சனி, 6 அக்டோபர், 2018

கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களை கபிலர்மலை ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் (05/10/2018)

⚡⚡⚡⚡⚡⚡⚡

 வணக்கம்!
கபிலர்மலை வட்டாரக் கல்வி  அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய பொறுப்பாளர்கள்  இன்று (05.10.18) பிற்பகல் 05.00 மணிக்கு சந்தித்தனர்.

🔖 கபிலர்மலை ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி) நிலை வீட்டுவாடகைப்படி & நகர ஈட்டுப்படி பலன்களை இந்த மாத ஊதியத்திலே அனுமதித்தும் , நிலுவைத்தொகையை உடனே பெற்று வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.

🔖 ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமானவரிக்கு ETDS செய்து Form -16 உடனே வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது.

🔖 குறைதீர் நாளில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது உடன் தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.

 /மெ.சங்கர் /

வெள்ளி, 5 அக்டோபர், 2018

01.08.2018 -அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் ( Staff Fixation ) செய்வது தொடர்பான அறிவுரைகள் - CEO செயல்முறைகள்...

DSE PROCEEDINGS- பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்...

*திருச்செங்கோடு கல்வி மாவட்டம்_ மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுடன் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு (04:/10/2018)*

04.10.18  (வியாழன்) அன்று மாலை 6:30 மணியளவில் திருச்செங்கோடு கல்வி மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பில் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, கபிலர்மலை, பரமத்தி மற்றும் எலச்சிபாளையம்  ஒன்றியங்களுக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய GRADE I(B) வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்க வட்டார கல்வி அலுவலர்களுக்கு வழிகாட்டல் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
வீட்டு வாடகைப்படி நிலுவைத் தொகையும் உடனடியாக வழங்க கோரப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் இன்று 5 ஒன்றியங்களின் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் வழிகாட்டல் உடனடியாக வழங்குவதாக உறுதியளித்தார்.

8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தும் NMMS தேர்விற்கு மாணவர்கள் விவரங்களை online ல் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதை விளக்கும் வீடியோ...

நாமக்கல் மாவட்டம் மழை பாதிப்பு அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு ~ மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம்

*நாமக்கல் : மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவசர கால உதவி எண் 1077 ஐ தொடர்பு கொள்ளலாம்*.

நாமக்கல் - 9445000543,
இராசிபுரம் - 9445000544,
சேந்தமங்கலம் - 9445461913, கொல்லிமலை - 9442894789, குமாரபாளையம் - 9942057420, மோகனூர் - 9788410768, திருச்செங்கோடு - 9445000545,
பரமத்தி வேலூர் - 9445000546
ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர் கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.ஆசியாமரியம் அறிவிப்பு.

பேரிடர் மேலாண்மை(இடி - மின்னல்) பற்றிய விழிப்புணர்வு ~~ தமிழகம் முழுவதும் RED Alert

மழை காலங்களில் இடி மின்னல் ஏற்படும் போது செய்யக்கூடாத செயல்கள் எவை? செய்ய கூடியவை எவை? என்று பேரிடர் மேலாண்மை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது
 Click here

பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா




அச்சுறுத்தலைத் தூள்தூளாக்கி ஜாக்டோ ஜியோ எழுச்சி போராட்டம்


மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்...