புதன், 9 அக்டோபர், 2019

மருத்துவக் காப்பீடு திட்டம் NHIS அட்டை பெறும் வழிமுறைகள்





          தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மருத்துவக் காப்பீடு திட்டம் NHIS அட்டை பெறும் வழிமுறைகள்


Natinal Health Insurance 2016 என்ற TNNHIS2016 App

கீழே App link கொடுக்கப்பட்டுள்ளது

 Click here....

https://play.google.com/store/apps/details?id=com.mdindia.tamilnaduemployee

*அக்டோபர்-9,வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*

**🌷அக்டோபர் 9, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.விடுதலைப் போராளி சே குவேரா நினைவு தினம்.*

*2.உலக அஞ்சல் தினம்.*

*3.தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவச்சலம் பிறந்த தினம்.*

---------------------*🌏அக்டோபர் 9, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
--------------------------------------------------

 *🔥விடுதலைப் போராளி சே குவேரா நினைவு தினம் இன்று.*

*இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான்* *பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது.*
*ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து,* *எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர்* *சே குவேரா.*
*அவர் இயற்பெயர்* *எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928), அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு, ஸ்பானிய‌ மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல்* *என்கின்றார்கள், அதாவது நமது தமிழில் வியப்பின் உச்சத்தில் ஒரு ஆச்சரியமாக‌ சொல்வோம் அல்லவா? அந்த ஆச்சரியமான‌ உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.*
*அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லப் பிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து* *பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பின்னணியில் வளர்ந்தார். ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என சகலரையும் படித்தார்.*
*முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதபடும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்,*
*பின் மருத்துவ கல்லூரியில் படித்தார் ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென்* *அமெரிக்காவைச் சுற்றினார். மனம் நொந்தார்.*
*காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிகிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம். ஆனால் மக்கள் ஏழைகள், இதுதான் அவரைச் சிந்திக்க வைத்தன.*
*அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைப்பொம்மையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது. பிடல் காஸ்ட்ரோ கைதுசெய்யபட்டு நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.*

*பொதுவாக தென்* *அமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்து பத்துக்களோடு* *வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த* *அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார்.*
*கனிம வளத்திற்காக, அமெரிக்க, ஐரோப்பிய* *நாடுகள் இப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அப்படி கியூபாவின் பெரும்* *செல்வம் கரும்பும்  சீனியும்.*
*நான் இரும்பு மனிதன்,* *எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக் கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ, அது தோல்வியில் முடிந்துகொண்டிருந்தது.*
*அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே. அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார். மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பிண்ணணியில் மக்களை* *இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திக்* *காட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார்.*
*ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது. உலகெல்லாம் மிரட்டிய* *அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை. ஆனாலும்* *மக்கள் சக்திமுன் என்ன செய்ய?*
*ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ,* *சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர் 1 இடம். நினைத்திருந்தால் சாகும்வரை கியூபாவில் ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.*
*பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி. தனக்கு அதில் விருப்பமில்லை.* *உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன்பணி என* *சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார்.*
*ஆம் எல்லை கடந்து கியூபா விடுதலைக்கு போராடியவர், இப்பொழுது* *ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.*
*ஆனால் ஆப்ரிக்கர்களை இணைப்பது அவருக்கு* *தமிழ்நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைப்பது போலவே வெகு சிரமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம்* *பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென் அமெரிக்கா திரும்பினார்.*
*இந்த காலகட்டத்திற்குள் சேவினை காணாத* *அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாகக் கதை கட்டிவிட்டது. காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை,*
*ஆனால் இப்படிச் சொன்னார், "எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைபட்ட இனத்திற்காக உழைத்துகொண்டிருப்பான்".*

*மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார். தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று. வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி.*

-----------------------------------------------------------------------------------


BIO METRIC - வருகைப் பதிவு செய்யும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது விடுப்பு விபரங்களை எவ்வாறு பதிவு செய்வது?....


👉முதலில் கீழ்க்கண்ட link ஐ பயன்படுத்தி *My attendance (AEBAS)* என்ற செயலியை 

 உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
👉பின்பு செயலியை open செய்து *STATE என்ற இடத்தில் Tamilnadu என்பதை உள்ளீடு செய்து Next என்பதை கிளிக் செய்ய வேண்டும் Department என்ற இடத்தில் Department of school education என்பதை உள்ளிடு செய்து  அதற்கு கீழ் My job /Designation என்னும் களத்தில் Employee  என்பதை டிக் செய்து proceed* என்பதை அழுத்தி உள் நுழைய வேண்டும்.
👉பின்பு *Login to BAS என்ற பக்கம் open ஆகும் . அதில் ஏதும் உள்ளீடு செய்யாமல் இடது மூளையில் 3 கோடுகள் symbol இருக்கும். அதை கிளிக் செய்தால் Menu ஒன்று open ஆகும் .அதில் கீழ் கடைசியில் login என்று இருப்பதை click* செய்ய வேண்டும்.

👉பின்பு *login biometric attendance system* என்ற பக்கம் open ஆகும் அதில் *username ,password,
confirmation code* என்ற மூன்று களங்கள் இருக்கும் அதில் *எதையும் உள்ளீடு செய்யாமல் அதற்கு கீழ் உள்ள forget password* என்பதை click செய்ய வேண்டும்.
👉பின்பு *Forget password என்ற தலைப்பில்* பக்கம் ஒன்று open ஆகும் .அதில் *user name என்ற களத்தில் உங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 8 இலக்க ID ஐ(ஆதாரின் கடைசி 8 இலக்கம்)* உள்ளீடு செய்து அதற்கு கீழ் உள்ள *select Mode* என்பதன் கீழ் உள்ள by SMS என்பதை select செய்து அதற்கு கீழ் உள்ள confirmation code ஐ சரியாக உள்ளீடு செய்து submit கொடுக்க வேண்டும்.
👉பின்பு Create new password என்ற பக்கம் open ஆகும் .அதில் புதிய password ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது உங்கள் *registered மொபைல் எண்ணிற்கு 6 இலக்க OTP* ஒன்று *குறுஞ்செய்தியாக* வந்திருக்கும் .அதை சரியாக உள்ளீடு செய்தவுடன் உங்களுக்கு *password updated successfully* என்று திரையில் தோன்றும்.
👉மீண்டும்* Menu வை click செய்து login என்பதை open செய்து *user name என்ற களத்தில் உங்களது 8 இலக்க biometric ID* ,ஐ உள்ளீடு செய்து *password என்ற களத்தில் நீங்கள் உருவாக்கிய password* ஐ உள்ளீடு செய்து, Confirm code  (captch code) ஐ சரியாக உள்ளீடு செய்து *sing in me* என்பதை கொடுத்தால் போதும் *உங்களுக்கான பக்கம் open ஆகிவிடும்.*.

👉இதில் *Leave என்ற option* ஐ கிளிக் செய்து தங்கள்து *விடுப்பு விபரங்களை* நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் உங்கள் *சுய விபரங்களில் தவறுகள் இருப்பின் மாற்றம் செய்து கொள்ளலாம்.*
குறிப்பு: *password உருவாக்கும் போதும் Atleast one uppercase one lower case one numeric one special symbol என்ற கலவையில் உருவாக்க வேண்டும் ..*

செவ்வாய், 8 அக்டோபர், 2019

Nhis 2016 App பயன்படுத்தும் முறைகள்.

 *NHIS 2016*


*Natinal Health Insurance 2016* என்ற *TNNHIS2016 App* எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கும் Video.

கீழே App link கொடுக்கப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.mdindia.tamilnaduemployee

 *விளக்கும் Video*


https://youtu.be/FqdRWiBkOR

*அக்டோபர்-8 -வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*

*🌷அக்டோபர் 8, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.✈விமானப்படை தினம்.*

*2.மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவுதினம்*

*3.ஜெயபிரகாஷ் நாராயண் நினைவு தினம் இன்று.*

*4.இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான ஜி.என். ராமச்சந்திரன் பிறந்த தினம்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
----------------------------------------------

*✈ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்படுகிறது.*

*இந்திய விமானப்  படையானது 1932இல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று, இந்தியா ஆங்கிலேய ஆட்சியில் இருந்த சமயத்தில்  உருவாக்கப்பட்டது.*
-----------------------------------------------

 *🎼மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம் இன்று.*


*பாமர மக்களின் மொழியில் பொதுவுடைமை கருத்துகளை சொன்ன ஒரே கவிஞர்.*

*மக்களின் கவிஞன் என்ற பட்டத்திற்கு முற்றிலும் தகுதியானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.*

 *29 வருடங்களே இப்பூமியில் வாழ்ந்தவர்.* *ஆனால் இந்த பூமி உள்ள மட்டும் அழியா பாடல்கள் தந்தவர்.!*
*விவசாயி, மாடு மேய்ப்பவன், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரம், முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடி தொழில், உப்பளத் தொழில், மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டி ஓட்டுநர், அரசியல் பிரச்சாரகர், பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் இப்படி 17 தொழில்கள் புரிந்தவர்.! அந்த பாட்டாளிகளுக்கான மக்கள் கவிஞரை இன்று நினைவு கூர்வோம்.*

----------------------------------------------

*🌷ஜெயபிரகாஷ் நாராயண் நினைவு தினம் இன்று.*


*ஜெயபிரகாஷ் நாராயண் (அக்டோபர்*
*11 , 1902 - அக்டோபர் 8, 1979), பரவலாக JP என*
*அறியப்பட்டவர், இந்திய விடுதலை*
*இயக்கத்தில் பங்காற்றிய விடுதலை வீரர்*
*மற்றும் 1970களில் இந்திரா காந்தியை*
*எதிர்த்து போராடிய அரசியல் தலைவர்.*


*தமது அமைதியான முழு* *புரட்சி(Total*
*Revolution) என்ற* *முழக்கத்திற்காக பரவலாக*
*அறியப்பட்ட சோசலிசவாதி. 1977ஆம் ஆண்டு*
*உருவான ஜனதா கட்சி* *அரசுக்கு*
*வித்திட்டவர்.1998ஆம்* *ஆண்டு, அவரது*
*மறைவிற்கு பிறகு, அவராற்றிய சமூகப்*
*பணிக்காக பாரத ரத்னா* *விருது*
*வழங்கப்பட்டது.1965ஆம்* *ஆண்டு அவரது*
*பொதுச்சேவைக்காக* *மக்சேசே பரிசு*
*வழங்கப்பட்டது.*
----------------------------------------------

*🌷இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான ஜி.என். ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று.*

*கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தவர் (1922). இவரது முழுப் பெயர், கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன். 1939இல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் முதலில் மின் பொறியியல் துறையில் சேர்ந்தார்.*

*ஆனால், விரைவில் தனது இயற்பியல் நாட்டத்தை உணர்ந்து கொண்டு இயற்பியல் துறையில் சேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து 1942இல் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்திய அறிவியல் கழகத்தில் சர்.சி.வி. ராமனின் கீழ் ஆய்வு மேற்கொண்டு 1947இல் டி.எஸ்சி. பட்டம் பெற்றார். பிறகு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றார்.*

*இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இவருக்கு ஆராய்ச்சியாளராக பணிபுரியும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்தியாவிலேயே பணிபுரிய விரும்பினார். 1952இல் இந்திய அறிவியல் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1952இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.*

*இந்தத் துறையின் கீழ் கிரிஸ்டலோகிராஃபி மற்றும் பயோபிசிக்ஸ் என்ற புதிய துறையை நவீன ஆய்வு வசதிகளுடன் சர்வதேசத் தரத்துடன் உருவாக்கினார். இது நாட்டின் தலைசிறந்த ஆய்வுநிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தசைநார் புரதத்தில் சவ்வு என்ற முக்கோண அமைப்பைப் பற்றி ஆய்வறிக்கை வெளியிட்டார். எக்ஸ்-கதிர் படிகவியல், கூடுதல் ஆப்டிகல் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.*

*இந்த ஆய்வுகள் எக்ஸ்-ரே துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது பெப்டைட் தொகுப்புகள் குறித்த ஆராய்ச்சிகள், புரதக் கூறுகளின் வடிவமைப்பைப் புரிந்துகொள்ள பயன்பட்டது. இது ‘ராமச்சந்திரன் பிளாட்’ என்று குறிப்பிடப்பட்டது.*

*மூலக்கூறு உயிரி இயற்பியலில் புரதங்களின் கட்டமைப்புப் பற்றிய தசைநார்ப் புரதத்தின் மும்மடங்கு எழுச்சுருள் வடிவம் (triple-helical model for structure of collagen) என்ற இவரது கண்டுபிடிப்பு புரதக்கூறுகளின் வடிவமைப்பின் அடிப்படைகளை அறிந்துகொள்ள உதவியத



திங்கள், 7 அக்டோபர், 2019

அரசுப்பணியில் இருக்கும் ஆசிரியர்களின் குழந்தைகள் விவரங்களை மட்டும் Emis ல் பதிவேற்றம் செய்வது ஏன்? - ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் கேள்வி

அரசுப்பணியில் இருக்கும் ஆசிரியர்களின் குழந்தைகள் விவரங்களை மட்டும் Emis ல் பதிவேற்றம் செய்வது ஏன்?

ஆசிரியர்களின் குழந்தைகள் மட்டுமல்ல, 
அமைச்சர்களின்,
உயரதிகாரிகளின் குழந்தைகள்  முதல் அடிப்படை ஊழியரின் குழந்தைகள் வரை தங்கள் குழந்தைகளை அரசு பள்ளி  சேர்க்கவேண்டும்... அந்தநிலையில் தான் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகள் தனியார் பள்ளிகளை விஞ்சும்!
 டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டிற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் பேட்டி...

NISHTHA 5 நாள் பயிற்சி நடைபெறும் இடமும், தேதியும் நாமக்கல் மாவட்ட கல்வித்துறையால் வெளியீடப்பட்டுள்ளது



நாமக்கல்லில் 10ம் தேதி போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி துவக்கம்...

*அக்டோபர் 7- வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*

*🌷அக்டோபர் 7, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
----------------------------------------------
*1.கவியரசு முடியரசன் பிறந்த தினம்.*

*2.கவிஞர்.ஞானக்கூத்தன் பிறந்ததினம்*

*3.ரால்ப் வெச்வுட் கார்பன் பேப்பருக்கு காப்புரிமை பெற்றதினம்.*

*4.சோவியத்யூனியன் அனுப்பிய லூனா 3 நிலவின் புகைப்படங்களை எடுத்து அனுப்பிய தினம்.*
--------------------------------------------
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------

*🌷கவியரசு முடியரசன் பிறந்த தினம் இன்று.*

*கவியரசு முடியரசன் (அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர்.*

 *தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு-சீதாலக்ஷ்மி என்பார்க்கு அக்டோபர் 7, 1920இல் பிறந்தவர்.*

 *துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுப்பவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.*

 *காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.*

----------------------------------------------

*🌷ஞானக்கூத்தன் பிறந்த தினம் இன்று.*

*ஞானக்கூத்தன் (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். இவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் ஆகும். “திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைபெயராக ஞானக்கூத்தன் என்ற பெயரை ஏற்றார்.*

*இராமகிருஷ்ணன்,*
*சா. கந்தசாமி,*
*ந. கிருஷ்ணமூர்த்தி* *ஆகியோரோடு இணைந்து* *ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் 'கசடதபற'.*
*'கவனம்' என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.*
*'ழ' இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார்.*

*அவர் இயற்றிய*
*கவிதை நூல்கள்*

*அன்று வேறு கிழமை*
*சூரியனுக்குப் பின்பக்கம்*
*கடற்கரையில் சில மரங்கள்*
*மீண்டும் அவர்கள்*
*பென்சில் படங்கள்*
*ஞானக்கூத்தன் கவிதைகள்*
*என் உளம் நிற்றி நீ*
*இம்பர் உலகம்*
*கட்டுரை நூல்கள்*

*கவிதைக்காக*
*கவிதைகளுடன் ஒரு சம்வாதம்*
*பிற படைப்புகள்*
*கனவு பல காட்டல்*
*நம்மை அது தப்பாதோ?*
*சொன்னதை கேட்ட* *ஜன்னல் கதவு*
*அலைகள் இழுத்த பூமாலை*
*விருதுகள்*

*கவிஞர் ஞானக்கூத்தன் 2016 ஜூலை 27இல் தனது 77வது அகவையில் சென்னையில் காலமானார்*

----------------------------------------------


*🌷ரால்ஃப் வெச்வூட்*
*பிரதி எடுக்க உதவும் கார்பன் பேப்பருக்கு காப்புரிமை பெற்ற தினம் இன்று (1806).*

 *இங்கிலாந்தைச் சேர்ந்த ரால்ஃப் வெச்வூட், ஒரு நாள் மெல்லிய காகிதத்தைத் தட்டச்சு மையில் முழுவதுமாக நனைத்தார். அதை மை ஒட்டும் காகிதங்களுக்கு இடையில் வைத்து உலர்த்தினார். ஒரு வெள்ளைக் காகிதம், அதன் மேல் கார்பன் தாள், அதற்கு மேல் டிஷ்யூ காகிதத்தைப் பரத்தி தன்னுடைய இரும்புப் பேனா கொண்டு அழுத்தி எழுதிப் பார்த்தார். அவர் மேலே எழுதியவை காகித அடுக்கின் அடியில் இருந்த வெள்ளைக் காகிதத்தில் அப்படியே பதிந்தன. அவ்வளவுதான் கார்பன் பேப்பர் அற்புதமாகத் தயாரானது!*

*1806 அக்டோபர் 7இல் ரால்ஃப் வெச்வூட் ‘கார்பன் பேப்ப’ருக்குக் காப்புரிமை பெற்றார். பார்வை அற்றவர்களுக்கு உதவவே கார்பன் தாளை அவர் உருவாக்கினார்.*
--------------------------------------------


*🌷சோவியத் யூனியன் அனுப்பிய லூனா 3 நிலவின் புகைப்படங்களை எடுத்து அனுப்பிய தினம் இன்று (1959).*


*லூனா 3 (Luna 3 அல்லது E-2A தொடர்) நிலாவை நோக்கி ஏவப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் லூனா திட்டத்தின் மூன்றாவது விண்கலமாகும். இதற்கு முன்னர் பார்த்திடாத நிலவின் பகுதிகளைப் புகைப்படமெடுத்தது இவ்விண்கலம். இவ்விண்கலத்தின் வடிவம் நீள்வட்ட வடிவமாகும். 130 செ.மீ நீளமும் 120 செ.மீ விட்டமும் உடையது. இவ்விண்கலம் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தியதி ஏவப்பட்டது. இதன் எடை 278.5 கிலோகிராம் ஆகும். அக்டோபர் 6, 1959 அன்று நிலவுக்கு மிக அண்மையில் 6.200 கிலோமீட்டர் தொலைவில் சென்று புகைப்படம் எடுத்தது. நிலவின் மறுபுறத்தில் வடக்குத் தெற்காகப் புகைப்படமெடுத்து பூமிக்குத் திரும்பும் போது இதன் வட்டப்பாதை நிலவின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்பட்டது.*

 *அக்டோபர் 7, 1959 அன்று 40 நிமிடங்களில் 29 புகைப்படங்களை இவ்விண்கலம் எடுத்தது.*

*அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை தின நல்வாழ்த்துக்ககள்.*



ஞாயிறு, 6 அக்டோபர், 2019

*🌷இனி சத்துணவு பணியாளர்கள் சத்துணவு உண்பவர் பற்றிய விபரம் SMS ஆக அனுப்ப வேண்டும்.*

*🌷இனி சத்துணவு பணியாளர்களே தினந்தோறும்  SMS அனுப்ப வேண்டும் புதிய உத்தரவு வந்துள்ளதாக பத்திரிக்கை செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.இனி தலைமை ஆசிரியர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதிலிந்து விலக்கு.சத்துணவுப் பணியாளர் எந்த தேதியிலிந்து வட்டாரவளர்ச்சி அலுவலர்க்கு குறுஞ்செய்தி அனுப்புகிறாரோ அப்பொழுதிலிருந்து தலைமை ஆசிரியர் குறுஞ்செய்தி
அனுப்பத் தேவையில்லை.*👆