வெள்ளி, 5 அக்டோபர், 2018

*திருச்செங்கோடு கல்வி மாவட்டம்_ மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுடன் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு (04:/10/2018)*

04.10.18  (வியாழன்) அன்று மாலை 6:30 மணியளவில் திருச்செங்கோடு கல்வி மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பில் பள்ளிபாளையம், திருச்செங்கோடு, கபிலர்மலை, பரமத்தி மற்றும் எலச்சிபாளையம்  ஒன்றியங்களுக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய GRADE I(B) வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்க வட்டார கல்வி அலுவலர்களுக்கு வழிகாட்டல் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
வீட்டு வாடகைப்படி நிலுவைத் தொகையும் உடனடியாக வழங்க கோரப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் இன்று 5 ஒன்றியங்களின் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் வழிகாட்டல் உடனடியாக வழங்குவதாக உறுதியளித்தார்.