சனி, 6 அக்டோபர், 2018

கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களை கபிலர்மலை ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் (05/10/2018)

⚡⚡⚡⚡⚡⚡⚡

 வணக்கம்!
கபிலர்மலை வட்டாரக் கல்வி  அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய பொறுப்பாளர்கள்  இன்று (05.10.18) பிற்பகல் 05.00 மணிக்கு சந்தித்தனர்.

🔖 கபிலர்மலை ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி) நிலை வீட்டுவாடகைப்படி & நகர ஈட்டுப்படி பலன்களை இந்த மாத ஊதியத்திலே அனுமதித்தும் , நிலுவைத்தொகையை உடனே பெற்று வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.

🔖 ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமானவரிக்கு ETDS செய்து Form -16 உடனே வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது.

🔖 குறைதீர் நாளில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது உடன் தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.

 /மெ.சங்கர் /