புதன், 23 ஜனவரி, 2019

பள்ளிக்கல்வித்துறை-ஆசிரியர் சங்கங்கள் 22.01.2019 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துதல்~பள்ளிகள் தடையில்லாமல் இயங்க ஏற்பாடுகள் செய்தல்-சார்பு…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர். திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மைய எல்கேசி,யூகேசி., வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு 23.01.19அன்று விசாரிக்கப்படுகிறது.

*23/1/19  வழக்கு விசாரணை.

*தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
பொதுச்செயலாளர்
பாவலர் 
க. மீனாட்சிசுந்தரம் அவர்கள் தொடுத்த வழக்கு 23.01.19அன்று விசாரணைக்கு வருகிறது.

*அங்கன்வாடிக்கு
இடைநிலை
ஆசிரியர்களை
மாறுதல் வழங்குவதற்கு
தடைகோரிய வழக்கு
சென்னை உயர்நீதிமன்றம் 38 வதுகோர்ட்டில் 13 ஆவது  வழக்காக விசாரனைக்கு வருகிறது.

*ஆசிரியர் மன்றத்தின் சார்பில் திரு. ஜி.சங்கரன் அவர்கள் இவ்வழக்கில் வாதங்களை  முன்வைக்கிறார்.



தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் ~ ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டங்களில் முழுமையாக பங்கேற்பு...

ஜாக்டோ-ஜியோ அழைக்கிறது...

@ஆகஸ்ட் 5-ல் சென்னைப் பேரணி.

 @ஆகஸ்ட் 22 இல் ஒருநாள்  அடையாள வேலைநிறுத்தம்.

 @செப்.7 முதல் தொடர் வேலைநிறுத்தம்.

@நீதிமன்றத்தில்  தலைமைச்செயலாளர்.

 @இதன் விளைவாகவே  தமிழக அரசு 8-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்தியது.

@இப்போது நாம் மாதம்மாதம் பெறும் ஊதியம் இந்தப் போராட்டங்களினால்,ஜாக்டோ-ஜியோவால் வந்ததே, கிடைத்ததே. 

@இன்று போர்க்களம் புகுந்திடுங்கள்.
போராளியாக நின்றிடுங்கள். வரலாறு போற்றும். வரும் தலைமுறை வாழ்த்தும். நம் வாழ்க்கைத் தரமுயரும்.

*வாருங்கள், வெல்லலாம்*
அன்போடு அழைக்கிறது...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்.

செவ்வாய், 22 ஜனவரி, 2019

அன்பானவர்களே!வணக்கம்! எருமப்பட்டி ஒன்றியத்தின் தலைமையாசிரியர் பெருமக்களே!ஆற்றல்மிகு ஆசிரியப்பெருமக்களே! தங்களுக்கு என் வேண்டுகோள்:-

ஜாக்டோ-ஜியோ வின் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று வெற்றிப்பெறச்செய்யுங்கள்.

கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து மன்னித்துவிடுங்கள்.
எதிர்கால ஆபத்துக்களை,
அபாயங்களை ,
பாதிப்புகளை ,
சேதாரங்களை கணக்கிலும்,
கவனத்திலும் கொள்ளுங்கள்.
ஆசிரியர் சமுதாயத்தின் கண்ணியத்திற்கும்,தன்மானத்திற்கும் கேடு சூழ்கிறது.
58வயது முடிய ஆசிரியர் பணி என்பது கேள்விக்குறியாகிறது.
மதிப்பான, கெளரவமான ஆசிரியப்பணி ஓய்வு என்பது கனவாகிவிடுமோ!?எனும் அச்சம் எழுகிறது. இதோ,அவைகளில் ஒருசில...

*பள்ளிகள் இணைப்பு தலைமையாசிரியர்  பணியை,பதவியை காலிசெய்கிறது.

*எல்கேசி.,யூகேசிக்கு ,வலுகட்டாயமாக இடைநிலை ஆசிரியரை  நியமிப்பது தகுதி நிலை இறக்கமாகிறது.

*நடுநிலைப்பள்ளிகளில் 2+1 எனும் நிர்ணயம் பணி இழப்பை அதிகமாக்குகிறது.

*3500தொடக்கப்பள்ளிகள் மூடுதல் ஆசிரியர்களை பணி இழக்கச்செய்கிறது.ஏழை,எளிய மக்களுக்கு கல்வி மறுப்பை உருவாக்குகிறது.

*5000பள்ளிகள் இணைப்பு என்பது தொடக்கக்கல்வித்துறையையே அழிக்கிறது.வட்டாரக்கல்வி அலுவலர் பணிமாற்றம் வாய்ப்பைப்பறிக்கிறது.வணிகமயக்கல வியை,தனியார்மயக்கல்வியை வளர்க்கச்செய்கிறது.

*பொதுக்கல்விமுறைக்கும்,இலவசதாய்மொழிவழிக்கல்விக்கும் , அரசுப்பள்ளிக்கும் பெரும் அச்சுறுத்தல் ,ஆபத்து விளைந்துள்ளது.

*இத்தகு பல்வேறு வகை ஆபத்திலிருந்து நம்மை,
நம் ஆசிரியர் இனத்தை,
தமிழ்நாட்டுக்கல்வியை ,
அரசுப்பள்ளிகளை பாதுக்காத்துக்கொள்ள நம்முன் உள்ள ஒரேவழி ,
ஒரே மருந்து ஜாக்டோ-ஜியோ வின்
2019 சனவரி 22 ஆம்நாள் முதலான காலவரையற்ற வேலைநிறுத்தமே !

எனவே,எத்தகு தயக்கமும்,
அவநம்பிக்கையும்  கொள்ளாமல் வேலைநிறுத்தத்தில்  பங்கேற்று வாழ்வை வெற்றிகரமாக்கிக்கொள்ளுங்கள்!
போராட்டக்களத்தில் ஆசிரியப்போராளியாக, எல்லோருக்கும் நன்மை செய்பவராக செயல்படும் முடிவெடுங்கள்! செயலாற்றுங்கள்!
நன்றி.  
-முருகசெல்வராசன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்டம் ~ 21.01.19அன்று திருச்செங்கோட்டில் கூடிய ஒன்றியச்செயலாளர்கள் கூட்டம் ~ ஜாக்டோ-ஜியோவின் 22.01.19 முதலான காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்க முடிவு…

போராட்டத்தில் கலந்துகொள்ளும் நமக்குரிய பணிப்பாதுகாப்புகள்...

ஜாக்டோ-ஜியோ~ மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பியுள்ள 9 அம்ச கோரிக்கை கடிதம்…

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் 172வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு 25.01.2019 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 7அம்சக் கோரிக்கைகள்~ திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலரிடம் பெருந்திரள் முறையீடு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் சார்பில் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் 7 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3 கட்ட தொடர்போராட்டங்களை நடத்த உள்ளது.

அதில் முதல்கட்டமாக  21.1.2019 பிற்பகல் 5 மணிக்கு  திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக அலுவலர் அவர்களை சந்தித்து பெருந்திரள் முறையீடு.இச்சந்திப்பில் மாநில மாவட்ட மற்றும் அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.