ் 1 மாணவர்களின், மதிப்பெண் குறையும் வகையில், அந்த பாடங்களை, பள்ளிகள் நடத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தற்செயல் விடுப்பு எடுத்து ஜாக்டோ-ஜியோ இன்று போராட்டம்...