திங்கள், 23 செப்டம்பர், 2019

தமிழக அரசே!ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கை களை விரைந்து நிறைவேற்றுக!ஜாக்டோ-ஜியோ வின் தலைவர்களை அழைத்துப் பேசிடுக! ~ தமிழகமெங்கும் எதிர்வரும் 24.09.19 (செவ்வாய்)அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ வின் பட்டினிப்போராட்டம்…

அன்பானவர்களே!🙏 வணக்கம்.
தமிழக அரசே!ஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கை களை விரைந்து நிறைவேற்றுக!ஜாக்டோ-ஜியோ வின் தலைவர்களை அழைத்துப் பேசிடுக!

 தமிழகமெங்கும் எதிர்வரும் 24.09.19 (செவ்வாய்)அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ வின் பட்டினிப்போராட்டம். 

தமிழகத்தின் ஆசிரியர்கள், அரசூழியர்கள், பணியாளர்கள் தங்களது வாழ்வாதரமான கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணல் காந்தியடிகளின் வழியில் , 
அகிம்சை நெறியில்  தங்களை வருத்திக்கொள்கிறார்கள். 
தங்களது வாழ்வாதாரத்திற்காக தங்களை தாங்களே வருத்திக்கொள்ளும் பட்டினிப்போராட்டத்தின் கோரிக்கைகளை தமிழகரசு விரைந்து நிறைவேற்றிடும் வகையில் பட்டினிப்போர் பெருந்திரள் பங்கேற்பும்,
பங்களிப்பும் நிறைந்ததாக, சக்தி்மிக்கதாய் இருக்க வேண்டுமல்லவா?!இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?!என்கிறீர்களா?!
தாங்கள், வேறொன்றும் செய்திட வேண்டியதில்லை.

 தங்களுக்கு இருக்கும் எல்லாவிதமான ,
முக்கியமான வேலைகளையும்,
பணிகளையும், அலுவல்களையும் 
சற்று தள்ளிவைத்து விட்டு, ஒதுக்கி வைத்துவிட்டு,
ஒத்திவைத்துவிட்டு  தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கல்வியின் நலன்களையும்,
ஆசிரியர் ,அரசூழியர்,
பணியாளர்கள்  
இழந்த உரிமைகளை மீட்பதற்கும், இருக்கும் உரிமைகளை பாதுகாத்திடுவதற்கும்,
பறிபோகும்  உரிமைகளை தடுத்து நிறுத்தி காத்திடுவதற்கும் 
எதிர்வரும் 22.09.19 (செவ்வாய்) அன்று  நாமக்கல் பூங்காச்சாலையில் நடைபெறும் பட்டினிப்போராட்டத்தில்  ஒருநாள் பங்கேற்றிடுங்கள்.  தற்போதைக்கு 
இப் பங்கேற்பும், பங்களிப்புமே போதுமானதாகும்.
   
தற்போது நம்முன்னுள்ள முதற் பெரும் பணியும்,
கடமையும் இதுவே என்று மனதில் நிறுத்தி நாமக்கல்  பட்டினிப்போராட்டத்தில்  பங்கேற்று பங்களிப்புச் செய்து சக்திமிக்கத்தாக்குங்கள் !
 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர், 
ஜாக்டோ-ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர்,
முன்னாள் சட்டமேலவை உறுப்பினர்,
ஆசிரியரினக்காவலர்,
பாவலர்.திரு.க.மீ்.,அவர்களின் அறைகூவலை ஏற்று நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட, ஒன்றியப்பொறுப்பாளர்கள், மன்ற முன்னோடிகள் , ஆற்றல்மிகு மன்ற மறவர்கள், மறத்தியர்கள் பெருந்திரளாக பங்கேற்று 
நாமக்கல் பட்டினிப் போராட்டத்தை வலுப்படுத்துங்கள்!வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லுங்கள்! என்றே அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-முருகசெல்வராசன்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் புதிய மொபைல் ஆப் வசதியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் ~ தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வேண்டுகோள்....

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் ~ தோட்டக்கலை துறை அழைப்பு…

தமிழ், ஆங்கிலம் மொழித்தாள்கள் குறைப்பு ~ 10ம் வகுப்பு தேர்வு அட்டவணையில் மாற்றம்…

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

இளையோர்- மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் - புதிய படிவங்களில் கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்த அரசு கடிதம் - நாள் : 03.09.2019.








பள்ளிக்கல்வி_Neet and Jee போட்டி தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் மாணவ மாணவியர் தயார் படுத்துதல் சார்ந்த இயக்குநர் செயல்முறை



அரசு உதவி பெறும் பள்ளிகள் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்வது தொடர்பான நெறிமுறைகள்- தக்க நடவடிக்கை குறித்து இயக்குநரின் செயல்முறைகள்


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை) ~ பயிலரங்கம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,
நாமக்கல் மாவட்டம் (கிளை)


*****************
பயிலரங்கம்
*****************
வணக்கம்!

இடம்:
நகராட்சி
நடுநிலைப்பள்ளி,
மலையடிவாரம்,
திருச்செங்கோடு.

நாள்:
22.09.19 (ஞாயிறு)

நேரம்: 
முற்பகல் 10.00 மணி 

வகுப்பு-1,

பொருள்: 
அன்றாடப் பள்ளிக்கல்விப் பணிகளில் இணையவழி-கணிணிவழி-கைப்பேசிவழிச் செயல்பாடுகள்.

 கருத்தாளர்கள்:
-------------------------------
திரு.வெ.வடிவேல்,மாவட்டத் துணைச்செயலாளர்-
பள்ளிப்பாளையம்,

திரு.க.சேகர், ஒன்றியச்செயலாளர்-பரமத்தி, 

திரு.கா.செல்வம், ஒன்றியத்தலைவர்-சேந்தமங்கலம்,

திரு.இர.மணிகண்டன்,
ஒன்றியத் துணைச்செயலாளர், கபிலர்மலை.

வகுப்பு-2,

 பொருள்:
புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கை 2019 - ஒரு பார்வை.

கருத்தாளர்:
-----------------------
முருகசெல்வராசன்,
மாவட்டச்செயலாளர்.

ஆற்றல்மிகு மன்றப் பெரும் படையே!பங்கேற்றிடுக!
நன்றி!

அன்புடன் அழைக்கிறேன்.
-முருகசெல்வராசன்.