செவ்வாய், 8 அக்டோபர், 2019

Nhis 2016 App பயன்படுத்தும் முறைகள்.

 *NHIS 2016*


*Natinal Health Insurance 2016* என்ற *TNNHIS2016 App* எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கும் Video.

கீழே App link கொடுக்கப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.mdindia.tamilnaduemployee

 *விளக்கும் Video*


https://youtu.be/FqdRWiBkOR

*அக்டோபர்-8 -வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*

*🌷அக்டோபர் 8, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.✈விமானப்படை தினம்.*

*2.மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுதினம்*

*3.ஜெயபிரகாஷ் நாராயண் நினைவு தினம் இன்று.*

*4.இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான ஜி.என். ராமச்சந்திரன் பிறந்த தினம்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
----------------------------------------------

*✈ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்படுகிறது.*

*இந்திய விமானப்  படையானது 1932இல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று, இந்தியா ஆங்கிலேய ஆட்சியில் இருந்த சமயத்தில்  உருவாக்கப்பட்டது.*
-----------------------------------------------

 *🎼மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம் இன்று.*


*பாமர மக்களின் மொழியில் பொதுவுடைமை கருத்துகளை சொன்ன ஒரே கவிஞர்.*

*மக்களின் கவிஞன் என்ற பட்டத்திற்கு முற்றிலும் தகுதியானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.*

 *29 வருடங்களே இப்பூமியில் வாழ்ந்தவர்.* *ஆனால் இந்த பூமி உள்ள மட்டும் அழியா பாடல்கள் தந்தவர்.!*
*விவசாயி, மாடு மேய்ப்பவன், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரம், முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடி தொழில், உப்பளத் தொழில், மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டி ஓட்டுநர், அரசியல் பிரச்சாரகர், பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் இப்படி 17 தொழில்கள் புரிந்தவர்.! அந்த பாட்டாளிகளுக்கான மக்கள் கவிஞரை இன்று நினைவு கூர்வோம்.*

----------------------------------------------

*🌷ஜெயபிரகாஷ் நாராயண் நினைவு தினம் இன்று.*


*ஜெயபிரகாஷ் நாராயண் (அக்டோபர்*
*11 , 1902 - அக்டோபர் 8, 1979), பரவலாக JP என*
*அறியப்பட்டவர், இந்திய விடுதலை*
*இயக்கத்தில் பங்காற்றிய விடுதலை வீரர்*
*மற்றும் 1970களில் இந்திரா காந்தியை*
*எதிர்த்து போராடிய அரசியல் தலைவர்.*


*தமது அமைதியான முழு* *புரட்சி(Total*
*Revolution) என்ற* *முழக்கத்திற்காக பரவலாக*
*அறியப்பட்ட சோசலிசவாதி. 1977ஆம் ஆண்டு*
*உருவான ஜனதா கட்சி* *அரசுக்கு*
*வித்திட்டவர்.1998ஆம்* *ஆண்டு, அவரது*
*மறைவிற்கு பிறகு, அவராற்றிய சமூகப்*
*பணிக்காக பாரத ரத்னா* *விருது*
*வழங்கப்பட்டது.1965ஆம்* *ஆண்டு அவரது*
*பொதுச்சேவைக்காக* *மக்சேசே பரிசு*
*வழங்கப்பட்டது.*
----------------------------------------------

*🌷இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான ஜி.என். ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று.*

*கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் (1922). இவரது முழுப் பெயர், கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன். 1939இல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் முதலில் மின் பொறியியல் துறையில் சேர்ந்தார்.*

*ஆனால், விரைவில் தனது இயற்பியல் நாட்டத்தை உணர்ந்து கொண்டு இயற்பியல் துறையில் சேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து 1942இல் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய அறிவியல் கழகத்தில் சர்.சி.வி. ராமனின் கீழ் ஆய்வு மேற்கொண்டு 1947இல் டி.எஸ்சி. பட்டம் பெற்றார். பிறகு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றார்.*

*இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இவருக்கு ஆராய்ச்சியாளராக பணிபுரியும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்தியாவிலேயே பணிபுரிய விரும்பினார். 1952இல் இந்திய அறிவியல் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1952இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.*

*இந்தத் துறையின் கீழ் கிரிஸ்டலோகிராஃபி மற்றும் பயோபிசிக்ஸ் என்ற புதிய துறையை நவீன ஆய்வு வசதிகளுடன் சர்வதேசத் தரத்துடன் உருவாக்கினார். இது நாட்டின் தலைசிறந்த ஆய்வுநிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தசைநார் புரதத்தில் சவ்வு என்ற முக்கோண அமைப்பைப் பற்றி ஆய்வறிக்கை வெளியிட்டார். எக்ஸ்-கதிர் படிகவியல், கூடுதல் ஆப்டிகல் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.*

*இந்த ஆய்வுகள் எக்ஸ்-ரே துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது பெப்டைட் தொகுப்புகள் குறித்த ஆராய்ச்சிகள், புரதக் கூறுகளின் வடிவமைப்பைப் புரிந்துகொள்ள பயன்பட்டது. இது ‘ராமச்சந்திரன் பிளாட்’ என்று குறிப்பிடப்பட்டது.*

*மூலக்கூறு உயிரி இயற்பியலில் புரதங்களின் கட்டமைப்புப் பற்றிய தசைநார்ப் புரதத்தின் மும்மடங்கு எழுச்சுருள் வடிவம் (triple-helical model for structure of collagen) என்ற இவரது கண்டுபிடிப்பு புரதக்கூறுகளின் வடிவமைப்பின் அடிப்படைகளை அறிந்துகொள்ள உதவியத



திங்கள், 7 அக்டோபர், 2019

அரசுப்பணியில் இருக்கும் ஆசிரியர்களின் குழந்தைகள் விவரங்களை மட்டும் Emis ல் பதிவேற்றம் செய்வது ஏன்? - ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் கேள்வி

அரசுப்பணியில் இருக்கும் ஆசிரியர்களின் குழந்தைகள் விவரங்களை மட்டும் Emis ல் பதிவேற்றம் செய்வது ஏன்?

ஆசிரியர்களின் குழந்தைகள் மட்டுமல்ல, 
அமைச்சர்களின்,
உயரதிகாரிகளின் குழந்தைகள்  முதல் அடிப்படை ஊழியரின் குழந்தைகள் வரை தங்கள் குழந்தைகளை அரசு பள்ளி  சேர்க்கவேண்டும்... அந்தநிலையில் தான் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகள் தனியார் பள்ளிகளை விஞ்சும்!
 டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் பேட்டி...

NISHTHA 5 நாள் பயிற்சி நடைபெறும் இடமும், தேதியும் நாமக்கல் மாவட்ட கல்வித்துறையால் வெளியீடப்பட்டுள்ளது



நாமக்கல்லில் 10ம் தேதி போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி துவக்கம்...

*அக்டோபர் 7- வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*

*🌷அக்டோபர் 7, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
----------------------------------------------
*1.கவியரசு முடியரசன் பிறந்த தினம்.*

*2.கவிஞர்.ஞானக்கூத்தன் பிறந்ததினம்*

*3.ரால்ப் வெச்வுட் கார்பன் பேப்பருக்கு காப்புரிமை பெற்றதினம்.*

*4.சோவியத்யூனியன் அனுப்பிய லூனா 3 நிலவின் புகைப்படங்களை எடுத்து அனுப்பிய தினம்.*
--------------------------------------------
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------

*🌷கவியரசு முடியரசன் பிறந்த தினம் இன்று.*

*கவியரசு முடியரசன் (அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர்.*

 *தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு-சீதாலக்ஷ்மி என்பார்க்கு அக்டோபர் 7, 1920இல் பிறந்தவர்.*

 *துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுப்பவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.*

 *காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.*

----------------------------------------------

*🌷ஞானக்கூத்தன் பிறந்த தினம் இன்று.*

*ஞானக்கூத்தன் (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். இவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் ஆகும். “திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைபெயராக ஞானக்கூத்தன் என்ற பெயரை ஏற்றார்.*

*இராமகிருஷ்ணன்,*
*சா. கந்தசாமி,*
*ந. கிருஷ்ணமூர்த்தி* *ஆகியோரோடு இணைந்து* *ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் 'கசடதபற'.*
*'கவனம்' என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.*
*'ழ' இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார்.*

*அவர் இயற்றிய*
*கவிதை நூல்கள்*

*அன்று வேறு கிழமை*
*சூரியனுக்குப் பின்பக்கம்*
*கடற்கரையில் சில மரங்கள்*
*மீண்டும் அவர்கள்*
*பென்சில் படங்கள்*
*ஞானக்கூத்தன் கவிதைகள்*
*என் உளம் நிற்றி நீ*
*இம்பர் உலகம்*
*கட்டுரை நூல்கள்*

*கவிதைக்காக*
*கவிதைகளுடன் ஒரு சம்வாதம்*
*பிற படைப்புகள்*
*கனவு பல காட்டல்*
*நம்மை அது தப்பாதோ?*
*சொன்னதை கேட்ட* *ஜன்னல் கதவு*
*அலைகள் இழுத்த பூமாலை*
*விருதுகள்*

*கவிஞர் ஞானக்கூத்தன் 2016 ஜூலை 27இல் தனது 77வது அகவையில் சென்னையில் காலமானார்*

----------------------------------------------


*🌷ரால்ஃப் வெச்வூட்*
*பிரதி எடுக்க உதவும் கார்பன் பேப்பருக்கு காப்புரிமை பெற்ற தினம் இன்று (1806).*

 *இங்கிலாந்தைச் சேர்ந்த ரால்ஃப் வெச்வூட், ஒரு நாள் மெல்லிய காகிதத்தைத் தட்டச்சு மையில் முழுவதுமாக நனைத்தார். அதை மை ஒட்டும் காகிதங்களுக்கு இடையில் வைத்து உலர்த்தினார். ஒரு வெள்ளைக் காகிதம், அதன் மேல் கார்பன் தாள், அதற்கு மேல் டிஷ்யூ காகிதத்தைப் பரத்தி தன்னுடைய இரும்புப் பேனா கொண்டு அழுத்தி எழுதிப் பார்த்தார். அவர் மேலே எழுதியவை காகித அடுக்கின் அடியில் இருந்த வெள்ளைக் காகிதத்தில் அப்படியே பதிந்தன. அவ்வளவுதான் கார்பன் பேப்பர் அற்புதமாகத் தயாரானது!*

*1806 அக்டோபர் 7இல் ரால்ஃப் வெச்வூட் ‘கார்பன் பேப்ப’ருக்குக் காப்புரிமை பெற்றார். பார்வை அற்றவர்களுக்கு உதவவே கார்பன் தாளை அவர் உருவாக்கினார்.*
--------------------------------------------


*🌷சோவியத் யூனியன் அனுப்பிய லூனா 3 நிலவின் புகைப்படங்களை எடுத்து அனுப்பிய தினம் இன்று (1959).*


*லூனா 3 (Luna 3 அல்லது E-2A தொடர்) நிலாவை நோக்கி ஏவப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டத்தின் மூன்றாவது விண்கலமாகும். இதற்கு முன்னர் பார்த்திடாத நிலவின் பகுதிகளைப் புகைப்படமெடுத்தது இவ்விண்கலம். இவ்விண்கலத்தின் வடிவம் நீள்வட்ட வடிவமாகும். 130 செ.மீ நீளமும் 120 செ.மீ விட்டமும் உடையது. இவ்விண்கலம் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தியதி ஏவப்பட்டது. இதன் எடை 278.5 கிலோகிராம் ஆகும். அக்டோபர் 6, 1959 அன்று நிலவுக்கு மிக அண்மையில் 6.200 கிலோமீட்டர் தொலைவில் சென்று புகைப்படம் எடுத்தது. நிலவின் மறுபுறத்தில் வடக்குத் தெற்காகப் புகைப்படமெடுத்து பூமிக்குத் திரும்பும் போது இதன் வட்டப்பாதை நிலவின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்பட்டது.*

 *அக்டோபர் 7, 1959 அன்று 40 நிமிடங்களில் 29 புகைப்படங்களை இவ்விண்கலம் எடுத்தது.*

*அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை தின நல்வாழ்த்துக்ககள்.*



ஞாயிறு, 6 அக்டோபர், 2019

*🌷இனி சத்துணவு பணியாளர்கள் சத்துணவு உண்பவர் பற்றிய விபரம் SMS ஆக அனுப்ப வேண்டும்.*

*🌷இனி சத்துணவு பணியாளர்களே தினந்தோறும்  SMS அனுப்ப வேண்டும் புதிய உத்தரவு வந்துள்ளதாக பத்திரிக்கை செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.இனி தலைமை ஆசிரியர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதிலிந்து விலக்கு.சத்துணவுப் பணியாளர் எந்த தேதியிலிந்து வட்டாரவளர்ச்சி அலுவலர்க்கு குறுஞ்செய்தி அனுப்புகிறாரோ அப்பொழுதிலிருந்து தலைமை ஆசிரியர் குறுஞ்செய்தி
அனுப்பத் தேவையில்லை.*👆

அரசு பள்ளிகளில் தொண்டு நிறுவனங்கள் அனுமதிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் -ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் அய்யா கண்டனம்


உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு ~இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி?

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் இணையதளம் மூலம் பெயர் சேர்க்கலாம் ~ மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு...